Friday, September 28, 2012

நித்தியாயிசம் .....

v
கடந்த இரண்டு பதிவுகளும் மதத்தை பற்றியதாக இருந்ததால் . கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ண வேறு ஏதாவது பதியலாம் என்று நினைத்தேன் ..நாம நினைக்கிறது எல்லாம் அப்படியே நடந்து விடுகிறதா என்ன .?


சிறு வயதில் இருந்தே நான் பலவிதமான .துக்க செய்திகள் , எதிர்பாராத மரணம் , கண் எதிரே  விபத்து , நெருக்கமான நண்பர்களின் மரணம் , என்று பல விஷயத்தை பார்த்திருக்கிறேன் . அந்த நிகழ்சிகள் என் மனதை லேசாக பாதித்தாலும் . நான் அழுதது இல்லை . என்ன யாரிடமும் பேசாமல் அமைதியாக இருப்பேனே தவிர . எவ்வளவு முயன்றாலும் அழுகை வராது . நான் நார்மலா ..? அப்நார்மலா ...? என்ற சந்தேகம் கூட எனக்கு வந்ததுண்டு ...
ஆனால் அந்த சந்தேகம் எனக்கு இப்போது தீர்ந்துவிட்டது .நான் நார்மல்தான் . என்று எனக்கு புரிய வைத்தவர் நிதியானந்தாதான் ..

எப்படி பட்டவரும் தன நெருங்கிய சொந்தத்தின் இறப்பிற்கு அழுதே ஆகவேண்டும் .அதுவும் தன் தாயோ ! தந்தையோ என்றால் சொல்லவே வேண்டாம் . சரி அழுகைதான் வரவில்லை என்றால் அதை யாரும் கொண்டாட மாட்டார்கள் .
என்று நினைத்திருந்த எனக்கு இந்த காணொளி சரியான பாடம் புகட்டி விட்டது .

நித்தியின் தந்தை மரணத்தை கட்டிபிடி டான்ஸ் உடன் எப்படி கொண்டாடுகிறார் என்று பாருங்கள் . அதுவும் ஒரு கட்டத்தில் பரவச நிலை தொடும்போது  செருப்பை அவர் தலையில் வைப்பது ஆகட்டும் .
தன காலால் இறந்த தந்தையை மிதிப்பது ஆகட்டும் . அட அட எப்பேர்பட்ட இறைபனி .


நல்ல வேளை இவர் நாம் வாழும் தகவல் தொழில்நுட்ப காலத்தில் பிறந்தார் ஒரு 1000 ஆண்டுகளுக்கு முன்னாள் பிறந்திருந்தால் .இவர் இந்நேரம் கடவுள் ஆகி இருப்பார் . அல்லது குறைந்த பட்சம் ஒரு தூதராவது ஆகி இருப்பார் . நல்ல வேளை  அப்படி மதம் உருவாகாமல் காலம் தடுத்து விட்டது .


காணொளியை இங்கு காணுங்கள் :-


ஒரு படத்தில் செந்தில் கவுண்டமணியின் தாய் இறந்த இடத்தில நின்றுகொண்டு எல்லோரையும் சிரிக்க சொல்வாரு .
ஒரு வேளை நித்தியும் கவுண்டமணி ரசிகராக இருக்குமோ .......

18 கருத்து சொல்றாங்க:

Unknown said...

நித்தியின் அப்பன் பக்கத்துவீட்டு சுந்தரிய டாவடிக்க விடலையோ என்னவோ...? என்னவோ போடா மாதவா.......!

Sivakumar said...

கவுண்டர் : 'இடுக்கண் வருங்கால் நகுக'

செந்தில்: 'எனக்கு கடுக்கணை பத்திதான் தெரியும்'.

கவுண்டர்: 'அதான் நிறைய பேர் காதுல இருந்து கழட்டிட்டு போயிருக்கியே'

வவ்வால் said...

அஞ்சா ஸிங்கம்,

எல்லாம் பகவானின் திரு(ட்டு) விளையாடல் :-))

அஞ்சா சிங்கம் said...

வீடு சுரேஸ்குமார் said...

நித்தியின் அப்பன் பக்கத்துவீட்டு சுந்தரிய டாவடிக்க விடலையோ என்னவோ...? என்னவோ போடா மாதவா.......!......
///////////////////////////////////////////////////

எந்த ஆளை பிள்ளையாக பெத்ததுக்கு இதுதான் மிச்சம் ...

அஞ்சா சிங்கம் said...

வவ்வால் said...

அஞ்சா ஸிங்கம்,

எல்லாம் பகவானின் திரு(ட்டு) விளையாடல் :-))...................../////////////////////////
///////////////////////////////////////////
விளையாடுவது மட்டும் தான் பகவான் வேலையோ ..............

திண்டுக்கல் தனபாலன் said...

கொஞ்சம் "ரிலாக்ஸ்" (?) செய்ய நடுவில் இந்த மாதிரி பதிவு தேவை தான்...

ராஜி said...

இறை நுணுக்கங்களை புரிந்துக் கொள்ளும் அளவு உமக்கு இன்னும் ஞானம் வளரவில்லை தம்பி. விரைவில் புரிந்து கொள்வாய்...

Anonymous said...

ஒரு 1000 ஆண்டுகளுக்கு முன்னாள் பிறந்திருந்தால் .இவர் இந்நேரம் கடவுள் ஆகி இருப்பார் . அல்லது குறைந்த பட்சம் ஒரு தூதராவது ஆகி இருப்பார் . நல்ல வேளை அப்படி மதம் உருவாகாமல் காலம் தடுத்து விட்டது .////இப்படியே விட்டால் ஓர் ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு நடந்தாலும் நடக்கும்.யார் கண்டது?

sathishsangkavi.blogspot.com said...

ரிலாக்ஸ் ஆக இப்படி ரெண்டு பதிவு போட்டா தப்புல்ல மச்சி..

IlayaDhasan said...

நல்லா நோண்டிப் பார்த்தா தெரியும் போல..டே அப்பா என்னை சிறுவனா இருக்கும்போது என்னாக் கொடும பண்ணுன , உன் சாவ நான் சந்தோசமா கொண்டாடப் போறேன்னு மனசுல வஞ்சம் வச்சு கொண்டாடி இருக்காரு போல!

Thozhirkalam Channel said...

இப்படிப்பட்ட ஏமாற்றும் ஆட்கள் இருக்கும்
வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்

நாய் நக்ஸ் said...

enna kodumai sir ithu..???

guna said...

muslim condelence house same reaction sir.

Philosophy Prabhakaran said...

என்னது நித்யானந்தா இவ்வளவு மோசமானவரா..? ஆங், அப்படின்னா நானும் கண்ணடிச்சிக்குறேன்...

சரி அத வுடு நைனா, நீ இன்னா எப்ப பார்த்தாலும் அந்த புள்ள இந்துமதியையே டாவடிச்சுனுகீற... ஏம்பா அந்த ரசியா பானு, எஸ்தர் மேரியெல்லாம் சோக்காதான கீராளுங்க... பதில் சொல்லு நைனா...

செல்வின், உலகில் உள்ள நாலாயிரத்து சொச்சம் மதங்களையும் கிழித்து தொங்கப் போட்டுவிட்டு கட்டக்கடைசியா இந்துமதத்தையும் போனா போகட்டும்ன்னு கண்டிக்கிறா மாதிரி கண்ணடிச்சா தான் உங்களுக்கு நட்டநடு சென்டர் அக்மார்க் ஐ.எஸ்.ஐ பகுத்தறிவாளர் என்ற பட்டத்தை கொடுப்போம்...

அப்புறம் முக்கியமான விஷயம் தம்பி, நீங்க வேணும்'ன்னா காண்டமை மாத்திக்கலாம் ஆனா சாமானை மாத்த முடியாது...!

சீனு said...

இவனெல்லாம் ஒரு மனுசனா... பிக்காளிப் பய

குட்டன்ஜி said...

அவர் முற்றும் திறந்தவர்,ச்சீ,துறந்தவர்!

Jayadev Das said...

\\நல்ல வேளை இவர் நாம் வாழும் தகவல் தொழில்நுட்ப காலத்தில் பிறந்தார் ஒரு 1000 ஆண்டுகளுக்கு முன்னாள் பிறந்திருந்தால் .இவர் இந்நேரம் கடவுள் ஆகி இருப்பார் . \\இந்த தொழில் நுட்ப காலமானாலும் அதைப் பயன்படுத்தி சிக்க வைத்தார்களே அவர்களால் தான் மக்கள் தப்பித்தார்கள். அப்படி சிக்காமல் இன்னமும் உலாத்திக் கொண்டுருக்கும் பொ.போக்குகள் நிறையவே இருக்கிறார்களே........... [இந்த வீடியோக்கள் பார்க்க சகிக்கவில்லை சிங்கம்].

கலாகுமரன் said...

குத்தாட்ட குழு தயாரா? யாரங்கே முழக்குங்கள் தாரை தப்பட்டையை...

Popular Posts