Thursday, October 31, 2013

ஆரம்பம் -விமர்சனம்

v

தலைக்கு இன்னும்  மங்காத்தா ஜுரம் முழுமையாக விடவில்லை போலும் .
 என்னதான் சொன்னாலும் அஜித்துக்கு இருக்கும் ஓபனிங் அசைக்கமுடியாது என்று தான் தோன்றுகிறது .
இந்து நாளிதழில் இதுவரை வந்த அஜித்தின் திரைப்படங்களின் வசூல் சாதனையை ஆரம்பம் முறியடிக்கும் என்று போட்டிருந்தார்கள் .அது உண்மையாக கூடிய சாத்தியம் இருக்கிறது .

படத்தின் ஆரம்பமே அதிரடியாக ஆரம்பிக்கிறது . மும்பையில் சில இடங்களில் வெடிகுண்டுகள் வெடிக்கிறது . அதை செட் செய்வது அஜித். அதன் பிறகு அப்பாவியான ஆர்யாவை கடத்துகிறார். நயன்தாராவை மிரட்டி ஆரியாவை பணிய வைக்கிறார். இது எல்லாம் மங்காத்தா தனமாக இருக்கிறதே என்று யோசித்து கொண்டிருக்கும் பொது இடைவேளை வந்துவிடுகிறது . இடைவேளையின் பொது சொல்கிறார் இது முடிவு இல்லைடா ஆரம்பம் என்று .

உண்மைதான் இடைவேளைக்கு பிறகு கதை வேறு திசையில் பயணிக்கிறது . சாரி பறக்கிறது . ஆயுத பெற ஊழல் , ஹோம் மினிஸ்டர் மற்றும் உயர் அதிகாரிகளின் ஊழல் இதனால் உயிரை இழக்கும் நண்பனின் குடும்பம். பழி வாங்க புறப்படும் ஹீரோ என்று ஒரு தமிழ் படத்திற்கு தேவையான அத்தனை வஸ்துக்களையும் அளவு மீறாமல் சரியாக கலந்து குடுத்திருக்கிறார் இயக்குனர் விஷ்ணுவர்தன் .

பில்லாவிற்கு பிறகு இருவரும் இணையும் கதை என்பதால் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை இந்த படம் ஏற்படுத்தி இருக்கிறது .துணை நாயகனாக ஆரியா நடித்துள்ளார் அவருக்கு ஜோடியாக தாப்சி . ரானா ,கிஷோர் ,அதுல் குல்கர்னி, மகேஷ் மஞ்ச்ரேகர் , சுதா ரகுநாத் . என்று மிக பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

ஆனால் அனைவரையும் அசால்டாக ஓரம் கட்டி விடுகிறார் அஜித்குமார் . இவரை எப்படி காட்டினால் ரசிகர்கள் கைதட்டுவார்கள் என்று நன்றாக புரிந்து வைத்திருக்கிறார் இயக்குனர் . பத்து நிமிடத்திற்கு ஒருமுறை ஸ்லோ மோஷனில்  நடக்கவிட்டு கைதட்டுகளை அள்ளுகிறார் .

ஆர்யாவின் அறிமுகம்  மற்றும் பிளாஷ்பேக் காட்சிகள் லேசாக கொட்டாய் விட வைத்தாலும்  பிறகு வேகம் எடுத்து விடுகிறது . படத்தின் இசை யுவன் ஷங்கர்ராஜா பில்லா அளவிற்கு இல்லை என்றாலும் பாடல்கள் நன்றாகவே உள்ளது அதை படமாக்கிய விதமும் கலர்புல் .

டாப்சி குறைந்த மூளை கொண்ட தமிழ் கதாநாயகிகளின் இலக்கணத்திற்கு  கச்சிதமாக பொருந்துகிறார். நயன்தாரா இன்னும் அண்ணி வேடங்களில் நடிக்காமல் தன்னை கதாநாயகியாக தக்க வைத்து கொண்டிருப்பது மிக பெரிய சாதனை. அஜித்திற்கு ஈடு குடுத்து காட்சிகளில் தனித்து தெரிய வேண்டும் என்றால். மிக பெரிய அனுபவம் பயிற்சி தேவை நயனுக்கு அனுபவம் கைகுடுக்கிறது .

 படத்தில் வண்டி வண்டியாக லாஜிக் மிஸ்டேக் இருக்கிறது . சர்வர் ஹேகிங் என்பது என்னவோ கடலை மிட்டாய் வாங்குவது போல் சுலபமானது என்று நினைத்துவிட்டார்கள் போல . பத்து நிமிடத்தில் சாட்டிலைட்டின் அப்ளின்கை ஹேக் செய்வது எல்லாம் ரொம்ப கொடுமை . துபாய் வங்கியின் சர்வரை ஹாக் செய்ய இவர்கள் போடும் திட்டம். பாரிஸ் கார்னரில் தள்ளுவண்டிகாரனிடம் இருந்து அவனுக்கு தெரியாமல் ஒரு சாத்துக்குடி திருடுவதை விட சுலபமானது கம்பியூட்டர் ஓரளவிற்கு தெரிந்தவர்கள் சிரித்து கொள்வார்கள் . இதை எல்லாம் பெரிதாக எடுத்து கொள்ள முடியாத அளவிற்கு
 திரைகதையின் வேகம் அமைந்துவிட்டதால் படம் பார்பவர்களுக்கு உறுத்தவில்லை.

இந்த படத்திலும் அஜித் பைக் ஓட்டுகிற காட்சி ஒன்று வருகிறது நல்ல வேளையாக அதை அவர் ஒழுங்காக ரோட்டில் ஓட்டுகிறார் . வெறும் பைக்கை காட்டினாலே போதும் ரசிகர்களின் விசில் ஆர்பாட்டம் விண்ணை பிளக்கிறது .
இந்த தீபாவளிக்கு தல ரசிகர்களுக்கு பிரியாணி விருந்து படைத்துள்ளார் .

Monday, October 21, 2013

குறும்பட குஸ்கா

v

மிக சமீபகாலமாக நிறைய பேர்களுக்கு குறும்படம் எடுக்கும் ஆசை தலைவிரித்து ஆடிகொண்டிருக்கிறது  (என்னையும் சேர்த்துதான்).
அதற்க்கு தேவையான பொருள்கள் என்னவென்றால். ஒரு டிஜிட்டல் கேமரா,சுமார்மூஞ்சி குமார் மாதிரி நான்கு நண்பர்கள்,கொஞ்சம் பணம் அவ்ளோதான். இப்படிதான் நிறைய பேர்கள் நினைத்து கொண்டிருக்கிறார்கள்.

சரி நான் விஷயத்திற்கு வருகிறேன் நேற்று நண்பர் சுரேஷ் அவர்களின் அழைப்பின் பேரில் நண்பர்  நிஷான்னின் குறும்பட வெளியீட்டிற்கு நான் ஆரூர்மூனா செந்தில் ,மற்றும் சில நண்பர்களுடன் ஏ.வி.எம்.ப்ரிவிவ் தியேட்டருக்கு சென்றிருந்தோம்.

படத்தின் பெயர் ஓட்டம் நண்பர் நிஷான் இயக்கி இருக்கிறார். இது அவருக்கு முதல் படம் என்று நினைக்கிறேன். சுமார் இருபது நிமிடம் ஓடக்கூடிய அந்த குறும்படத்திற்கு விமர்சனம் எல்லாம் தேவையா .? இது கொஞ்சம் ஓவர் என்றுதான் நினைத்தேன் என்றாலும் குறும்படங்களை பற்றிய என்னுடைய புரிதலை பகிர்ந்துகொள்ள ஆசை படுகிறேன்.

குறும்படத்திற்கு கதை என்கிற வஸ்த்து இருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. மெசேஜ் சொல்ல வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. ஒரு சிறு சம்பவத்தை எப்படி சுவாரசியமாக சொல்கிறோம் என்பதில்தான் அதன் வெற்றி அடங்கி இருக்கிறது. காட்சிபடுத்துவதில் உள்ள வித்தியாசம் உங்களை கவனிக்க வைக்க வேண்டும் . பெரும்பாலும் குறும்படம் எடுப்பவர்கள். அதை தனது விசிட்டிங் கார்டாக பயன்படுத்தி சினிமாவிற்க்காண தங்கள் முயற்சியை எடுப்பார்கள். அப்படி என்றால் அதன் முக்கியத்துவம் எத்தகையதாக இருக்க வேண்டும்?

வெறும் பத்து அல்லது பதினைந்து நிமிடங்களில் சொல்ல வந்ததை தெளிவாகவும் சுவாரசியமாகவும் சொல்ல வேண்டும். கொஞ்சம் சொதப்பினாலும் படம் பார்ப்பவர்கள் "சரி அதுக்கு என்ன இப்போ" என்கிற மாதிரி முகத்தை திருப்பி கொள்வார்கள்.

ஓட்டம் படத்தில் புதுமையாக எந்த கதாபாத்திரமும் சித்தரிக்க படவில்லை.
நாலு நண்பர்கள் அதே டாஸ்மாக். தேவை இல்லாமல் ஒரு லவ்வு . சரி என்னதான் செய்யபோகிறார்கள் என்கிற எதிபார்ப்பு படம் முடியும் வரை யாருக்கும் வரவில்லை. ஒரு முழுநீள திரை படத்தில் லாஜிக் பிழைகள் வரலாம் அது கூட ஓரளவிற்கு ஏற்று கொள்ளலாம். ஆனால் வெறும் பதினைந்து நிமிடம் ஓடக்கூடிய குறும்படத்தில் இத்தகைய லாஜிக் பிழைகள் ஏற்று கொள்ள முடியாதது .

சரி பாத்திரபடைப்பிலாவது ஏதாவது புதுமையாக சிந்தித்து இருக்கலாம். 90களில். வந்த  உதயம், சத்யா, போன்ற படங்களில் வந்த அதேபோன்ற வில்லன். போலிஸ் அதிகாரியாக ஒரு கதாபாத்திரம் வருகிறது அது அபத்தத்தின் உச்சம். அவர் சிவாஜியை மனதில் வைத்து கொண்டே நடித்திருப்பார் போலும். குறும்பட நடிப்பு என்பது எதார்த்தர்க்கு  மிக நெருக்கமாக இருக்க வேண்டும். ஒரு டோஸ் அதிகம் ஆனாலும் பார்க்க சகிக்காது. ஒவ்வொரு நிமிடமும் முக்கியம் என்பதால் தேவையற்ற காட்சிகள் அறவே இருக்க கூடாது.

அடுத்ததாக வசனம் எவ்வளவு குறைவாக இருக்கிறதோ அவ்வளவு பவர்புல்லாக அந்த காட்சி இருக்கும். வழ வழ வசனங்கள் நிச்சியம் படத்திற்கு  மைனஸ்தான். நகைச்சுவையை காட்சியாக சித்தரிப்பது என்பது வேறு. அதை சொல்வது என்பது வேறு. நகைச்சுவையை காட்சியாக சித்தரிக்கும் போது அதில் இயக்குனரின் திறமை மட்டுமே முக்கியம். வசனத்தின் மூலம் அதை காட்சி படுத்தினால் அதில் நடிகர்களின் பங்களிப்பு மிக முக்கியம். குறும்படங்களுக்கு வசனம் குறைவு என்பதால் முடிந்த வரை குறியீடாகவே அதை பயன்படுத்துவார்கள். கதாபாத்திரங்கள் நம்மை சிரிக்க வைக்க முயற்சி செய்து அதில் தோல்வியை தழுவுவது நமக்கு பரிதாப உணர்ச்சியை ஏற்படுத்துகிறது.
மொத்தத்தில் ஓட்டம் பீஸ் இல்லாத பிரியாணி. 

நண்பருக்கு நல்ல படம் எடுக்கும் ஆர்வமும் திறமையும் இருக்கிறது. இது அவரது முதல் படம் என்பதால் பிழைகளை அதிகம் சுட்டிக்காட்ட மனம் வரவில்லை.  தவறுகளில் இருந்து பாடம் கற்று அடுத்தமுறை தவறுகள் இல்லாத சிறந்த படம் எடுப்பார் என்று நம்புகிறேன் வாழ்த்துக்கள்.

படத்தின் டீசரை இங்கே பார்க்கவும் .





       
     

            

Saturday, August 17, 2013

வச்சா வெடிக்கும்

v
அனுப்புனர் :-
                         புரட்சிகரமாக குழம்பிபோனவர்கள் இயக்கம்
                         இடம் பரமரகசியம் .

பெறுனர்    :-
                         கேபிள் சங்கர்
                         தொட்டால் தொடரும் பட இயக்குனர் .


திரு கேபிள் சங்கர்  என்னும் திரை பட இயக்குனருக்கு எங்களது படு பயங்கரமான மிரட்டல் கடிதம் . நீங்கள் எடுக்கும் தொட்டால் தொடரும் திரைப்படத்தில் ஏதாவது  ஒரு காட்சியில் யாரயாவது  புண்படுத்துவது போல் வசனம் இருக்கும் என்று உறுதியாக நம்புகிறோம் .

அதுமட்டும் அல்லாமல் இதில் நடிக்கும் நாயகன் நாயகி இந்த படத்தில் செல்போன் அதிகமாக உபயோகிப்பதை போல் காட்சி இருப்பதாக கேள்வி படுகிறோம். இது எங்கள்  புரட்சிகரமாக குழம்பிபோனவர்கள் இயக்கத்தின் விடிவெள்ளி நாய் நக்ஸ் நக்கீரனை கேவலபடுத்துவதாக எண்ணுகிறோம்.

மற்றும் நீங்கள் கருப்பு கலர் கேமரா உபயோகித்து படம் எடுக்க திட்டமிட்டுள்ளாதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வந்தவண்ணம் உள்ளது. இது எங்கள் இயக்கத்தின் தளபதி சிவாவிற்கு பிடிக்காத நிறம் அதனால் நீங்கள் கேமரா இல்லாமல் படபிடிப்பு நடத்திக்கொள்ளவும் ........
மேலும் உங்கள் பெயர் கேபிள் சங்கர் என்று இருப்பது எங்களுக்கு ஆட்டோ சங்கரை நினவு படுத்துகிறது . இதனால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறார் வீடு சுரேஷ் குமார்



படபிடிப்பிற்க்கு எங்கள் இயக்கத்தின் சார்பில் ஒருவர் (ஆரூர் மூனா செந்தில்)இடம் பெற வேண்டும். அவர் உங்கள் படபிடிப்பை தொடர்ந்து கண்காணிப்பார்.அவருக்கு போண்டா டீ போன்றவை நீங்கள் கேட்க்கும் போதெல்லாம் தரவேண்டும். அவர் ஆட்சேபம் தெரிவிக்கும் உணவு பொருள்களை நீங்கள் அவருக்கு தரக்கூடாது .படம் வெளியாகும் முன்பு எங்கள் இயக்கத்திற்கு அதை திரையிட்டு காட்ட வேண்டும். கொக்ககோலா மற்றும் பாப்கார்ன் கண்டிப்பாக அதில் இடம் பெற வேண்டும்.
 
இதை எல்லாம் மீறி நீங்கள் படபிடிப்பு நடத்தி படத்தை வெளியிடலாம் என்று முடிவு செய்தால் . படம் வெளியாகும் திரை அரங்குகளை குண்டு வைத்து தகர்ப்போம் . குறுக்கு வழியாக சிந்தித்து  தொலைகாட்சியில் வெளியிடலாம் என்று நீங்கள் மனப்பால் குடித்தால் டி.வி.பெட்டிக்கும் குண்டு வைப்போம் என்பதை தெரிவித்து கொள்கிறோம்.


                                                                                  இப்படிக்கு
   
                                       புரட்சிகரமாக குழம்பிபோனவர்கள் இயக்கம்
                                                                     இடம் பரமரகசியம் .


Wednesday, July 24, 2013

கன்னி கணணி அனுபவம்

v
என் முதல் கணணி அனுபவம் என்கிற பெயரில் பலரும் எழுதி தள்ளுகிறார்கள்.சரி நம்மளையும் எழுத ஏதாவது ஒரு பக்கி கூப்பிடும் அப்போ எழுதலாம் என்று இருந்தேன். ஹம் ஹம் ......ஒரு பய சீண்டலையே ..

அதுக்காக அப்படியே விட்டிட முடியுமா . இதோ என் முதல் கணணி அனுபவம்.

+1னில் வேறு வழி இல்லாமல் எனக்கு ஒதுக்க பட்ட பாடம் கம்பியுட்டர் சயின்ஸ். வெந்ததை தின்னுட்டு விதியேன்னு கிளாசுக்கு போய் கிட்டு இருந்தேன் . கொஞ்சம் கூட என்னை அந்த பாடம் ஈர்க்கவில்ல . ப்ரேக்டிகள் கிளாசுக்கு எங்கள் வகுப்பறையில் இருந்து லேபிற்கு வருசையாக அழைத்து செல்வார்கள் .அப்போது அந்த வரிசையில் இருந்து சில கருப்பு ஆடுகள் தனியாக பிரிந்து வேறு ஒரு பாதையில் போய் கொண்டு இருக்கும். அந்த கருப்பு ஆடுகளில் முதன்மையான ஆடு நான் தான் என்று சொல்லித்தான் தெரிய வேண்டுமா என்ன .?

பின்பு கல்லூரியில் நான் எடுத்தது எலக்ட்ரானிக்ஸ் & கம்யுனிகேஷன் . இதில் மைக்ரோ பிராசசர் என்று ஒரு பாடம்  வரும். நான் ஹாஸ்டலில் தங்கி படித்ததால் அப்போது வீட்டு நியாபகம் அடிகடி வரும் . குறிப்பாக இந்த பீரியடில் நான் காலச்சக்கரத்தில் பின்னோக்கி நகர்த்தப்பட்டு தொட்டிலில் படுத்துஇருப்பதாகவும்என் தாய் தாலாட்டு பாடுவதை போலவும் இருக்கும்.
 இப்போது கூட சரியாக தூக்கம் வராத வேளைகளில்  சாரதா மேடம் பாடம் நடத்துவதாக கற்பனை செய்துகொண்டால் பொதும் .

கல்லூரி ப்ரோஜக்ட் எடுத்த பொது என் நண்பர்கள் கம்ப்யுடர்  செய்யலாம்  என்ற யோசனையை கொலை வெறியுடன் எதிர்த்து வாதாடி டி.வி.ட்ரான்ஸ் மீட்டர் & ரிசிவர் செய்ய வைத்த புண்ணியம் என்னையே சாரும் .

இப்படியாக சென்று கொண்டிருந்த என் வாழ்க்கையில் திடீர் என்று டார்ச் அடித்தது என் நண்பன் பெரோஸ் கான் . புதுசா பிரவ்சிங் செண்டர் போட்டிருக்காங்க வா போயி பார்க்கலாம் என்று கூட்டி போனான் .
அங்க பார்த்தா பசங்களை விட பொண்ணுங்க எண்ணிக்கை அதிகமாக இருந்தது . பெரோஸ் சொன்னான் மாப்பிள டெய்லி டியுஷன் போற மாதிரி இங்க ஒரு மணி நேரம் வந்துட்டு போகலாம்ன்னு சொன்னான் .பட் அந்த டீலிங் எனக்கு பிடிச்சிருந்தது ஒத்துகிட்டேன் .

ஆரம்பத்தில் ஒன்னுமே புரியல எந்த சைட்டிற்கு போனாலும் மெயில் ஐடி கேக்குது .அப்போ கடை ஓனர் எனக்கு ஒரு யாஹு மெயில் ஐ.டி. உருவாக்கி தந்தார் . தினமும் வந்து மெயில் செக் வேறு பண்ணுவேன் . ஒரு மெயிலும் வந்திருக்காது . கடுப்புல கடைகாரரிடம் இந்த இளநியில தண்ணி வரல மாதிரி எனக்கு எந்த மெயிலும்வர மாட்டுது என்று கம்ப்ளைன்ட் வேறு பண்ணினேன்னா பார்த்துக்கங்க .

நாளையில்  இருந்து உனக்கு நிறைய மெயில் வர மாதிரி பண்றேன் என்று சொன்னவர். அதே போல் செஞ்சிட்டார் . ஒரு நாளைக்கு குறைந்தது 200 மெயிலாவது வரும். அதில் பெரும்பாலானது கேப்டன் டி.வி. மற்றும் வசந்த் டி.வி. யில் ஒளிபரப்ப படும் நள்ளிரவு சமாச்சாரங்கள்தான் ....

சரி இப்போது நாம் அடுத்த கட்டத்திற்கு முன்னேற வேண்டிய நேரம்வந்துவிட்டதாக உள் உணர்வு சொல்லவே. அப்பா கையில் காலில் விழுந்து ஒரு கம்பியுடர் வாங்கினேன் . முதல் வேலையாக அதை பிரித்து போட்டேன்.கொஞ்சம் கூட பயப்படலையே .. அக்குவேறாக ஆணி வேறாக பிரிச்சி மேஞ்சு இது எப்படி வேலை செய்கிறது என்பதை தெரிந்து கொண்டேன்.

நான் படித்தது எலெக்ட்ரானிக்ஸ் என்பதால் இது சுலபமானதாகவும் எனக்கு ஏற்ற வேலையாகவும் தெரிந்தது .
அப்போ ஆரம்பிச்சது இப்போ அதுவே என் தொழிலாக மாறிவிட்டது எங்க  ஏரியாவில் முதன் முதலில் கம்ப்யுடர் சேல்ஸ்&சர்விஸ் செண்டர் ஆரம்பித்தது நான் தான் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
    
இந்த ஆண்டு புதிதாக திறந்த என் அலுவலகத்திற்கு லோகோ டிசைன் செய்து குடுத்தது அருமை நண்பர் வீடு சுரேஷுகுமார் ...........

Friday, July 19, 2013

மரியான்

v

1980 முதல் 90 வரை காதலுக்கு இருக்குற பவரை பத்தி ஏகப்பட்ட படங்கள் வந்திருக்கு. குறைந்த பட்சம் 300 மெகாவாட் மின்சாரமாவது காதலை வைத்து எடுக்க முடியும். கூடங்குளம் இல்லை என்றால் என்ன நம்ம கிட்ட காதல் இருக்கு என்று அப்போதைய இளைஞ்சர்கள் நம்பவைக்க பட்ட காலம் .
இதில் நாக்கை அறுத்த காதல், மூக்கை அறுத்த காதல் , என்று பல வெரைட்டிகள் வேறு உண்டு .

இப்படி அப்பாவி தனமாக போய் கொண்டிருந்த சினிமா கி.பி.2000 ஆண்டுக்கு பின்னால் காசு ,பணம் , துட்டு ,மணி,மணி, என்று தன்னை புதிப்பித்து கொண்டு வேறு கோணத்தில் பயணிக்க தொடங்கியது .
ரோஜா என்று ஒருபடம் வந்து மணிரத்தினத்தை உச்சத்திற்கு கொண்டு போனதே நினைவு  இருக்கிறதா ? அதே படத்திற்கு கொஞ்சம் ஸ்ப்ரே அடித்து பவ்டர் போட்டு அலங்காரம் பண்ணி வேறு ஒரு பெயர் வத்து உங்க கிட்ட காசை வாங்கி உங்க டேபளில் பரிமாறி இருக்கிறார்கள் .

தனுஷ் :- குறை சொல்ல முடியாத நல்ல நடிகன் சொன்னதை எல்லாம் சிறப்பா செய்கிறார் . இந்த படத்திற்கும் கடுமையாக உழைத்து வேறு இருக்கிறார் பாவம் .
எவ்ளவோ விஷயங்கள் சொல்ல கூடிய சாத்தியம் இருந்தும்.அது மீனவர்கள் வாழ்வாதார பிரச்சனையாக இருக்கட்டும் . அல்லது ஆப்ரிக்க எண்ணெய் சுரண்டல் பிரச்சனையாக இருக்கட்டும். சாத்தியம் இருக்கும் கலத்தை எல்லாம் வீனடித்திருக்கிரார்கள்.

ஒரு பாரதிராஜா படத்தை மணிரத்தினம் டைரெக்ட் செய்த மாதிரி ஒரு எபெக்ட் கடற்கரையை காட்டி காதலர்களை லாங் ஷாட்டில் கொண்டுபோகும் போது ..........ஏ பிலிம் பை பாரதிராஜா என்று போடுவார்களோ என்று எதிர் பார்த்தேன் ஆனால் ஏ பிலிம் பை பரத்பாலா  என்று போட்டு முடித்து விட்டார்கள் .

இந்த படத்தின் மூலம் சமுதாயத்திற்கு அவர்கள் சொல்லும் ஒரே ஒரு விஷயம் என்ன வென்றால் யாரையாவது காதலிச்சி தொலைங்க உங்களால் சோறு தண்ணி இல்லாமல் ஒரு 30 நாள் உயிரோடு இருக்க முடியும் .



Sunday, January 27, 2013

விசுவாசரூபம்-ஒரு புதிய கதை

v




விஸ்வரூபம் பெயரே வில்லங்கமாக இருக்கு இதற்க்கு ஏகப்பட்ட எதிர்ப்பு வேறு கிளம்பி இருக்கு . அதனால் இந்த படத்தை நான் இயக்கிஇருந்தால் எப்படி இயக்கி இருப்பேன் என்று சொல்கிறேன்.

சிபி. கோவித்து கொள்ள மாட்டார் ஏனென்றால் இது அவர் டிப்பார்ட்மண்ட்.
எதிர்ப்பு இல்லாமல் படம் ஆக்குவது எப்படி .
கமல் அமெரிக்காவில் இருக்கும் ஒரு கதக் ஆசிரியர் அவர் மனைவி அவரிடம் இருந்து விவாகரத்து வாங்க முயற்சிக்கிறார் . அதற்க்கு அவரிடம் ஏதாவது குறை கண்டுபிடிக்க ஒரு துப்பறியும் சாம்புவை நியமிக்கிறார் .இது வரை எந்த மாற்றமும் இல்லை கதை ஆப்கானிஸ்தான் போனபின் மக்கள் எதிர்பார்க்காத திருப்பங்களை வைக்க வேண்டும் .

முதலில் கமல் ஒரு தாலிபான் இயக்க தியாகியாக காட்டவேண்டும் அவர் மீண்டும் வந்து தாலிபானில் இணையும் பொது அங்கு சூழ்நிலை சரி இல்லாததை உணர்கிறார். அவருக்கு அந்த இயக்கத்தின் மீது லேசாக சந்தேகம் வருகிறது . முல்லா ஓமர் வேறு நன்றாக தமிழ் பேசுவது இவரின் சந்தேகத்தை அதிக படுத்துகிறது . இதற்க்கு முன் பார்த்த ஒமருக்கு கன்னத்தில் மறு கிடையாது . இப்போது இருக்கும் ஒமருக்கு கன்னத்தில் மறு இருக்கிறது இவர் உண்மயிலேயே ஓமர்தானா .? சில பல துப்பறியும் வேலைகளுக்கு பின் . ஜிகாதிகள் கையில் வைத்திருப்பது குரான் அல்ல . அது யூதர்களின் தோரா என்றும் அட்டையை மட்டும் குரான் என்று பைண்டிங் செய்திருக்கிறார்கள் என்று கண்டு பிடிக்கிறார் . அதை படித்துவிட்டுதான் இவர்கள் எல்லார் கழுத்தையும் அறுக்கிறார்கள் என்று புரிகிறது . இது கமலின் சந்தேகத்தை அதிக படுத்துகிறது .

ஆப்கானிஸ்தானில் ஏதற்கு புத்தர் சிலை அதை உடைத்து விடலாமே என்று கமல் கேட்க  அதற்க்கு ஓமர் மறுப்பது கமலின் சந்தேகத்தை மேலும் ஊர்ஜித படுத்த அடுத்தகட்ட துப்பறியும் வேலையில் இறங்குகிறார் நம்மவர் .

பல ஆபத்துகளை கடந்து ஆப்கன் மலைகளுக்கு நடுவில் ஒரு பாதாள சுரங்கத்தில் நிறைய டயர்கள் மற்றும் ட்ரம்முகள் அடிக்கி வைக்க பட்டிருக்கும் ஒரு இடத்தில் சிகப்பு மற்றும் பச்சை விளக்குகள் எரியும் பின்னணியில் உண்மையான ஓமர் பல ஆண்டுகளாக கட்டி வைக்க பட்டிருக்கிறார் .
அப்படியென்றால் இப்போது இருப்பவர் உண்மையில் இந்து முன்னணி தலைவர் ராமகோபாலனின் சித்தப்பா மகன் இலட்சுமண கோபாலன்  என்ற உண்மை தெரிய வருகிறது. வில்லன்கள் கடைசியில் கமலையும் அண்ட்ரியாவையும் அதே குகையில் கடத்தி கொண்டு போயி கட்டிவைத்து அடிக்கிறார்கள் .
 ஏற்கனவே நிறைய தமிழ் படம் பார்த்திருக்கும் ஆண்ட்ரியா . இதுவரை ஒரு தமிழ்படம் கூட பார்த்திராத வில்லன்களிடம் நீங்க ஆம்பிளையா இருந்தா அவர் கட்ட அவிழ்த்து விட்டு அடிங்கடா பார்ப்போம் என்று சவால் விடுகிறார்.
இதில் மறைந்திருக்கும் சூழ்ச்சி தெரியாமல் வில்லன்கள் கமலின் கட்டை அவிழ்த்து விட்டு வாங்கி கட்டி கொள்கிறார்கள் .






 
ஒரு வழியாக போலி ஓமரை அழித்துவிட்டு உண்மையான ஓமரை தாலிபான் இயக்க தலைவராக ஆக்கிவிட்டு . புத்தர் சிலையை இடிக்க வைத்து விட்டு அங்கிருந்து கிளம்புகிறார் கமல் -----------------------சுபம்

இருங்க ரெண்டாவது பாகத்திற்கு லீட் குடுக்கணும் இல்லையா அதையும் கேட்டுட்டு போங்க . அமெரிக்க அதிபர் உண்மையான ஒபாமா கிடயாது.
அங்கு இருப்பவர் சிவ ராமசேனா தலைவர் முத்தலிக்கின் மூன்றாவது தம்பி இந்த விவரம் கமலுக்கு தெரியவர  அமெரிக்கா கிளம்புகிறார் .----------- விசுவாசரூபம் -2

டிஸ்க்கி :-
                    இந்த படத்திற்கு இந்து அமைப்புகளிடம் இருந்து எதிர்ப்பு வரலாம் ஆனால் மக்கள் ஆதரவோ அரசாங்கத்தின் ஆதரவோ கிடைக்காது என்பதால் கவலை படவேண்டிய அவசியம் இல்லை. இந்துக்களுக்கு அவர்கள் கடவுள் மேல் நம்பிக்கை அதிகம்  நீங்க எவ்ளோ கிண்டல் பண்ணினாலும் எங்க கடவுளுக்கு ஒன்னும் ஆகாது என்ற நம்பிக்கை. சோ பிரெச்சனை இல்லை 

Sunday, January 20, 2013

சின்மயி விவகாரம் -புத்தக விமர்சனம்

v

இந்த புத்தகத்தை கண்டிப்பாக வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தேன் .
சென்ற வாரம் கண்காட்சிக்கு செண்டிருந்த போது இன்னும் இந்த புத்தகம் கடைக்கு வரவில்லை என்றதும் மிகுந்த ஏமாற்றம் அடிந்திருந்தேன் .
ஆனால் நேற்று இது கிழக்கு பதிப்பகத்தில் பார்த்ததும் வாங்கிவிட்டேன் .

ஆசிரியர் விமலாதித்த மாமல்லன் வயது 52 என்று சொல்கிறார் ஆனால் அவர் எழுத்தை பார்த்தால் மிகவும் இளமையாக இருக்கிறது .
கொஞ்சம் கூட தயவு தாட்சண்யம் பாராமல் இந்த விவகாரத்தை மிக நேர்மையாக அலசியிருக்கிறார் .
சின்மயி அவர் தாயார் மட்டும் அல்ல எழுத்தாளர்கள் ஷோபா ஷக்தி ,அசோகமித்திரன் ,சாருநிவேதா ஜெயமோகன்,என்று அனைவர் நெற்றியிலும் ஆணி அடிக்கிறார்.
அதுவும் இவர் சாருவை காய்ச்சி எடுக்கும்போது நம் மனசுக்குள் ஒரு உற்சாக பட்டாசு வெடிக்கிறது.இந்த விவகாரத்தில் மறைந்து இருக்கும் நுண்ணரசியல் மற்றும் மேட்டு குடி  மனப்பான்மை.எப்படி இவர்களுக்காக சட்டம் வளைந்து குடுத்து ஆலோசனையும் சொல்கிறது .சின்மயி மற்றும் அவர் தாயின் மனநிலையை உளவியல் பூர்வமாக மிக விரிவாக விவரிக்கிறார்.

சின்மயி செய்தது  வினை . ராஜன் செய்தது எதிர்வினை  எதிர்வினைக்கு மட்டும் தண்டனையா ? இதில் ஒரே ஒரு ட்விட்க்காக மாட்டிகொண்ட சரவணபெருமாள் மற்றும் அழிக்கபட்ட ட்விட்கள் என்று எல்லாவற்றையும் ஆதார பூர்வமாக அடுக்குகிறார்.
சின்மயியின் தாயாரின் ரெட்டை வேடம்  பல இடத்தில்  ஆதார பூர்வமாக கலைக்க படுகிறது . வவ்வால் ஏற்க்கனவே அவர் பதிவில் சுட்டிக்காட்டி இருந்தார். இசையும் வசையும் -1  இசையும் வசையும்-2 
ஒரு பிராமினான இவரே பார்ப்பனர்களை கடுமையாக விமர்சிக்கிறார்.
இது விற்றாலும் விற்காவிட்டாலும் கவலை இல்லை இதை புத்தகமாக கொண்டுவந்து தமிழக முதல்வருக்கும் . போலீஸ் கமிஷ்னருக்கும் ஒன்று அனுப்பிவைப்பேன் அப்போதுதான் இந்த குடும்பத்திடம் இருந்து தமிழ்நாட்டில் பல குடும்பங்கள் தப்பிக்கும் இது என் சமுதாய கடமை என்று சொல்கிறார் .

இதில் நமக்கு நன்கு அறிமுகமான பலர் வருகிறார்கள்.சி.பி.செந்தில்குமார் யுவகிருஷ்ணா ,அதிஷா (புத்தகத்தில் கூட இந்த பெயர்கள் இணைபிரியாமல்   வருகிறது) வால்பையன் என்று .
சின்மயி ஆதரவாளரான மாயவரத்தான் செய்கை எல்லாவற்றியும் ஸ்க்ரீன் ஷாட்டுடன் அம்பலபடுத்துகிறது இந்த புத்தகம். மாயவரத்தானை சின்மயி வளர்க்கும் நாய் குட்டியுடன் ஒப்பிட்டு ஒரு படம் இருக்கிறது பாருங்கள்.
எப்படித்தான் யோசிக்கிறார்களோ குபுக் சிரிப்பை வரவழைத்தது .  

யாருக்கு தேவையோ இல்லையோ பதிவர்களுக்கு கண்டிப்பாக இந்த புத்தகம் அவசியத்தேவை. சில ஜாதிவெறியர்கள்களிடம் எச்சரிக்கையுடன் உறையாட வேண்டிய அவசியத்தை நமக்கு உணர்த்துகிறது .
இப்போது புதிது புதிதாக வன்னிய மைந்தன் , தேவேந்திர திலகன் , என்று கிளம்பி இருக்கிறார்கள். இவர்களின் ப்ரெண்ட் ரிக்குவெஸ்ட்களை எப்போதும் நான் ஏற்று கொள்வதில்லை. புறக்கணிப்புதான் நல்லது.

ஆக மொத்தம் இணையத்தில் இயங்கும் அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம். சும்மா ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரவுண்டு கட்டி அடித்திருக்கிறார் .
   

Thursday, January 17, 2013

காட்டுமிராண்டிகளின் தேசத்தில் ரிஸானா

v
வார்த்தைகளில் நிதானிக்க முடியாத காரணத்தால் இந்த காணொளியை பகிர்கிறேன் .
சவுதி காட்டு மிராண்டிகளால் ஆளப்படும் தேசம் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறது .
அங்கு வேலைக்கு செல்லும் அனைவரும் அவர்கள் பார்வையில் அடிமைகள்தான்.
அடிமைகளை எப்படி நடத்தவேண்டும் என்று  போதிக்க பட்டுள்ளதால். அதை அவர்கள் பெருமையாக தான்  நினைப்பார்கள் . எண்ணெய் வளம் இருக்கும் வரை இந்த ஆட்டம் தொடரும் . பிறகு நாய் படாத பாடு அவர்கள் படவேண்டி இருக்கும்..
முன்பெல்லாம் சில பெருசுகள்  சமூக குற்றம் நடக்கும்போது இவனுகளை எல்லாம் சவுதி பாணியில் தண்டனை கொடுத்தால்தான் சரி வரும் என்று சொல்ல கேட்டிருக்கிறேன். அரசியல் சார் குற்றங்கள் வெளிவரும்போது ராணுவ ஆட்சி வந்தால்தான் சரிப்படும் என்று சொல்வதையும் நாம் கேட்டிருப்போம் இவை இரண்டும் எவ்வளவு முட்டாள்தனமானது என்று பாக்கிஸ்தானும் சவுதியும் நமக்கு கண் முன் பாடங்களாக இருக்கின்றது .

இந்த தண்டனைக்கு வக்காலத்து வாங்கும் சிலரை  நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது . கிழிந்த டவுசருக்கு (ஷரியா) எத்தனை ஓட்டுதான் போடுவார்கள் என்று .
இந்த திமிர் பிடித்த சவுதி தொழில் அதிபர்கள் இந்தியாவிற்கு தொழில் முறையில் வரும்போது 2 மாதமோ 3 மாதமோ தங்க நேர்ந்தால் . இங்கு சிறு முஸ்லீம் பெண்களை திருமணம் செய்து கொள்வார்கள். மூன்று மாதம் அனுபவித்து விட்டு பிறகு தலாக் சொல்லிவிட்டு பறந்து விடுவார்கள் .
இதற்க்கு ஹைதராபாத்தில் பல ஏஜண்டுகள் இருக்கிறார்கள் .
இது அவர்கள் மத சட்டப்படி அனுமதிக்க பட்ட செயல்.
விபச்சாரம் செய்ய கூடாதாம் அது ஹராம் . அதே நேரம் அதுக்கு ஒரு குறுக்கு வழியும் போட்டு குடுத்திருக்காங்க .

உடல் முழுவதும் ரத்தத்திற்கு பதில் திமிர் ஓடிகொண்டிருக்கும் சவுதிகளை போல மாறிவிட வேண்டும் என்று இங்கும் சிலர் துடிப்பது பார்த்தால் ஈயத்தை பார்த்து இளித்ததாம் பித்தளை என்ற கதைதான் நியாபகத்திற்கு வருகிறது .

 இதில் மலுபலான பதில் வேறு. ரிசானா விஷயத்தில் யாராவது தவறு செய்திருந்தால். அவர்களுக்கு இறைவன் மறுமையில் தீர்பளிப்பான் .
மற்றவர்களுக்கு இதை பற்றி பேச அருகதை இல்லை என்று சொல்பவர்கள் .
குஜராத் கலவரத்தில் மோடி தவறு செய்திருந்தால். அவரையும் மறுமையில்  இறைவன் தண்டித்து கொள்ளட்டுமே.

சவுதிகளின் உயர்வு மனபான்மைக்கு கிழே வரும் காணொளியை பாருங்கள் இதற்க்கு பெயர்தான் சகோதரத்துவம்.
  

Monday, January 14, 2013

கண்ணா லட்டு திங்க ஆசையா

v



ஏற்கனவே அலக்ஸ் பாண்டியன் படம் பார்த்து அக்குளில் கட்டி வந்தவன் போல் சூடாகி போயி இருந்த என்னை பிலாசபி லட்டு திங்க அழைத்தார் .
இந்த ஆளு எப்போவும் இப்படிதான் சனிகிழமை இரவு போன் போட்டு நம்மகிட்ட சம்மதம் வாங்கிடுவாரு .(சைக்காலஜி தெரிஞ்ச பிலாசபி )
சரி பார்ப்போம் இதிலாவது லட்டு தராங்களா? இல்லை புட்டு தராங்களா ?அட்லீஸ்ட் பொறி உருண்டை அளவிற்கு திருப்தி கிடைத்தால் கூட பொதும்  என்ற மனநிலையில் கிளம்பினேன் .
சரியாக காலை 9.00 மணிக்கு ஐ ட்ரீம்ஸ் திரை அரங்கம் வந்து சேர்ந்தேன்.தியேட்டர் வாசலில் எங்கு பார்த்தாலும் அலெக்ஸ் பாண்டியன் போஸ்டர்கள் கட் அவுட்கள் என்று  வியாபித்து இருக்க பயபுள்ள திட்டம் போட்டு நம்மளை கவுத்திடுச்சி என்று நினைத்து கொண்டு பின் வாங்க தயாரானேன் .
ஜீ அது மூன்று காட்சி நம்ம படம்தான் பகல் காட்சி என்று சமாதான படுத்தி  மேலே சிறிதாக ஒட்டி இருந்த போஸ்டரை காட்டினார் அதன் பிறகுதான் உயிர் வந்தது .

படத்தின் கதை அனைவருக்கும் தெரிந்ததுதான் அதை சொல்லிய விதத்திலும் பெரிதாக எந்த மாறுதலும் இல்லை .என்றாலும் படம் ஆரம்பம் முதல் முடியும் வரை நம்மை இருக்கையில் கட்டி போட்டு விடுகிறார்கள்.
பவர் ஸ்டாரை வைத்து பெரிய அறுவடை செய்திருக்கிறார்கள் .இந்த ஆளுக்கு நடிக்கவே தெரியவில்லை ,பாடி லேங்குவேஜ் சரி இல்லை டயலாக் டெலிவரி படு மோசம் , லிப் மூமன்ட் சுத்தமா இல்லை , சரி இருக்கட்டும் அதனால் என்ன இதெல்லாம் சாதா ஸ்டாருக்கு தான் வேண்டும் எங்க பவருக்கு இது எதுவும் தேவை இல்லை .நீங்க வந்தா மட்டும் போதும் .நீங்க வந்தா மட்டும் போதும் என்று கொண்டாடி தீர்க்கிறார்கள் ரசிகர்கள் .
தியேட்டரில் இதே போன்றதொரு ஆர்ப்பரிப்பை நீங்கள் பார்க்க வேண்டும் என்றால் ரஜினி படத்திற்குதான் போக வேண்டும் .

அடுத்து  சந்தானம் மனிதர் மிக கடுமையாக உழைத்திருக்கிறார் தயாரிப்பாளராகவும் நடிகராகவும் இந்த படத்தில் இவர்பங்கு மிக அதிகம் இந்த படத்திலும் ரெட்டை அர்த்த வசனம் பேச தவறவில்லை . ஆனால் அது அதிகம் இல்லாதது ஆறுதல்.

அடுத்து சேது இந்த படத்திற்கு கதாநாயகன் வேண்டுமே என்பதற்காக இவரை வைத்திருக்கிறார்கள்.(மிக்ஸ்சர் சாப்பிடதான்) பெரிதாக இவருக்கு ஸ்கோர் பண்ணும் வாய்ப்பு எதுவும் இந்த படத்தில் இல்லை நாயகி இவர் காதலை ஏற்று கொண்டதால் இவர் கதாநாயகன் ஆகி விடுகிறார். பவர் ஸ்டார் மற்றும் சந்தானம் என்கின்ற ரெண்டு லைட் ஹவுஸ்க்கு நடுவே இவர் வெறும் பெட்டர்மாஸ் லைட் ஆகி விடுகிறார்.


நாயகி விஷாகா  நல்லாத்தான் இருக்கிறார் பஞ்சாப் கோதுமை ஆச்சே பின்ன எப்படி இருக்கும் . பொதுவாக கமெடி படங்களில் பெண்களுக்கு நடிக்கும் வாய்ப்பு அதிகம் இருக்கும் . சதிலீலாவதி போல். இதில் இவருக்கு அந்த மாதிரி கிடைக்காதது வருத்தம் தான் . ஆனாலும் ஒரு பாடலில் தனது எல்லா திறமையும் காட்டு காட்டு என்று காட்டி விடுகிறார். அதனால் இவரை ஏற்று கொள்ளலாம்.

அடுத்ததுதான் முக்கியமான பாயிண்ட் இந்த படத்திற்கு விமர்சனம் எழுதிய எல்லோரும் இவருடைய உழைப்பை மறந்து விட்டார்கள். இந்த படத்தின் வெற்றிக்கு மிக முக்கிய காரணம் நம்ம யங் சூப்பர் ஸ்டார் சிம்பு என்கின்ற எஸ்.டி .ஆர் . படம் நல்லா விருவிருப்பா போயிகிட்டு இருக்கும் போது  கவுரவ வேடத்தில் இவர் வருகிறார் . நமக்கு அடிவயிறு பகீர் என்கிறது .
நல்ல வேலையாக எந்த பைட்டும் செய்யாமல், பாட்டு பாடாமல், ரெண்டே ரெண்டு பஞ்ச் டயலாக் மட்டும் சொல்லிவிட்டு இடத்தை காலி செய்கிறார் .
படமும் பிழைத்து கொண்டது .


பழைய படத்தையும் இதையும் ஒப்பிட்டு பார்த்தல் . இந்த படம் அதன் அருகில் கூட வரமுடியாது .அதுதான் பாக்கியராஜின் வெற்றி .
லட்டு சிறுசாக இருந்தாலும் சுவையாகவே இருக்கிறது ...


Friday, January 11, 2013

அலெக்ஸ்லு..பாண்டியன்லு

v

வழக்கமாக சினிமா அதிகம் பார்க்காதவன் நான் அப்படியே பார்த்தாலும் அதை விமர்சனம் பண்ணுவது எப்போதாவது நிகழும் அதிசயம் .
அந்த அதிசயம் இந்த ஆண்டின் ஆரம்பத்தில் இவ்வளவு சீக்கிரம் வாய்க்கும் என்று நான் கனவிலேயும் நினைக்க வில்லை .
இன்று பவர் சடவ்ன் . வீட்டில் சும்மா இருக்க பிடிக்காமல் இன்று ரிலீஸ் ஆன புது படம் ஏதாவது இருக்கிறதா என்று யோசித்து அம்பத்தூர் ராக்கி சினிமாஸில் அலக்ஸ் பாண்டியன் என்ற அமர காவியம் ரிலீஸ் ஆவதை அறிந்து கொண்டேன் .
சற்றும் தாமதிக்காமல் உடனே கிளம்பி தியேட்டருக்கு வந்து சேர்ந்தேன் .(டிக்கட் கிடைக்க வேண்டுமே என்ற கவலை) ஆனால் கூடட்ம் அதிகம் இல்லாததை கண்டதும் மனதிற்குள் ஒரு சிறு சந்தோஷம் . (அது எவ்வளவு முட்டாள்தனமானது என்று அப்போது எனக்கு தெரியாது )

இப்போது விமர்சனத்திற்கு போவோம் .
படம் ஆரம்பிக்கும் போது இந்த படத்தில் மிருகங்கள் எதுவும் வதைக்கபடவில்லை என்று டைட்டில் கார்ட் காட்டுகிறார்கள் அப்போது எனக்கு  தெரியாது அடுத்த மூன்று மணி நேரம் இவர்களிடம் மாட்டி வதை பட போறது நாம்தான் என்று .
படம் ஆரம்பித்து பத்தே வினாடிகளில் உங்களை அலேக்காக தூக்கி ஆந்திராவிற்கு கொண்டு போய்விடுகிறார் அலேக் பாண்டியன் .
சற்று மிரட்சியோடு படத்தை பின்தொடர்ந்தால். ஓடும் ரெயில். அதை துரத்தும் கதாநாயகி. அவளை துரத்தும் 10 அடியாட்கள். அவளை காப்பாற்ற அவர்களை பின்தொடர்ந்து விரட்டி வரும் கதாநாயகன் . என்று தமிழ் சினிமா இதுவரை கண்டிராத அற்புத காட்சியோடு படம் ஆரம்பம் ஆகிறது .

ரெயில்  பெட்டிகளை  எஞ்சின் கொண்டு இழுக்கிரார்களா ? அல்லது ஷேர் ஆட்டோ வைத்து இழுக்கிரார்களா என்று நமக்கு சந்தேகம் வருவதை தவிர்க்க முடிய வில்லை. அந்த அளவுக்கு எல்லாரும்  ஓடும் ரெயிலில் ஏறி இறங்கி ஜாலியாக விளையாடுகிறார்கள் . வில்லன்னும் வழக்கம் போல் ரயிலை எலிகாப்டரில் துரத்தி வருகிறான் .அவளவுதான் கட் பண்ணா நாம் எங்கு இருக்கிறோம்  என்று நமக்கே மறந்து விடுகிறது அது பரவாஇல்லை . ஆனால் அதை டைரெக்டரும் கதாநாயகனும் மறந்து விட்டதுதான் சோகம் .

சம்பந்தம் இல்லாமல் சந்தானம் ...................இடைவேளை வரை இருவரும் ரெட்டை அர்த்த வசனம் பேசி விளையாடிகொண்டே இருக்கிறார்கள். ஏற்கனவே நம்ம தலைவர் கவுண்டமணி பல படங்களில் செய்த காமடி சீன்களை வைத்து ஒப்பேற்றுகிறார் .சந்தானதிற்க்கு மூன்று தங்கச்சிகள் . சந்தானமே இந்த படத்திற்கு வேஸ்ட் லக்கேஜ் இதில் இன்னும் எக்ஸ்ட்ரா 3 லக்கேஜ் வேறு  ......... 

ஆனால் பார்க்கிற அனைவருக்கும் ஒரு விஷயம் தெளிவாக புரிந்து விடுகிறது . எந்த நேரத்திலும்  இந்த படத்தில் ஒரு கேவலமான பிளாஷ் பேக் வரபோகிறது எல்லோரும் தயாராக இருக்க வேண்டும் என்று .
அது எந்த  அளவிற்கு கேவலமாக இருக்கும் என்பதுதான் நம்மால் யூகிக்க முடியாத சஸ்பென்ஸ் . இந்த விஷயத்தில் டைரெக்டர் சுராஜ் ஜெயித்து விடுகிறார்.

அனுஷ்காவிற்கு கார்த்தி மேல்  காதல் வரும் காரணம் சுறா படத்தில் விஜய் மீது தமன்னாவிற்கு காதல் வருமே அதை விட வலுவானது . இடைவேளை வரை கார்த்தியின் பெயரை யாரும் உச்சரிக்காமல் இருக்கிறார்கள் . இடைவேளைக்கு பிறகு தான் அவர் பெயர் அலெக்ஸ் பாண்டியன் என்று நமக்கு தெரிய வருகிறது எப்பேர்பட்ட சஸ்பென்ஸ் .

இதெல்லாம் என்ன பிசுகோத்து என்று இதைஎல்லாம் தூக்கி சாப்பிடுகிறமாதிரி  இருக்கு பாருங்க ஒரு கிளைமாக்ஸ் . அது நமக்கு அங்க புரியாது வீட்டுக்கு வந்து ஒரு குவாட்டர் விட்டதுக்கு அப்புறம் தான் புரிகிறது . பல பேருக்கு அது புரியாமலே போய்விட சாத்தியமும் இருக்கிறது .
இந்த படத்தை பார்த்துவிட்டு நீங்கள் இருக்கையை ஈரம் பண்ணாமல் வந்துவிட்டால் நீங்கள் பாக்கியவான்கள் ......

படம் பார்த்துவிட்டு நாம்  வெளியே வரும்போது அடுத்த காட்சிக்காக டிக்கெட் வாங்கி விட்டு  உள்ளே போக தயாராக காத்திருப்பவர்களை பார்க்கும் போது நமக்கு வருகிறது பாருங்கள் ஒரு சிரிப்பு அந்த சிரிப்பிற்காக இந்த படத்தை பார்க்கலாம்.

அலெக்ஸ் பாண்டியன் : first worst film of the year  (சுறாவிற்கு அஞ்சான் இதற்கும் அஞ்சான் )

Popular Posts