v
     
  ஹே நானும் பதிவு எழுத ஆரம்பிச்சுட்டேன் .
நானும் பிரபல பதிவர் ஆகிடவேண்டியதுதான் .
கமிங் டு தி பாயிண்ட் கொஞ்சநாள இந்த மேட்டர் பலபேர் மண்டைய கொடைஞ்சுக்கிட்டு இருக்கு .
நான் மட்டும் என்ன விதிவிலக்கா?
அதான் என் குருவி மண்டைக்கு எட்டியது .
இதை ஆதரிப்பவர்கள் எதிர்பவர்கள் என்று பதிவுலகமே
ரெண்டா பிரிஞ்சுகெடக்கு.
ஆதரிபவர்கள் கருத்து என்னானா தனிமனித உரிமை
அதை தவறு சொல்ல யாருக்கும் அதிகாரம் இல்லை என்பது.
   எதிர்பவர்கள் கருத்து என்னனா இது கலாசார சீரழிவு .
   இதை அனுமதித்தால் குடும்பம் என்ற கட்டுமானம் சிதைக்கப்படும் என்பது .
    
   சரி நீ என்ன சொல்ல வரணு கேக்றீங்களா?.
   சொல்றேன் சொல்றேன் . அதுக்கு தானே வந்திருகோம்.
   கலாசாரம் அப்டினா என்ன சார் ?
   நம்ம பன்னிக்குட்டி கூட இந்த கேள்விய கேக்குறார்.
   இந்தியால ஒரு இடம் இருக்கு சார் ஹிமாலய பக்கதுல மலாங் அப்டின்னு. 
   அங்க பாருங்க ஒரு குடும்பத்துக்கு ஒரு பொண்ணுதான் கட்டுவாங்க மூத்த பையன் கல்யாணம் பண்ணினால் அவனுக்கு பின்னால் உள்ள அனைவர்க்கும் அந்த பெண் தான் மனைவி.
  திருமண செலவு அதிகம் மற்றும் பெண்களின் எண்ணிக்கை குறைவு போன்ற காரணங்களால் காலகாலமாக இந்த
 பழக்கத்தை கடைபிடிகிறார்கள் .
   இதுவும் இந்தியாலதான் தல நடக்குது.
   செக்ஸ் என்பது பொருளாதாரம், மக்கள்தொகை மற்றும் தேவையை பொருத்தது.
   உணவு பஞ்சம் வரும்போது திமிங்கலங்கள் எல்லாம் கூட்டம்மாக தற்கொலை செய்வதுபோல.
   மக்கள் தொகை குறைவாக இருக்கும்போது பலதார முறை சரியானதீர்வாக இருக்கும்.
   அதே நேரத்தில் மக்கள் தொகை அதிகமிருக்கும் போது ஒரு தாரமுறை ஓகே.
 மக்கள் தொகை மிக அதிகமாக இருக்கும்போது உளவியல்ரீதியாக திருமணத்தின் மீதான நாட்டம் குறைந்துவிடும்.
 அதற்கு கமிட்மென்ட்குள் சிக்க விரும்பாதவர்களின் எண்ணிக்கை அதிகமாவதும் ஒரு காரணமாக இருக்கலாம்.
 முன் எப்போதும் இல்லாத அளவிற்கு திருமணத்தின் தேவை இப்போது குறைந்திருக்கு.
 கல்யாணம் பன்னாமல் வாழும் ஆண்களின் எண்ணிக்கை. பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு
 குழந்தை வளர்க்கும் பொறுப்பை அவர்கள் விரும்பாததும் ஒரு காரணமாக இருக்கலாம்.
 ஆண் பெண் உறவு பல்லாயிரம் ஆண்டுகளாக  பல பரிமாணம் தாண்டி இந்த நிலையை அடைந்திருகிறது.
 இன்னும் அது மாறும். அது தேவைக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்ளும்.
 கலாச்சாரத்தில் சரி என்றோ தவறு என்றோ எதுவும் கிடையாது.
 சௌகர்யம் அசவ்கரியம் அவ்ளோதான் போன நூற்றாண்டில் உடன்கட்டை ஏறுவதும்.
 தேவதாசி முறையும் நியாயம். ஆனா இப்போ அது அநியாயம்.
 எல்லாம் மாறும் பாஸ் மாறிக்கிட்டு இருக்கும் வரைதான் கலாசாரம் வாழும்.
 இல்லேன்னா பண்டைய எகிப்து கிரேக் கலாசாரம் காலாவதி ஆனமாதிரி ஆகிடும்.
 கடைசியா ஒன்னு சொல்றேன்.
 தண்ணியும் கலாச்சாரமும் ஒன்னுதான்.
 தண்ணிக்கு ஓடி கிட்டிருக்கும் வரைதான் மரியாதை.
 ஒருஇடத்தில் நின்றுவிட்டால் அதுக்கு பேரு குட்டை.
 ரொம்ப நாள் ஆய்டுச்சினா அதுக்கு பேரு சாக்கடை.
 கலாச்சாரமும் புதுமைகளை ஏற்கும்வரை அது உச்சத்தில் இருக்கும்.
 நான் இதை நியாய படுத்தவோ அல்லது எதிர்க்கவோ இல்லை.
 இது இந்த காலத்தின் தேவையாக கூட இருக்கலாம்.
 வலம் போகிறவர்கள்  வலம் போகட்டும் இடம் போகிறவர்கள் இடம் போகட்டும்.
 அவர் அவர் விருப்பம்.
 (அப்புறம் இதுதான் என் முதல் பதிவு ரொம்ப திட்டாதிங்க வலிக்கும் அழுதிருவேன்.)