Saturday, December 1, 2012

விளிம்பு நிலை மனிதரின் பேட்டி (பேத்தி அல்ல )

v

சமீப காலங்களாக விளிம்பு நிலை மனிதர்கள் யாரும் என் கண்ணில் படுவது இல்லை . என்ன காரணம் யார் செய்த சூழ்ச்சி என்று பலவாறாக யோசித்து பார்த்ததில் காரணம் எனக்கு புரிந்தது.
 அதாவது நான் அலுவலகத்திற்கு காரில் சென்று வருவதால் என்னால் அவர்களை கண்டு பிடிக்க முடிய வில்லை என்பது இன்று விடுமுறை ஆதலால் மின்சார ரயிலில் பயணித்து யாராவது ஒரு விளிம்பு நிலை மனிதனின் பேட்டியை எடுத்து விடுவது என்ற வைராக்கியத்துடன் வீட்டை விட்டு கிளம்புகிறார் ஆரோக்கியசாமி .

இடம் திருவான்மியூர் பறக்கும் ரயில் நிலையம் .
கூட்டம் அவ்வளவாக இல்லை என்றாலும் எங்கு பார்த்தாலும் டிப்டாப் ஆசாமிகள் மயம் . ஒரு விளிம்பு நிலை மனிதன் கூட ஆரோக்கியசாமி கண்ணில் படவில்லை . என்னடா இது இப்படி பிள்ளை பிடிக்கிறவன் மாதிரி எவ்வளவு நேரம் தான் தேடிக்கிட்டு இருக்கிறது என்று மனதுக்குள் நினைத்து கொண்டிருக்கும் போது . சட் என்று அவர் பார்வை பிளாட்பார்ம் ஓரத்திற்கு செல்கிறது .
அங்கே பிளாட்பார்ம் விழும்பில் ஒரு மனிதன் நின்று கொண்டு தண்டாவளத்தில் ரயில் வருகிறதா என்று பார்த்து கொண்டு இருந்தான் . மிகவும் விழும்பில் நின்று எட்டிப்பார்த்து கொண்டிருந்ததால் நாம் தேடும் விளிம்பு நிலை மனிதன் இவனாக இருக்குமோ என்று மனதிற்குள் ஒரு மணி அடித்தது . உடனே நம் மூளை சுறுசுறுப்பு அடைந்தது .
மெதுவாக அவன் அருகே சென்று பாஷா படத்தில் ரஜினி சொல்வது போல் சொல்லவேண்டும் என்று நினைத்து கொண்டேன் .

இனிமேல் லைவ் ரிலே :

ஆ.சாமி:-   அண்ணே வணக்கம் என் பேறு பிரேம்குமார்.

வி .மனிதன் :- இருக்கட்டும்...

ஆ.சாமி:- எனக்கு இன்னொரு பெயர் இருக்கு

வி .மனிதன் :- வச்சிக்கோ ..உன் இஷ்டம் எத்தினி வேணும்னாலும் வச்சிக்கோ.

ஆ.சாமி:- அது இல்லைன்னே உங்க பேட்டி வேணும் அதான் .

வி .மனிதன் :- ஏன்பா பார்த்தா படிச்சவனாட்டம் இருக்கே மனசு ஏதும் சரி இல்லையா வீட்ல ஏது பிரச்சனையா .?

(அவன் என்னை பேட்டி எடுக்க  ஆரம்பித்துவிட்டான் )

ஆ.சாமி:- அண்ணே நீங்க ரொம்ப விளிம்புல இருக்கீங்க . கிட்ட வர பயமா இருக்கு கொஞ்சம் பின்னாடி வாங்க நாம அந்த பென்ச்ல உக்கார்ந்து பேசலாம் .

(சிறிது யோசனைக்கு பிறகு சம்மதித்தான் )

ஆ.சாமி:- நீங்க எத்தனை வருஷமா இப்படி விளும்புல நிக்குறீங்க.?

 வி .மனிதன் :- அது ஆச்சிங்க ஒரு பதினைஞ்சி வருஷத்துக்கு மேல . நான் இஸ்கூலுக்கு  போசொல்ல ஆரம்பிச்சது . அப்போ எங்க இஸ்கூலு பேரிஸ்ல இருந்திச்சி . எங்க வீட்டுல இருந்து பஸ்லதான் போகணும் .ஆனா எனக்கு ட்ரைன்ல போகணும்னு ஆசை . வீட்ல இருந்து தாம்பரத்துக்கு பஸ்ல போயி அங்க இருந்து ட்ரைன்ல போலாம்ன்னு ப்ளான் பண்ணி போய்டேன் .
அப்படியே பிளாட்பாரம் விளும்புல நின்னுகிட்டு ரெயில் வருதான்னு பார்த்துக்கிட்டு இருந்தேன் . அப்போ திடீர்ன்னு ரெயில் வர்ற சத்தம் மட்டும் கேட்டுச்சு ஆனா ரெயிலை காணும் . என்னடா ஆச்சிரியமா இருக்குதேன்னு நெனைச்சிகிட்டு இன்னும் நல்லா விளும்புல போயி எட்டி பார்த்தேன் . அப்பவும் என் கண்ணுக்கு ரெயில் தெரியல. ஆனா சத்தம் மட்டும் ரொம்ப கிட்டக்க கேக்க ஆரம்பிச்சுது . பின்னால இருந்து ஒரு குரல் . சாவுகிராக்கி  திரும்பி பாரு ரெயில் வருது தலைய உள்ள எடு என்று . திரும்பி பார்த்தால் ரெயில் பக்கத்துல வந்திருச்சி . சடார்ன்னு தலைய உள்ள இழுத்து தப்பிச்சிட்டேன் . ஆனா அந்த த்ரில் பழகிடுச்சி 

ஆ.சாமி:- சரி பிழைப்புக்கு என்ன செய்கிறீர்கள் .?

வி .மனிதன் :-  ஆங் .. இங்க தான் டைட்டில் பார்க்குல அஜுபா கம்பனியில டெவலப்பர் ஆக இருக்கேன் . மாசம் 65,000 ருபாய் சம்பளம் வருது .

 ஆ.சாமி:- நல்ல வேலைதானே அப்புறம் ஏன் சலிச்சிகிறீங்க.?

வி .மனிதன் :- என்னதான் இருந்தாலும் மனசுக்கு பிடிச்ச வேலையா இருக்கனும்ல சார் . மதியானம் போல அவங்களே கார் அனுப்பி கூப்பிட்டு போறாங்க நாடு ராத்திரி வரை வெளிய உடமான்டாங்க . அப்புறம் அவங்களே வீட்டுக்கும் கார்ல அனுப்பி வைக்கிறாங்க . அப்புறம் எனக்கு தொங்குரதுக்கு ஏது நேரம் என்ன பொழைப்பு சார் இது . வெளிய போயி சுத்திகிட்டு வரமாதிரி வேலை இருந்தா நல்லாஇருக்கும். என்ன பண்றது எல்லாம் நம்ம கைலயா  இருக்கு. ஆனா வாரத்துக்கு ரெண்டு நாள் லீவு குடுக்குறாங்க சார் அந்த மாறி நேரத்துல இப்படி ரெயில்ல தொக்கி கிட்டு போறதுக்கு வந்துருவேன் .தோ இப்போ ஆரம்பிச்சி சாயங்காலத்துக்குள்ளாற எல்லா ஸ்டேசனுக்கும்  தொங்கிகினே போயிட்டு வந்துற மாட்டேன் .



 ஆ.சாமி:- உங்கள் எதிர்கால லட்சியம் என்ன .?

வி .மனிதன் :- சின்ன வயசில் இருந்து எல்லா பிளாட்பாரம் விளும்புளையும் நின்னுபார்துடேன் . பறக்கும் ரெயில் வந்தப்போ அது ரொம்ப புதுசா இருந்துச்சி . இப்போ மெட்ரோ ரெயில் வருது அதை நினைக்கும் போதே மனசு பரபரக்குது .
இன்னும் மோனோ ரெயில் வேறு வரும்ன்னு சொல்லிகிறாங்க . நான் கண்ணை மூடுறதுக்குள்ள அதுலயும் ஒரு தபா தொங்கீரனும் சார்.

(அந்த வீரமான மனிதனின் கண்விழியோரம் ஈரம் )

 ஆ.சாமி:- இந்த கேள்வி கேட்டா தப்பா எடுத்துக்க மாட்டீங்களே ..நீங்க தமிழ்மணம் ஒட்டு போடுவீங்களா ...?


 வி .மனிதன் :- அதெல்லாம் இல்லை சார் நான் எப்போதும் தி.மு.க.வுக்கு தான் வோட்டு போடுவேன்.

நாம் அடுத்த கேள்வியை ஆரம்பிக்கும் முன் பீச் செல்லும் ரெயில் வர மின்னல் வேகத்தில் அதில் தொத்தி கொண்டு நம்மை பார்த்து கை ஆட்டிகொண்டே சென்றான் ....




இப்போது ஒன்லி மைன்ட் வாய்ஸ்

ஆரோக்கிய சாமி  மைன்ட் வாய்ஸ் (ச்சே இவன் கிட்ட கேமராவை குடுத்து என்னை ஒரு போட்டோ எடுக்க சொல்லலாம்ன்னு நினைச்சேன் அதுக்குள்ள தப்பிச்சிட்டானே )

விளிம்பு நிலை மனிதன் மைன்ட் வாய்ஸ் (ஹம்ம் பாவம் யார் பெத்த புள்ளையோ ஆளை பார்த்தால்  பையித்தியம் மாதிரி தெரியலயே சரி நமக்கு என்ன டிரெயின் வர்ற வரைக்கும் அந்த ஆளாள நல்லா பொழுது போச்சி )

டிஸ்கி :- சிரிக்க மட்டுமே சிந்திக்க அல்ல .






Tuesday, November 6, 2012

உங்கள் ஆதரவு தேவை

v

கருத்து சுதந்திரத்தை காக்க இப்போது நாம் தவறிவிட்டால் . நாமும் குன்றம் புரிந்தவர்கள் ஆகிறோம் .
கீழ் கண்ட இடுகை தருமி ஐயா தனது தளத்தில் பதிவிட்டது . அனைவரும் ஆதரவு தருமாறு கேட்டு கொள்கிறேன் .
 http://dharumi.blogspot.in/2012/11/601-i-t-act-section-66.html

601. I-T ACT SECTION 66 A - நமது கவலைகளும், கோரிக்கைகளும்.




*
 இப்பதிவில் நான் எழுதியுள்ளவை எல்லோருக்கும் சம்மதமாக இருக்குமென நினைக்கிறேன். ஒரு வேளை ஏதேனும் இன்னும் மாற்ற வேண்டுமாயின் இன்று இரவுக்குள் எனக்குத் தெரியப்படுத்தினால் மாற்றி விடுகிறேன். அதன் பின்பு, நாளை காலையிலிருந்து இப்பதிவை அடுத்த இரு நாட்களுக்குள் கீழே - சிகப்புக் கோட்டிற்குக் கீழே - உள்ளதைத் தங்கள் பதிவுகளாக பலரும் இட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். பதிவுகள் இட்ட பின் உங்கள் தொடுப்புகளை பின்னூட்டங்கள் மூலம் அனுப்பி விடுங்கள்.. அப்பதிவுகளை இப்பதிவின் கீழ் தொகுத்து விட ஏதுவாக இருக்கும்.

 தொடர்ந்து 2 நாட்கள் கிழே உள்ள வரியை எல்லோரும் டிவிட்டரிலும் பேஸ் புக்கிலும் பதிவிடலாமே ....

இந்திய அரசே,

தனிமனித உரிமைகளையே பறிக்கும். I-T ACT Section 66 A திருத்தப்பட வேண்டும். தனிமனித கருத்துக்களை சுதந்திரமாக வெளியிடும் உரிமை வேண்டும்


நண்பர்களிடமும் சொல்லுங்கள் ..............
========================================================
*


 I-T ACT SECTION 66 A பற்றி ப்ரனேஷ் ப்ரகாஷ், (Pranesh Prakash, Policy Director of the Bangalore based Centre for Internet and Society)கூறுவது வேடிக்கையாகவும், வேதனையாகவும் இருக்கிறது.(http://www.thehindu.com/news/national/iac-volunteer-tweets-himself-into-trouble-faces-three-years-in-jail/article4051769.ece) அவர் சொல்கிறார்: ’யாரும் என்னைப் பற்றி ஒரு புத்தகம் எழுதி, அதில் என்னை வேண்டுமென்றே மோசமாக எழுதினாலும் என்னால் அதைப் பெரிதாக ஒன்றும் சட்டப்படி செய்ய முடியாது. ஆனால் அப்படி ஒரு செய்தியை e-mail செய்தாலும் உங்களுக்கு மூன்றாண்டுகள் ஜெயில் நிச்சயம்! இது தவறாக யாரையும் கொன்றுவிட்டால் கிடைக்கும் இரண்டாண்டு சிறைத் தண்டனையை விட அதிகம்!’

”ரவி (சீனிவாசன்) மேல் கார்த்திக் சிதம்பரம் கொடுத்த புகாரின் பேரில், நீதிமன்றங்கள் அவரைத் தண்டிக்காதவரை அவரைக் கைது செய்தது தவறு” என்று இன்று இந்து தினசரியில் (5.11.12 - http://www.thehindu.com/todays-paper/advani-condemns-arrest-of-iac-activist/article4065734.ece) அத்வானி கூறியுள்ளார்.

இந்துவில் வந்த தலையங்கமும் (http://www.thehindu.com/opinion/editorial/an-attack-on-media-freedom/article4055267.ece) இக்கருத்தைப் பற்றியும், பேச்சு சுதந்திரத்தைப் பற்றியும் தெளிவாக வலியுறுத்தியுள்ளது.

*இவ்வாறு செய்தித் தாட்களில் வந்த செய்திகளை நம் பதிவுகளில் மேற்கோளிடுவதும் கூட இச்சட்டத்தினால் தவறாகக் கருத்தப்படும் என்ற நிலையே இப்போது உள்ளது. இது தனி மனித உரிமைகளையே பறிக்கும். நம் கருத்துக்களை சுதந்திரமாக வெளியிடும் உரிமை நமக்கு வேண்டும். இந்த உரிமை நம்மிடம் இருக்குமளவிற்கு I-T ACT திருத்தப்பட வேண்டும்.

*இதனோடு, பிரபலங்கள் கொடுக்கும் வழக்குகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் காவல் துறையின் அவசரப் போக்கும் நமக்கு தேவையில்லாத அச்சத்தை மட்டுமே தரும். சரியான விசாரணை வேண்டும்; தேவையற்ற கைது தவிர்க்கப்பட வேண்டும் என்பவைகளைக் காவல் துறையின் கவனத்திற்குக் கொண்டு செல்கிறோம்.

*முறையான விசாரணை மூலம் உண்மைகள் வெளிவரும் முன்பே வெகு கோரமான ஊடகச் செய்திகள் குற்றமற்றவர்களையும் பாதிக்கும் என்ற எண்ணம் ஊடகங்களிடம் இல்லை என்பதும் வேதனையான செய்தி. ஊடகங்கள் இன்னும் பொறுப்போடு செயல்பட வேண்டும்.


நம் உரிமையையும், சுதந்திரத்தையும் காப்போம். 
இதற்காக பதிவர்கள் ஒன்று படுவோம்.

Friday, September 28, 2012

நித்தியாயிசம் .....

v
கடந்த இரண்டு பதிவுகளும் மதத்தை பற்றியதாக இருந்ததால் . கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ண வேறு ஏதாவது பதியலாம் என்று நினைத்தேன் ..நாம நினைக்கிறது எல்லாம் அப்படியே நடந்து விடுகிறதா என்ன .?


சிறு வயதில் இருந்தே நான் பலவிதமான .துக்க செய்திகள் , எதிர்பாராத மரணம் , கண் எதிரே  விபத்து , நெருக்கமான நண்பர்களின் மரணம் , என்று பல விஷயத்தை பார்த்திருக்கிறேன் . அந்த நிகழ்சிகள் என் மனதை லேசாக பாதித்தாலும் . நான் அழுதது இல்லை . என்ன யாரிடமும் பேசாமல் அமைதியாக இருப்பேனே தவிர . எவ்வளவு முயன்றாலும் அழுகை வராது . நான் நார்மலா ..? அப்நார்மலா ...? என்ற சந்தேகம் கூட எனக்கு வந்ததுண்டு ...
ஆனால் அந்த சந்தேகம் எனக்கு இப்போது தீர்ந்துவிட்டது .நான் நார்மல்தான் . என்று எனக்கு புரிய வைத்தவர் நிதியானந்தாதான் ..

எப்படி பட்டவரும் தன நெருங்கிய சொந்தத்தின் இறப்பிற்கு அழுதே ஆகவேண்டும் .அதுவும் தன் தாயோ ! தந்தையோ என்றால் சொல்லவே வேண்டாம் . சரி அழுகைதான் வரவில்லை என்றால் அதை யாரும் கொண்டாட மாட்டார்கள் .
என்று நினைத்திருந்த எனக்கு இந்த காணொளி சரியான பாடம் புகட்டி விட்டது .

நித்தியின் தந்தை மரணத்தை கட்டிபிடி டான்ஸ் உடன் எப்படி கொண்டாடுகிறார் என்று பாருங்கள் . அதுவும் ஒரு கட்டத்தில் பரவச நிலை தொடும்போது  செருப்பை அவர் தலையில் வைப்பது ஆகட்டும் .
தன காலால் இறந்த தந்தையை மிதிப்பது ஆகட்டும் . அட அட எப்பேர்பட்ட இறைபனி .


நல்ல வேளை இவர் நாம் வாழும் தகவல் தொழில்நுட்ப காலத்தில் பிறந்தார் ஒரு 1000 ஆண்டுகளுக்கு முன்னாள் பிறந்திருந்தால் .இவர் இந்நேரம் கடவுள் ஆகி இருப்பார் . அல்லது குறைந்த பட்சம் ஒரு தூதராவது ஆகி இருப்பார் . நல்ல வேளை  அப்படி மதம் உருவாகாமல் காலம் தடுத்து விட்டது .


காணொளியை இங்கு காணுங்கள் :-


ஒரு படத்தில் செந்தில் கவுண்டமணியின் தாய் இறந்த இடத்தில நின்றுகொண்டு எல்லோரையும் சிரிக்க சொல்வாரு .
ஒரு வேளை நித்தியும் கவுண்டமணி ரசிகராக இருக்குமோ .......

Wednesday, September 26, 2012

மதம் (பாகம் இரண்டு )

v
                                                                         


                                  மானிகே மதம் :-

    இப்போது சுத்தமாக வேர் அறுக்கப்பட்ட ஆனால் ஒருகாலத்தில் உலகின் பெரு சமயங்களில் ஒன்றாக திகழ்ந்த மதம்.  இதை தோற்றுவித்தவர் மானி . இவர் தன்னை தீர்க்கதரசி என்று கூறி கொண்டார் . இந்த மதத்தின் இறைமையியல் கொள்கை மிகவும் கவர கூடிய கவர்சிகரமானது .

                                        மானி:-

               இவர் மேசபட்டோமியாவில் கி.பி. 216 டில்  பிறந்தார்   அப்போது அது பாரசீக அரசின் ஒரு பகுதியாக இருந்தது அதனால் அங்கு சொராஸ்ட்ரியம் மிகவும் செல்வாக்கு பெற்று இருந்தது . என்றாலும் இவர் ஒரு கிருத்துவ உட்பிரிவில் பிறந்தார் . இவர்  தனது 20 ஆவது வயதில் இருந்து தனது புதிய மதத்தை போதிக்க ஆரம்பித்தார் . அவரது சொந்த நாட்டில் அவருக்கு எந்த ஆதரவும் கிடைக்கவில்லை . மற்றவர்களால் தூற்ற பட்டார் . பின்பு அவர் இந்தியா வந்து அங்கு இருந்த ஒரு அரசனை மதம் மாற்றுவதில்  வெற்றி கண்டார் . பிறகு 242 ஆம் ஆண்டில் மீண்டும் பாரசீகம் வந்தார் இப்போது அங்கு ஷாப்பூர் என்ற மன்னன் ஆண்டு வந்தான் . அவன் மானிக்கு ஆதரவு அளித்தான் .மானி மேல் மிகுந்த மரியாதை வைத்திருந்தான் .அவருக்கு தடையில்லாமல் மதத்தை போதிக்கும் உரிமை வழங்க பட்டது . ஷாப்பூர்க்கு பின்னர் வந்த முதலாம் ஹார்மிஸ்ட் காலத்திலும் இவருக்கு ஏராளமான ஆதரவாளர்கள் பெருகினார்கள் . அதே நேரம் சஸ்சானிட் அரசின் அரசு சமயமாக திகழ்ந்த பார்சி குருமார்கள் . மானியை பழிவாங்க காத்திருந்தனர் .
ஹார்மிஸ்ட்க்கு பிறகு அரியணை ஏறிய முதலாம் பஹ்ராம் சமய சகிப்பு இல்லாதவர் . அவர் மாணியை கைது செய்து சிறையில் அடித்து 26  நாள் சித்திரவதை செய்து கொன்றார் .அவர் இறந்த ஆண்டு கி.பி.276 .

                                         இறைமையியல்  :-


இது தான் உண்மையில் கருத்தை கவரும் வித்தியாசமான பார்வை கொண்ட அம்சங்கள் நிறைந்தது . கிறித்தவ மதமும், யூத மதமும் நன்மைதீமை என்ற கோட்பாட்டிற்குள் அடங்கியவை என்றாலும் தீமையை விளக்கி கூற முடியாத சித்தாந்த சிக்கலில் இருக்கும்போது . இவர் மட்டும் இந்த உலகை ஒரு கடவுள் ஆளவில்லை நன்மை தீமை இரண்டும் சம வலிமை கொண்டவை . இதில் தீமை என்பது இருளாகவும் பருபொருளாகவும் உருவக படுத்துகிறார்
நன்னெறி என்பது ஒளியாகவும் ஆன்மாவாகவும் கருத படுகிறது . அதனால் உடல் என்பது தீய சக்தி ஆன்மா என்பது
நன்னெறிஎன்பதால் உடல் உறவு கொள்வது கூட தடை செய்யபடுகிறது .........................
ஆனால் அவை சாதாரண பாமரர்களுக்கு இல்லை . மத போதகர்களாக இருக்கும் மேட்டு குடி களுக்கு மட்டுமே பொருந்தும் .(பிற்காலத்தில் இதை கிருத்துவமதம் எடுத்து கொண்டது ) இவர்கள் இறந்தால் நேரடி சொர்க்கம் கிடைக்கும் . ஆனால் பாமரர்கள் முதல் நிலை சொர்கத்தில் அனுமதிக்க பட்டு பின்னர் . பல சோதனைகளுக்கு பிறகு மேல் நிலை சொர்கத்தை அடையலாம் ...
இது ஒரு வகையில் ப்ளேட்டோவின்  குடியரசு தத்துவத்தை ஒத்திருப்பதை காணலாம் .கத்தோலிக்க திருச்சபைகளில் இந்த முறை பின்பற்ற படுகிறது . இதற்க்கு காரணம் கிருத்துவ இறைமையியல் கொட்பாட்டை  தொகுத்து அளித்த புனித அகஸ்டைஸ் ஒன்பது ஆண்டுகள் மானி மதத்தில் இருந்தார் .
இவர் புத்தர் , ஏசு , போன்றவர்களை இறைதூதர்களாக ஏற்று கொண்டார் . என்றாலும் அவர்களை விட அதிகமான இறை செய்தி தனக்கு வந்ததாக கூறிகொண்டார் (இதே முறையை பின்னாளில் நபிகள் பயன்படுத்திகொண்டார் )
இது ஆரம்பத்தில் இருந்தே சகிப்பு தன்மை அற்ற மதமாக தான் இருந்தது .

                                                   மதம் பரவுதல்

மானி காலத்தில் இந்த மதம் நன்றாக பரவி ஓரளவு ஸ்திர தன்மை பெற்று விட்டது எனலாம் . இதன் இறைமையியல் கோட்பாட்டை இவரே உருவாக்கினார் .இவர் காலத்தில் பாரசீகம் முதல் இந்தியா வரை வேகமாக பரவியது . அதன் பின்னர் ஆயிரம் ஆண்டுகளுக்கு உலகின் பெரிய சமயங்களில் ஒன்றாக திகழ்ந்தது . இது உச்ச கட்டத்தில் இருக்கும் போது இதில் இருந்து பல்வேறு கிளை சமயங்கள் எழுந்தன . ஏழாம் நூற்றாண்டில் பைசாண்டியத்தில் தோன்றிய பாலிசியன்னும் பத்தாம் நூற்றாண்டில் பால்க்கன் நாடுகளில் தோன்றிய போகோமில்ஸ் . கிழக்கு ஐரோப்பாவில் கேதாரி என்ற கிளை இது பிரான்ஸ் நாட்டில் செல்வாக்கோடு இருந்தது . இங்கு பலர் மானி சமய கோட்பாடுகளை கடை பிடித்தாலும் தங்களை கிருத்துவர்கள் என்று சொல்கிறார்கள் ஆனால் கிருத்துவர்கள் அவர்களை ஏற்று கொள்வது இல்லை .மத்திய கால ஐரோப்பாவில் மிக பெரிய செல்வாக்கோடு இந்த மதம் ஏறதாழ ஆயிரம் ஆண்டுகள் கோலோச்சியது .ஆசியாவில் இந்தியா சீனா மற்றும் எகிப்து என்று அனைத்து கண்டங்களிலும் பரவி உச்ச நிலையில் இருந்தது 


                                                     மதத்தின் வீழ்ச்சி  

 ஐரோப்பாவில் உச்ச மதமாக இருந்த இதன் வீழ்ச்சிக்கு பெரும்பாலும் கிருத்துவ மதமே காரணம் எனலாம் . மூன்றாம் போப் இன்னொசென்ட் என்பவர் இவர்களை அளிக்க சிலுவை போர் நடத்தும் படி ஆணையிட்டார் . 1209 ஆண்டு தொடங்கிய இந்த சிலுவை போர் பல ரத்த வெறியாட்டத்திற்கு பிறகு 1244 ஆம் ஆண்டு முடிவடைந்தது . அதீத கட்டுபாடுகள் நிறைந்த இந்த மதம் ஐரோப்பாவில் 1000 ஆண்டுகள் கோலோச்சியது ஆச்சரியமான விஷயம் .மானி நிறைய புத்தகங்கள் எழுதியுள்ளார் . அவை யாவும் மானி சமயத்தின் வேதமாக கருத படுகிறது . மதத்தின் அழிவோடு அதன் நூல்களும் அழிக்க  பட்டு விட்டது . 


பின்குறிப்பு :- எவ்வளவு உச்ச நிலையில் இருந்தாலும் எந்த மதமும் நிரந்தரமானது அல்ல . மனிதனுக்கு தேவை படும்போது கடவுளையே மாற்றிவிடுவான் .என்பதற்கு மானி மதம் ஒரு சிறந்த எடுத்துகாட்டு .

அதனால் மதத்தை வளர்ப்பது மட்டுமே மனிதனின் பணி  என்று  இருப்பது மிக பெரிய மடத்தனம். காலம் எல்லாவற்றையும் அழித்து புதிய கோடுகளை போட்டு கொண்டே இருக்கும் .

அடுத்த பதிவு மகாவீரர் 

 

மதம் (பாகம் ஒன்று )படிக்க இங்கே செல்லவும் 

Monday, September 24, 2012

மதம் (பாகம் ஒன்று )

v
 
                                                                                                      
இந்த வார்த்தைக்கு தமிழில் மட்டுமே சிறப்பான அர்த்தம் உள்ளதாக நான் கருதுகிறேன் .
இந்த உலகில் பல கால கட்டத்தில் பல வித தத்துவங்கள் மதமாக பரினவித்து உள்ளன .
அவற்றில் பல மதங்கள் முற்றிலும் அழிந்து போய்விட்டது .எப்படி ஒவ்வொரு உயிருக்கும் தோற்றம் ,மறைவு  இருக்கிறதோ . ஒவ்வொரு சாம்ராஜ்யத்துக்கும் தோற்றம் மறைவு இருக்கிறதோ . அதேபோல ஒவ்வொரு மதத்திற்கும் தோற்றம் மறைவு கண்டிப்பாக உண்டு . இப்படி அழிந்து போன மதங்கள் ஒரு கால கட்டத்தில் மிகவும் செல்வாக்கான உச்ச நிலையில் இருந்தவைதான் என்பதை நாம் மறக்க கூடாது .

இவ்வாறு அழிந்த அல்லது அழியும் நிலையில் இருக்கும் மதங்களை பற்றி ஒரு தொடராக எழுதலாம் என்று இருக்கிறேன் . உங்கள் ஆதரவை பொருத்து ...

சொராஸ்ட்ரியம்:-
(zoroastrianism ):-
                                      இந்த மதம் சொராஸ்டார் என்பவரால்  தோற்றுவிக்க பட்டது .இவரை பற்றி தகவல்கள் மிக அரிதாகவே கிடைக்கிறது . இன்றைய வடக்கு ஈரானின் ஒரு பகுதியில் கி.மு. 628  இவர் பிறந்திருக்கலாம் என்று அறிய படுகிறது . இவரது  இளமை காலம் பற்றி எந்த தகவலும் இல்லை . எந்த சமயத்தில் இவர் இறை அருள் பெற்றார் என்றும் தெரிய வில்லை ஆனால் தனது 40 ஆம் வயதில் வடகிழக்கு ஈரானிய மன்னன் விஷ்டாஸ்பா என்பவரை தன் சமயத்திற்கு மாற்றுவதில் வெற்றி கண்டார் . அந்த மன்னரே பிற்காலத்தில் இவரின் நண்பராகவும் பாதுகாவலனாகவும் இருந்தார். இவர் 77 ஆண்டுகள் உயிரோடு இருந்தார் .கி.மு. 551  ஆண்டு வாக்கில் இவர் இறந்திருக்கலாம் ..

இறைமையியல்  :-
                              அத்வைதமும் துவைதமும் இணைந்த ஒரு கலவைதான் இந்தமதம் .  இவர் கருத்து படி ஒருவனே தேவன் . அவர் பெயர் "அஹூரா மாஜ்டா " அதன் அர்த்தம் மெய் அறிவு பெருமான் . அதே போல் இந்த உலகில் தீய சக்தி இருக்கிறது அதன் பெயர் "அங்ரா மைன்யு " இது தீமையும் பொய்மையும் ஊக்குவிக்கும் ..
இந்த இரு சக்திகளின் போராட்ட களம் தான் இந்த பூமி . இதில் நன்மையை ஆதரிப்பதா ,.? அல்லது தீமையை ஆதரிப்பதா .?என்பதை ஒவ்வொரு மனிதனும் தேர்ந்தெடுக்க உரிமை உள்ளவர்கள் . தற்போது இது நெருங்கிய போராட்டமாக இருந்தாலும் நீண்ட கால போக்கில் நன்மையே வெல்லும் என்பது சொராஸ்டார்களின் நம்பிக்கை .
துறவு வாழ்வை இந்த சமயம் கடுமையாக எதிர்க்கிறது மிகவும் விசித்திரமான சமய சடங்குகள் இவர்களிடம் உண்டு .
நெருப்பை புனிதமாக கருதுவார்கள் . இவர்கள் கோவிலில் ஒரு அணையா தீபம் ஒன்று இருக்கும் .
இவர்கள் இறந்தவர்கள் உடலை அப்புற படுத்தும் முறை மிக விசித்திர மானது . அதை எரிக்கவோ புதைக்கவோ கூடாது . மலை உச்சிகளில் கழுகுக்கு இரையாக வைத்து விடுவார்கள் .

மதம் பரவுதல் :-
                                 இவர் வாழ்ந்த காலத்திலே ஓரளவு வெற்றி பெற்ற மதமாக இருந்தாலும் .கி.மு.6 ஆம் நூற்றாண்டில் மகா சைரஸ் என்ற மாவீரன் பாரசீகத்தோடு இரானை இணைத்துகொண்டான் .அடுத்த 200  ஆண்டுகளில் பாரசீக மன்னர்கள் இந்த மதத்தை தழுவினார்கள் . இந்த சமயத்திற்கு ஆதரவு பெரிய அளவில் பெருகியது .

மதத்தின் வீழ்ச்சி :-
                                     கி.மு.4 காம் நூற்றாண்டில் அலெக்சாண்டர் படையெடுப்பினால் இந்த மதம் கடுமையான வீழ்ச்சியை சந்தித்தது . எனினும் மீண்டும் பாரசீகர்கள் அரசியல் சுதந்திரம் பெற்றதும் மீண்டும் இது புத்துயிர் பெற்றது .
சாஸ்சானிட் அரசர்களின் காலத்தில் (கி.பி.226 -651 ) இது அரச சமயமாக ஏற்று கொள்ளப்பட்டது ...
என்றாலும் இதற்க்கு கடுமையான வீழ்ச்சி ஏற்பட்டது கி.பி. 7 ஆம் நூற்றாண்டில் பாரசீகத்தை முஸ்லீம்கள் கைப்பற்றிய பின்புதான் ஏற்பட்டது .மிக கடுமையான முறையில் இவர்கள் மதம் மாற்ற பட்டார்கள் .
பலர் சலுகைகளுக்காகவும் உயிருக்கு பயந்தும் மதம் மாறினார்கள் . எஞ்சி இருந்தவர்கள் கி.பி. 10 ஆம் நூற்றாண்டில் இரானில் இருந்து தப்பி ஹார்மொஸ் என்ற தீவில் தஞ்சம் புகுந்தார்கள் . பிறகு அவர்களின் சந்ததிகள் இந்தியா சென்று அங்கு அவர்களுக்கு ஒரு சிறு குடியிருப்பை ஏற்படுத்தி கொண்டார்கள் . பாரசீகத்தில் இருந்து வந்ததால் இவர்கள் பார்சி என்று அழைக்க படுகிறார்கள் ..ஏறதாள   1 ,50000  லட்சம் பார்சிகள் இந்தியாவில் இருக்கிறார்கள் இது மிக சிறு தொகை என்றாலும்  இந்த மதம் முழுவதுமாக அழியவில்லை என்பதற்கு இதுவே அத்தாட்சி . ஒரு காலத்தில் மிக அதிகமான செல்வாக்கோடு இருந்த சமயம் இது அதே நேரம் உலகின் தொன்மையான மதங்களில் ஒன்று . இதன் இறைமையியல் செல்வாக்கு .யுத மதத்திலும் கிறித்துவ மதத்திலும் மற்றும் இதற்க்கு பின்னர் தோன்றிய மானி மதத்திலும் மிக பெரிய செல்வாக்கை செலுத்துகிறது ..

குறிப்பு :-அடுத்த பகுதியில் மானி மதத்தை பற்றி எழுதுகிறேன் .

Monday, September 10, 2012

பிரபல பதிவரும் கிழிந்த டவுசரும் .

v


தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்யன் . மீண்டும் சுடுகாடு வந்து சேர்ந்தான் .ஆனால் இம்முறை வேதாளத்தை கண்டு லேசாக பயம் வந்துவிட்டது .இது கேக்குற கேள்விக்கெல்லாம் நம்மளால் பதில் சொல்ல முடியாது சாமி ..அதனால் யாராவது அப்பிராணி கிடைத்தால் நல்லாஇருக்கும் என்று நினைத்து அங்கு சுற்றி கொண்டிருந்த தேவாங்கை தூக்கி தன் தோளில் வைத்து கொண்டு புறப்பட்டான் ...........

போகும் வழியில் போர் அடிக்காமல் இருக்க. ஒரு கதை சொல்லுங்க தோழர் என்று தேவாங்கு கேட்க .ஏன் அதை நீங்க சொன்னதில்லையா தோழர். என்று விக்கி பதில் அளிக்க . ஆஹா இன்னைக்கு பொழுது நல்லா போயிடும். ஒரு ஆடு சிக்கி இருக்கு என்று தேவாங்கு நினைத்து கொண்டு கதையை ஆரம்பித்தது .

ஒரு ஊருல நாலு பதிவர்கள் இருந்தாங்களாம் . ஒருத்தர் பேரு இங்கி, அடுத்து பிங்கி ,அப்புறம் பாங்கி , கடைசி பதிவர் பெயரு டாங்கி , இந்த நாலு பெயருக்கும் திடீர்ன்னு ஒரு சந்தேகம் . நம்ம நாலு பேரில் யார் பிரபல பதிவர் ..? யார் அதி முக்கிய பதிவர் ,? யார் "முக்கிய " பதிவர்ன்னு . இங்கி சொல்றாரு நான் மஞ்சள் துண்டு போட்டிருக்கேன் அதனால் நான் தான் பிரபல பதிவர்ன்னு . பிங்கி நான் ரொம்ப ஏழை. அந்த பிரபல பதிவர் பட்டதை எனக்கே குடுத்து விடுங்கள் என்று . பாங்கி சொல்றாரு என் இடுப்பை கிள்ளி பாருங்க நான் துள்ளுவேன். அதனால நாந்தான் பிரபல பதிவர் ,டாங்கி மட்டும் என்ன லேசு பட்டதா? நான் நிறைய அழுகாச்சி காவியம் எல்லாம் எழுதி இருக்கேன் அதனால் நாந்தான் பிரபல பதிவர்ன்னு ...

இவங்க கதை இப்படி இருக்க. ஒரு நாள் சைக்கிள் ரிக்க்ஷாவில் 
பதிவர்கள் மாநாடு நடக்கிறது அனைவரும் வாரீர்ன்னு விளம்பரம் பண்ணீட்டு போயிட்டாங்க . இவங்க நாலு பேருக்கும் ஒரே மண்ட குழப்பம் ஆகிடிச்சி . என்னடா இது நாம நாலு பேரும்
இங்க இருக்கோம். . அப்புறம் எப்படி மாநாடு .? வேறு யாரும் பதிவு எழுதுகிறார்களா என்ன ..? அப்படி எழுதினால் அவர்கள் யாரென்று போயி பார்த்துவிடலாம். என்று பாங்கி சொல்ல . இல்லை நாமெல்லாம் பிரபல பதிவர்கள். அந்த விளம்பரத்தை நல்லா பாரு அது "வெறும்" பதிவர்கள் மாநாடு என்றுதான் போட்டிருக்கு . பிரபல பதிவர்கள் மாநாடு என்று இருந்தால் நாம் போகலாம் என்று டாங்கி சொன்னது , அதற்க்கு இங்கி அட அவசர படாதீங்கப்பா நாம இங்கயே உக்காந்து இருப்போம் இன்னும் கொஞ்ச நேரத்தில் பார்த்தசாரதி கோயில் யானை வரும் . அதன் துதிக்கையில் மாலை  இருக்கும் . அது நம்ம நாலு பேருக்கும் மாலை போட்டு பரிவட்டம் கட்டி நம்மளை விழா மேடைக்கு கூட்டிபோகும் . அங்கே நம்மளை நடு சென்டரில் வைத்து விருது குடுப்பார்கள் . அதனால் நாம் இங்கனயே குத்த வச்சி இருப்போம் . என்று சொல்லி அங்கேயே உக்கார்ந்து விட்டார்கள் .பாவம் அவர்கள் எதிபார்த்த யானை வரவே இல்லை .


இப்போது அவர்களுக்கே சந்தேகம் வந்து விட்டது உண்மையில் யார் பிரபல பதிவர் என்று . இந்த கேள்வியை தான் நான் உன்னிடம் கேட்க போகிறேன் விக்கிரமா . இவர்களில் உண்மையில் யார் பிரபல பதிவர் என்று . நீ சரியான விடை கூறிவிட்டால் காலா காலத்திற்கும் உன் வீட்டில் பத்து பாத்திரம் தேய்க்கிறேன் .

விக்கிரமன் தேவாங்கை பார்த்தான் அருகில் இருந்த மரத்தை பார்த்தான் . இதை விட அது பெட்டர் என்று முடிவு செய்து . தேவாங்கை கீழே இறக்கிவிட்டு அந்த மரத்தில் தூக்கு மாட்டிகொண்டான் ........................................................................................தி எண்டு 

........................................................

 

 

தொடர்புடைய குட்டி சீ........ சீ.........சுட்டி இதை கிளிக்கி பார்க்கவும்
 

Saturday, September 8, 2012

விகடனின் சதி அம்பலம்

v

                   
இந்த வலை உலகில் ஆரம்பதில் ஒரு பார்வையாளனாக என் பயனத்தை ஆரம்பித்த நான் விதி வசத்தால் பன்னிகுட்டி, மங்குனி அமைச்சர். போன்ற சான்றோர்களின் பதிவுகளை படிக்க நேர்ந்தது . அதுவரை வெறுமனே கமன்ட்டி கொண்டிருந்த நான் பதிவு எழுதும் துணிச்சல் பெற்றேன் . (நீ எல்லாம் பதிவு எழுதும் போது) .
சரி எழுதலாம் என்றால் எதை எழுதுவது எனக்கு பிடித்த வரலாறு அறிவியல் ,எழுதலாம் என்றால் அவ்வாறு எழுதுபவர்கள் ப்ளாகை சென்று பார்வை இட்டால் 100 முதல் 160 பதிவுகளுக்கு மேல் எழுதிவிட்டு வெறும் 2000 ஹிட்ஸ் மட்டும் வாங்கி ஒலிம்பிக்கில் இந்தியா போல் பரிதாபமாக இருந்தார்கள் .
இன்னொரு பக்கம் ஒரு மொக்கை பதிவு போட்டுவிட்டு 400  கமன்ட்டுகளுக்கு மேல் வாங்கி கொழு...கொழு என்று கொழுத்திருந்தது இன்னொரு கூட்டம் . நீங்களே ஊகித்து கொள்ளுங்கள் நான் எந்த வழியை தேர்ந்து எடுத்திருப்பேன் என்று . இப்படி எனக்கு நேரம் கிடைக்கும் போது அல்லது எனக்கு தோன்றும் போது மட்டும் பதிவுகளை போட்டு இந்த பதிவுலக வானில் சுதந்திர பறவையாக சுற்றி கொண்டிருந்த என்னை ...வெறும் ஸ்பெசல்சாதா  பதிவரான என்னை ............பிரபல பதிவர் ஆக்கும் சதி நடக்கிறதோ என்று அச்சபடுகிறேன் .
அந்த சதியின் ஒரு பகுதியாக விகடனின் வலையோசையில் என்னை அறிமுகம் செய்துவிட்டார்கள் . அதுவும் யார் பிரபல பதிவர் என்று பதிவுலக பஞ்சாயத்து நடக்கும் இந்த நேரத்தில் .இதில் வெளிநாட்டின் கை இருக்குமோ ..என்னமோ போங்க எனக்கு இப்பவே தலைக்கு மேல கொம்பு முளைக்கிற மாதிரி இருக்கு . நாக்கு நீளுது ..வாயெல்லாம் அசைபோட தோணுது ..........

Friday, August 24, 2012

தமிழ் பதிவர் சந்திப்புக்கு வர முடியாதவர்கள் என்ன செய்யலாம் !

v

சென்னைப் பதிவர் சந்திப்பு ஏற்பாடுஆகிவிட்டது. தமிழ்நாட்டில் இருக்கும் பதிவர்கள் பலர் கோலகலத்துக்கு தயாராகிவிட்டார்கள். ஆனால் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், மத்தியக் கிழக்கு, ஐரோப்பா, அமெரிக்கா, கனடா மற்றும் உலகெங்கும் உள்ள பதிவர்களால் கலந்துக் கொள்ள முடியவில்லை என்ற வருத்தம் இருக்கின்றது. ஒரு விடயத்தில் நேரில் கலந்துக் கொள்ள முடியாவிட்டாலும் நாம் நமது உளப் பூர்வமான ஆதரவை (Solidarity)தெரிவிப்போம் அல்லவா. ஆனால் சற்றே ஒரு வித்தியாசமான யோசனை எனக்குத் தோன்றியது. இணையத்தில் உலாவும் நாம் எதாவது செய்தே ஆக வேண்டும் என்ற எண்ணம் உதித்தது. 
பதிவர் சந்திப்பு நடக்கப் போகும் நாள் ஞாயிறு ( August 26, 2012 ), கலந்துக் கொள்ளப் போவது சுமார் 200 -500 வரையிலான பதிவர்கள். ஞாயிறு பலருக்கும் விடுமுறையாகவே இருக்கும் அல்லவா.  ஆனால் தமிழில் எழுதும் ஆயிரக் கணக்கான நாம் என்ன செய்யலாம்.
வீரராகவன் சம்பத் : குப்பையாக விரவிக் கிடக்கும் இணைய செய்திகளை வகைப்படுத்த வந்த ஒரு எளிய முறை தான் # பயன்பாடு. உங்கள் செய்தி எதைப் பற்றியது என்று இரண்டு மூன்று keywords இட்டு இணைப்பது போல. உதாரணத்திற்கு, இந்த பத்தியின #tamilblogger என்று வகைப்படுத்தினால், தேடுபவர்களுக்கு எளிதாகக் கிடைக்கும். நிறைய பேர் ஒரே குறியீட்டுச் சொல்லை ஒரே நேரத்தில் பயன்படுத்தினால், அந்தக் குறியீட்டை கண்டறிந்து Trending topics என்று "தலைப்புச் செய்தி" ஆக்கி விடலாம். நிறைய உதாரணங்களை நீங்கள் Twitter Timeline-ல் பார்த்திருப்பீர்கள்.
ட்விட்டர் வந்த பின் தான் # பயன்பாடு பரவலானது. தற்போது Google+ம் இதைப் பயன்படுத்தி வருகிறது.#ஐ சரியாக பயன்படுத்தினால், இணையம் வழி பல கூட்டு முயற்சிகளை நாம் மேற்கொள்ளலாம். அவை எல்லாவற்றிற்கும் அடிப்படை புரிதல் அவசியம். 

இருக்கவே இருக்கு ட்விட்டர். பதிவர் சந்திப்பு நடக்கும் அந்த நாளில் தயவு செய்து ட்விட்டரில் தொடர்ந்து ட்விட் மழை பொழிய வாருங்கள். உங்களுக்கான குறிச்சொல் ஒன்றையும் உருவாக்கி இருக்கின்றேன். 
#tamilbloggers
நிச்சயம் உங்களின் பேஸ்புக், ட்விட்டர், கூகிள் ப்ளஸ் நண்பர்களை ஞாயிற்றுக்கிழமை முழுவதும் ட்விட்டரில் ட்விட் மழை பொழியும்படிக் வேண்டிக் கொள்ளுங்கள். நேரில் போகாவிட்டாலும் அவர்களுக்கான ஆதரவுக் குரலை ட்விட்டரில் கொடுப்போம். குறைந்தது இந்திய அளவிலாவது #tamilbloggers -ஐ trend செய்ய வைப்போம். 
நான் தயார் ! நீங்கள் தயாரா ? இந்தப் பதிவை நீங்கள் மீள்பதிவு செய்யவும், பேஸ்புக் உட்பட எதிலும் பகிர்ந்து கொள்ள அனுமதிக்கின்றேன். நன்றிகள் !!!
 
நன்றி இக்பால்செல்வன்
இவர் முயற்சிக்கு அனைவரும் ஒத்துழைப்போம் .
http://www.kodangi.com/2012/08/sypport-tamil-bloggers-conference-in-twitter.html

Wednesday, August 22, 2012

மதுவா ...மதமா ...எதில் போதை அதிகம் .?

v


போதை என்ற சமாசாரம் இல்லாமல் இந்த உலகில் எந்த மனிதனும் வாழ்ந்துவிட முடியாது .
என்ன போதைக்கான சமாசாரம் மட்டும் மாறுபடும் . சிலருக்கு மது என்றால் வேறுசிலருக்கு பெண்கள் . சிலருக்கு சிகரெட் . பலருக்கு மதம் .விஷயம் தான் மாறுபடுமே தவிர விளைவு எல்லாம் ஒண்ணுதான் .
சரி இப்போ மது என்ன செய்யும் மதம் என்ன செய்யும் என்று பார்ப்போம் .

மது :- தைரியமும் தன்னம்பிக்கை குறைந்தவன் கூட மது உள்ளே போய்விட்டால் தன்னை ஒரு மாவீரனாக நினைத்து கொள்வான் ....த்தா ஆம்பிளையாய் இருந்தா மேல கை வச்சி  பாருடா ..என்று உச்சஸ்தாயில் கத்திக்கொண்டு ஒரு உயர்வு மனப்பான்மையான மனநிலையில் இருப்பான். அதுவும் தூங்கி எழுந்தால் தெளிந்துவிடும் .

மதம் :- தன் மதம் தான் உயர்ந்தது தாங்கள் தான் ஆழப்பிறந்தவர்கள் .மற்றவர்கள் எங்களுக்கு சமம் கிடையாது . எங்கள் சொல்படி மற்றவர்கள் கேட்க வேண்டும். மற்றவர்கள் சொல்லை ஒருபோதும் நாங்கள் கேட்க மாட்டோம் .
என்று ஒரு உயர்வு மனப்பான்மையான மனநிலையில் இருப்பார்கள் . இது தெளியவே தெளியாது  .

மது :- சில குடிகாரன் (நிச்சியமாக எல்லாரும் அல்ல ) பெண்கள் மேல் வன்கொடுமை செய்கிறார்கள் .மனைவியை குடித்துவிட்டு அடிப்பது போன்ற செயல் . கடுமையாக கண்டிக்க படவேண்டிய செயல் . போதை தெளிந்தவுடன் யாராவது கண்டித்தால் சிலர் அமைதியாக கேட்டு கொள்வார்கள் .

மதம் :- எங்கள் மதமே மனைவியை அடிக்கும் உரிமையை குடுத்திருக்கு . (எல்லா மதமும் அல்ல)அதை கேட்க யாருக்கும் உரிமை இல்லை . பெண்கள் நமக்கு சமமானவர்கள் இல்லை .அவர்களுக்கு சுதந்திரம் அளிக்க கூடாது . எல்லோரும் 1600  ஆம் நூற்றாண்டிலேயே வாழ வேண்டும் . அதை தாண்டி ஒரு பயலும் அடுத்து நூற்றாண்டுக்கு போக கூடாது .மீறி போனால் குண்டு வைத்து கொன்னுபுடுவோம் . என்று அடுத்தவர்களுக்கு உபதேசம் செய்வது ஒரு வகையான போதைதான் .

மது :- இந்த போதை அதிகமாக ஆகிவிட்டால் . தெரு என்று கூட பார்க்காமல் கீழே படுத்து விடுவார்கள் . ஊரே சுற்றி நின்று வேடிக்கை பார்க்கும் .

மதம் :- இந்த போதை அதிகம் ஆகிவிட்டால் தெருவில் கூட்டம் போட்டு . மற்ற மதத்தினரை வசை பாட வைக்கும் .
               ஊரே சுற்றி நின்று வேடிக்கை பார்க்கும் .

மது :- அரசு கட்டிடம் என்றோ பள்ளி கட்டிடம் என்றோ எதை பற்றியும் கவலை படாது . உச்சா வந்தால் ஒரே சொயிங் தான் .........

மதம்  :- வரலாற்று கட்டிடம் கலைபோக்கீஷம் . பண்டைய நினைவு சின்னம் என்று எதையும் பார்க்காது . போதை தலைக்கு ஏறிவிட்டால் இடித்து தரை மட்டம்தான் .

மது :- அளவிற்கு அதிகமாக போனால் தன் உடம்பை கெடுத்து மரணம் வரை கொண்டு வந்துவிடும் . பாதிப்பு அவனுக்கும் அவனை சார்ந்த குடும்பத்திற்கும் .

மதம் :- அளவிற்கு அதிகமாக போனால் மற்றவர்கள் உயிரை கூட துச்சம் என மதிக்கும் . கொலை செய்வது கூட புனித பணி ஆகி விடும் .

மது :- தன் மன அழுத்தம் போக்கவோ அல்லது நண்பர்களுடம் சந்தோஷத்தை அல்லது துக்கத்தை பகிர்ந்து கொள்ள இதை நாடுபவர்கள் அதிகம்

மதம் :- செத்த பிறகு சொர்க்கம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் . உயிரோடு வாழ்ந்து கொண்டிருக்கும் பூமியை நரகமாக ஆக்குபவர்கள் அதிகம் .



மது :- இதை குடித்து விட்டு பதிவு எழுதினால் .டேய் என்னங்கடா படம் எடுக்கிறீங்க . த்தா என்று அநாகரீகமான வார்த்தை சொல்லாடல் எல்லாம் வரும் .

மதம் :- ஈ படத்திற்கு விமர்சனம் எழுத அமர்ந்தாலும் ஏழு குரான் வசனங்களை உள்ளே சொருகி பதிவிட வைக்கும் .

கடைசியாக ஒன்று மது குடித்து இந்த பூமியில் செத்தவனை விட . மத போதை தலைக்கு ஏறி வெட்டிக்கொண்டு செத்தவர்கள் எண்ணிக்கை பலாயிரம் மடங்கு அதிகம் .

நண்பர்களே உண்மையில் எந்த போதை அதிக ஆபத்தானது ......................?

Monday, August 20, 2012

பதிவர் மாநாட்டு தகவல்கள் (அறிய படங்களுடன்)

v
வரலாற்று சிறப்பு மிக்க அந்த மாநாடு இதோ பக்கத்தில் வந்து விட்டது ...

பதிவர்களின் புண்ணியத்தை வணங்கி கட்டிகொள்ளபோகும் மண்டபம் இதுதான் ..
முக்கிய குறிப்பு :-இங்கிருந்து உள்ளேசென்று ஒரு 25  அடி எடுத்து வைத்தால் சாப்டுற இடம் வந்திரும் ..


மண்டபத்தின் ஹால் இதுதான் கட்டி உருண்டாலும்  கலவரமே நடந்தாலும் . வெளியே யாருக்கும் தெரியாத அளவிற்கு பாதுகாப்பானது .இதன் கொள்ளளவு ஆரூர் . மூனா செந்திலை போல் ஒரு ஐநூறு பெயரை தாங்கும் அளவிற்கு வலுவானது என்று தெரிவிக்கிறார்கள் .
முக்கிய குறிப்பு :-இங்கிருந்து  ஒரு 20  அடி கீழே எடுத்து வைத்தால் சாப்டுற இடம் வந்திரும் ..



வரலாற்று சிறப்பு மிக்க தீர்மானங்கள் பல எடுக்க போகும் விழா மேடை இதுதான் ..

முக்கிய குறிப்பு :-இங்கிருந்து  ஒரு 40  அடி கீழே எடுத்து வைத்தால் சாப்டுற இடம் வந்திரும் ..



திரும்பிகிற பக்கம் எல்லாம் ஏசியோ..... ஏசி . கார் ஏசி கக்கூஸ் ஏசி ஒரே ஏசிதான் போங்க ....

முக்கிய குறிப்பு :-இது சாப்பிடுற இடத்திற்கு மிக அருகில் உள்ளது .



இந்த இடம்தான் த்ரில்லிங்கான இடம் அடிச்சிக்காதீங்க அமைதியா பாருங்க ...
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
இதுதான் சாப்டுற இடம் ......


ஏற்ப்பாடு பெரியது என்பதால் வெளியூர் பதிவர்கள் தங்கள் வருகையை சீக்கிரமே தெரியபடுத்திவிட்டால் . உங்களை உபசரிக்க எங்களுக்கு சவுகரியமாக இருக்கும் ..


அதி முக்கிய குறிப்பு :- நக்கீரன் மாமா டக்கீலாவுடன்
(நன்றாக கவனிக்கவும் ஷக்கீலா  அல்ல டக்கீலா ) சனி அன்றே வருவதாக வாக்கு குடுத்திருக்கிறார் அதனால் அவருக்கு சிறப்பு விருந்தினருக்கான பட்டம் குடுத்து சிகப்பு கம்பள வரவேற்ப்பு தந்து . அவரை தனியாக அடைக்கும்படி நக்கீரன் கண்காணிப்பு குழுவிற்கு வேண்டுகோள் விடுகிறோம் .

Thursday, August 9, 2012

தகத்தகாய தமிழ் பதிவர்கள் மாநாடு

v
மிக பிரம்பாண்டமாக நடைபெற இருக்கும் அனைத்துலக பதிவர்கள் திருவிழாவிற்கான அழைப்பிதழ்





அலைகடலென திரண்டு வாரீர் வஞ்சம் தீர்த்து கொள்ள வசதியான இடம் என்பதால் பதிவுலக சண்டியர்கள் பயன்படுத்திக்கொள்ளவும் .
  ****************************************************************

டெசோ மாநாடு இலங்கை அரசுக்கு எதிரானதல்ல மு .கருணாநிதி # சமயத்துல குடிகாரன் பேச்சி கூட தெளிவா புரிஞ்சிடும்.

Monday, July 16, 2012

பில்லா வாயில வருது நல்லா ....

v

ஆரம்பத்திலேயே சொல்லிடுறேன் எனக்கு விமர்சனம் எல்லாம் எழுத வராது .
இருந்தாலும் இந்த படத்தை ரெண்டு முறை பார்க்க வேண்டிய நிலைமைக்கு ஆளாக்க பட்டதினால் ஏற்ப்பட்ட விளைவு தான் இந்த பதிவு .

இந்த படம் ரசிக்கும்படி எடுக்கப்படவில்லை என்ற குறையை தவிர வேறு ஒன்றும் எனக்கு பெருசாக தெரியவில்லை .
சித்தாந்த ரீதியாக பார்த்தால் அந்த கதாபாத்திரம் செய்யும் செயல் எல்லாம் நியாயம்தான் .
அது ஒரு நிழல் உலக தாதா எப்படி உருவாகிறான் என்பது மட்டும்தான் .
டானுக்கு செண்டிமெண்ட் இருக்ககூடாது . எல்லோரையும் எதிரியாக பார்க்கவேண்டும் .இது மட்டும்தான் அடிப்படை
நமக்கு முன்னாள் ஆட்சி செய்த அரசர்களின் வாழ்கையை பார்த்தால் புரியும். எத்தனை கொலைகள் அண்ணன், தம்பி, 
தந்தை என்று யாரை வேண்டுமானாலும் கொன்று சாம்ராஜ்யத்தை நிறுவுவது ஒரு அரசனின் செயல் . இதற்காக பெற்ற மகனை கூட கொன்ற அல்லது குருடாக்கிய மன்னர்கள் பல இது போன்று தான் மன்னர்கள் உருவாக முடியும் சராசரி மனிதனுக்கு இது  நினைக்க முடியாத துயரம் .

படத்தின் ஆரம்பத்திலேயே நாயகன் சொல்லிவிடுகிறார் தீவிரவாதிக்கும் போராளிக்கும் ஒரே ஒரு வித்தியாசம் தான் ஜெயித்தால் அவன் போராளி தோத்தால் தீவிரவாதி .இது ஒரு யூத பழமொழி . நீ கடந்து வந்த பாதையை உன் வெற்றி நியாயபடுத்தி விடும் .

இன்னும் எவ்ளோ நாளைக்கு தான் கதாநாயகன் நல்லது மட்டும் செய்யவேண்டும் என்று அவனை கட்டாய படுத்த போறோம் . அடுத்த கட்டத்தை நோக்கி நகர வேண்டிய நேரம் இது என்று நினைக்கிறேன் . ரொம்ப நல்ல ஹீரோ வேண்டாம் அப்புறம் அவனுங்க முதலமைச்சர் ஆக ஆசை படுவானுங்க.

இந்த படத்திற்கு எதிர்மறை விமர்சனம் வருவது நல்லது தான் . ஆனால் இதுதான் நிசர்தனம் இப்படி ஒரு வாழ்க்கை இருப்பதும் உண்மைதான் .

ஒரு வேளை இந்த படத்தை ரெண்டு முறை பார்ததானால் வந்த பாதிப்பா என்று தெரியவில்லை .
அஜித்தை பாராட்டிதான் ஆக வேண்டும் நான் இப்படிதான் என் வாழ்க்கை நான் வாழ்கிறேன் எனக்கு கார் ஓட்ட வேண்டும் என்றால் கார் ஓட்டுவேன் . படம் நடிக்க வேண்டும் என்றால் நடிப்பேன் . உனக்காக என் வாழ்கை இல்லை . என் வாழ்கை எனக்காக மட்டும்தான் . போலி நல்லவர்கள் வேண்டாம் நிறையா பார்த்தாச்சி இந்த நடிகர்களிடம் என்ன எதிர் பார்கிறீர்கள் நாட்டை காப்பாற்றும் பொறுப்பா.?

நூற்றி ஐம்பது ருபாய் குடுத்து படம் பார்த்துவிட்டு இதில் கருத்து இல்லை லாஜிக் இல்லை என்று சொல்பவர்களுக்கு ..
சினிமாவில் இந்த கருமத்தை எல்லாம் ஏன் தேடுறீங்க . நல்ல புத்தகத்தில் கருத்து தேடுங்க அது நியாயம்.அதை விட்டு விட்டு எல்லா எழவையும் சினிமாவில் தேடுகிற கூட்டமாக இன்னும் எத்தனை ஆண்டுகள் தான் இருக்கபோகிறோமோ.


விடுங்க பாஸ் அவனுங்க பாட்டுக்கு நடிச்சிட்டு போகட்டும் திரை துறையில் இருந்து இன்னொரு முதல்வர் நமக்கு வேண்டாம் ...........

Monday, June 25, 2012

ராஜா என்றாலே இப்படிதானா...?

v

என் கல்லூரி நாட்களில் ராஜா என்று எனக்கு ஒரு நண்பன் இருந்தான் . அவனை ராஜா என்றால் கல்லூரியில் யாருக்கும் தெரியாது . ஏன் அவனுக்கு கூட அது பிடிக்காது கிறுக்கு ராஜா என்றால் அனைவருக்கும் தெரியும் .அவன் கூட போனில் பேசும் போது மாப்பிளே நான் கிறுக்கு ராஜா பேசுறேன் என்றுதான் ஆரம்பிப்பான் . ஆரம்பத்தில் இந்த பெயர்காரணம் எனக்கு புரியாமல்தான் இருந்தது அந்த சம்பவம் நடக்கும் வரை .

நான் இரண்டாம் ஆண்டு படிக்கும் போது என் அறையில் தங்கி இருந்த முதலாம் ஆண்டு மாணவன் ஒருவனை நள்ளிரவு வந்து அடித்து இழுத்து சென்றார்கள் சீனியர் மாணவர்கள் .ஏன் என்று கேட்டதற்கு அவன் ராகிங் செய்த சீனியர் மாணவன் ஒருவனை அடித்து விட்டானாம் இருந்தாலும் அவனை காப்பாற்ற முயற்சி செய்த எங்களை தள்ளி விட்டு கடத்தி கொண்டு போய் விட்டார்கள். அவர்கள் ஒரு இருபது பேருக்கு மேல் இருந்தார்கள் அதனால் எங்களால் தடுக்க முடியவில்லை . சீனியர் ,மானவர்கள் தங்கி இருந்த மேன்சன்க்கு அவனை கொண்டு சென்றதாக கேள்வி பட்டு என் நண்பர்கள் சில பேரை திரட்டி அந்த மூன்று மாடி கட்டடத்தின் கீழே நின்று மேற்கொண்டு என்ன செய்யலாம் என்று ஆலோசித்து கொண்டிருந்தேன் . அப்போது அங்கு வந்து சேர்ந்தான் கிறுக்கு ராஜா.

மாப்பிளே நீ மட்டும் என் கூட வா நாம ரெண்டு பெரும் உள்ளே போகலாம் . மற்றவர்கள் கீழே இருக்கட்டும் . நீதான் நல்லா பேசுவ வா உள்ளே போகலாம் என்றான் . எனக்கும் அது சரி என்று பட்டது எல்லோரும் உள்ளே போனால் சண்டைக்கு வருவதாக புரிந்து கொண்டு கைகலப்பு நடக்க வாய்புள்ளது அதனால் நானும் கிறுக்கு ராஜாவும் உள்ளே செல்ல முடிவெடுத்தோம் . இரண்டாவது மாடியை அடைந்தவுடன் என்னை இருட்டில் ஒரு ஓரமாக நிறுத்தினான் கிறுக்கு ராஜா இடுப்பில் இருந்து ஒரு முழ நீளம் உள்ள கத்தியை எடுத்து என் கையில் குடுத்து வச்சிக்க மாப்பு என்று கையில் திணித்தான் . நான் அதிர்ந்து விட்டேன் அட கிறுக்கா நாம பேச்சு நடத்த வந்திருக்கோம் சண்டைக்கு அல்ல அவர்கள் முப்பது பேர் இருக்கிறார்கள் . கத்தியோடு உள்ளே போவது நாமளே அவர்களுக்கு ஆயுதம் கொண்டு போய் குடுப்பதற்கு சமம் என்று சொல்லி அவன் கத்தியையும் பிடுங்கி அங்கிருந்த கழிவறையில் ஒளித்து வைத்து நல்லபடியாக பேச்சு நடத்தி அந்த மாணவனை மீட்டு கொண்டு வந்தேன் . இந்த முட்டாள் அன்று என்னிடம் கத்தியை காட்டாமல் உள்ளே எடுத்து வந்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்று நினைத்து பார்க்கவே பயமாக இருக்கிறது.

இரண்டாவது ராஜா

சத்தியம் தொலைகாட்சியில் பதிவர்களை வைத்து நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சி செய்ய திட்டம் இட்டபோது பிலாசப்பி மூலமாக அறிமுகம் ஆனவர் இந்த ராஜா பெயர் அக்கப்போர் ராஜா என்று சொன்னார் . முதல் நேரடி நிகழ்ச்சிக்கு இவரை பரிந்துரைத்தேன். மறுநாள் காலை ஒன்பது மணிக்கு நேரடி நிகழ்ச்சி கார் அனுப்புவார்கள் வந்து விடுங்கள் என்று சொல்லிவிட்டு நிம்மதியாக என் வேலையே பார்த்துகொண்டிருந்தேன் .மறுநாள் காலை 8 :30  மணிக்கு அக்கப்போர் ராஜாவிடம் இருந்து எனக்கு போன். எனக்கு தலை வலிக்கிறது என்னால் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியாது வேறுயாரையாவது நீ ஏற்பாடு செய்துகொள் என்று சொல்லி இணைப்பை துண்டித்து விட்டார் . இன்னும் அரைமணி நேரத்தில் ஆரம்பிக்க போகும் நேரடி ஒளிபரப்பிற்கு யாரை தேடுவது ? கடுமையான மன உளைச்சலில் நடை முறை சாத்தியம் இல்லாத முயற்சியை செய்து கொண்டிருந்தேன் . நிகழ்ச்சி ஆரம்பிக்கும் நேரம் சரியாக வந்து சேர்ந்தார் அக்கப்போர் என்ன செல்வின் டென்சன் ஆயிட்டீங்களா ? சும்மா தமாசு பண்ணேன் என்று சொல்லிவிட்டு அவர் சிரித்த சிரிப்பை என்னால் அன்று இருந்த மன நிலையில் ரசிக்க முடியவில்லை .

கடந்த வெள்ளி  இரவு 11 மணிக்கு அக்கபோரிடம் இருந்து போன் வந்தது . செல்வின் நீ தான் நான் பேசும் கடைசி நபர் என் காதலி என்னை ஏமாற்றி விட்டால் நான் விஷம் குடிக்க போகிறேன் . லெட்டர் எழுதி வைத்துவிட்டேன் நீதான் எல்லாத்தையும் கவனித்துகொள்ளவேண்டும் .உன்னையும் சிவாவையும் மட்டும் நான் நம்பி இருக்கேன் என்றார் .
இதை நம்பலாமா வேண்டாமா என்று மனதின் ஓரத்தில் சந்தேகம் எழுந்தாலும் அசட்டையாக கையாளும் விஷயம் இது இல்லை என்பதால் அவரை சமாதானம் படுத்தும் நோக்கோடு நான் பேசிகொண்டிருந்தேன் .திடீர் என்று இணைப்பை துண்டித்து விட்டார் .

நான் பதட்டத்தோடு உடனே கேபிள் அண்ணனுக்கு போன் செய்தேன் . என்னிடம் விளையாடி இருந்தால் அவரிடமாவது உண்மையை சொல்லிவிடுவார் என்று நம்பினேன் . இரு செல்வின் நான் போன் செய்து பார்க்கிறேன் என்று கேபிள் அண்ணன் சொன்னார் .சிலநிமிடத்தில் கேபுளிடம் இருந்து எனக்கு போன் வந்தது. அவன் உண்மையை தான் சொல்றமாதிரி இருக்கு அவன் தங்கி இருக்கும் இடம் தெரியுமா என்று கேட்டார் . எனக்கு தெரியும் நீங்கள் திருவல்லிக்கேணி ரத்னா கபே வந்துவிடுங்கள் . நான் உடனே கிளம்பி வருகிறேன் என்று சொல்லி அடுத்த பத்தாவது நிமிடம் நான் ரத்னா கபேயில் இருந்தேன் . அப்படி என்றால் என்ன வேகம் இருக்கும் என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

ரத்னா கபே வாசலில் நின்று கொண்டிருந்தார் கேபுள் . நான் சென்ற உடன் பதட்டத்தோடு இருந்தவர் இப்போதுதான் ஒரு 108 ஆம்புலன்ஸ் இந்த பக்கமாக சென்றது என்றார் . அது இன்னும் என் பதட்டத்தை அதிகரித்தது .
சரி என்று அவரை கூட்டிக்கொண்டு முருகேசன் நாயக்கர் மேன்சன் சென்றேன் . அங்கு அக்கபோரின் அறையை கண்டுபிடித்து எட்டிப்பார்த்தால் மனிதர் நிம்மதியாக அமர்ந்து பரோட்டா சாப்பிட்டு கொண்டிருந்தார் . எங்களை பார்த்ததும் அட என்னப்பா உண்மைன்னு நம்பிட்டீங்களா.? என்ன கேபுள் அண்ணே நீங்க கூட நம்பீட்டீங்களா என்று யாரும் ரசிக்கமுடியாத சிரிப்பை மீண்டும் சிரித்தார் . எனக்கு வந்த கோபத்திற்கு கையில் வைத்திருந்த ஹெல்மட்டை தூக்கி எறிந்தேன் அது அவர் மேல் படவில்லை கோவத்தில் அசிங்கமாக திட்டி விட்டு நானும் கேபுளும் கிளம்பி விட்டோம் . மனம் சகஜ நிலையை அடைய சில மணி நேரம் ஆனது .

இப்படி தேவை இல்லாமல் மற்றவர்களுக்கு மன அழுத்தம் குடுத்து அதில் மகிழ்ச்சி காணும் நபர்களை என்னதான் செய்வது அவர்களை தவிர்ப்பதை தவிர ........ 

Monday, May 21, 2012

இனிதே நடந்தேறிய பதிவர்கள் சந்திப்பு

v


சென்னையில் நேற்று நடந்த இளம் பதிவர்கள்  சந்திப்பு நாங்கள் நினைத்ததை விட மிக சிறப்பாக நடந்தேறியது மகிழ்ச்சி அளிக்கிறது .
இதை வெற்றிகரமாக நடத்தி காட்டியதில் மதராசபவனின் பங்கு அளப்பரியது எல்லா புகழும் சிலுவை குமாருக்கே .
சாதனையாளர்களை அழைத்து கவுரவிக்கும் படி எங்களுக்கு ஆலோசனை சொன்ன ஆபீசர் சங்கரலிங்கம் சாருக்கு எத்தனை நன்றிகள் சொன்னாலும் போதாது . ஏனென்றால் அவர்களால் தான் இந்த நிகழ்ச்சி அழகேரியது .
ஆரூர் மூனா மனிதர் கடுமையாக இழைத்திருக்கிறார் சாரி உழைத்திருக்கிறார் மற்றும் பிலாசபிக்கு நன்றி ..

முக்கியமாக மகா சந்நிதானம் ( கேபள் சங்கர் ) இளைய ஆதீனம் ( கே.ஆர்.பி.செந்தில் ) அவர்கள் இல்லாமல் எங்களால் இது முடிந்திருக்காது .
வரண்டு  கிடக்கும் உள்ளங்களுக்கு இவர்களின்  வார்த்தைகள் தான் வயாகரா.

ஜாக்கி சேகர், லக்கி யுவா, அதிஷா, போன்ற பெரும்தலைகள் வராதது சிறிது வருத்தம் , அலுவல் காரணமாக அவர்கள் வராதது வெளியூரில் இருந்து வந்த பதிவர்களுக்கு சிறிது ஏமாற்றம். முடிந்தால் கண்டிப்பாக வந்திருப்பார்கள் என்று நமக்கு தெரியும் .
இந்த நிகழ்ச்சி நேரடி ஒளிப்பரப்பு செய்யப்பட்டது நிறைய வெளிநாட்டு  பதிவர்கள் மற்றும் வெளியூர் பதிவர்கள் பார்த்து மகிழ்ந்தார்கள் .

 இது சிறியோர்களின் கன்னி முயற்சி குறை  ஏதும் இருப்பின் சுட்டிக்காட்டவும்...பிழை ஏதும் இருப்பின் பொறுத்துகொள்ளவும் .. வந்திருந்து சிறப்பித்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி ...நன்றி ...நன்றி ..

சிறப்பு நன்றி அறிவிப்பு
---------------------------------------
  இவர் பதிவர் சந்திப்புக்கு வருகிறார் என்று தெரிந்தவுடன் சென்னையில் இடி மின்னல் .அவர் வராராமே உனக்கு போன் வந்துச்சா .?
உனக்கு போன் வந்துச்சா என்று .பலரிடத்தில் இருந்து எனக்கு போன் வந்தது .ஏதற்கும் ஜாக்கிரதையாய்  இருப்பது நல்லது என்று ஆலோசனைகள் வேறு. 
அந்த ப்ராப்ள  பதிவர் வேறு யாரும் அல்ல அது நாய் நக்ஸ் நக்கீரன். இவர் ஒரே ஒருமுறை மட்டும் கிரகாம்பெல்லிடம் போனில்  பேசியிருந்தால் தனது கண்டுபிடிப்பை தானே அழித்திருப்பார் . என்றாலும் மனிதர் நேரில்
பார்க்கும்
பொது குழந்தை மனம் கொண்டவர்  என்று புரிந்தது இவருக்கும் வீடு சுரேஷ் மற்றும் தமிழ்வாசி பிரகாஷ் அவர்களுக்கும் நன்றி.

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

கனடாவில் இருந்து ஒரு வாசகர் தனது நண்பர் மூலமாக பிலாசபிக்கு பரிசு பொருள் மற்றும் ருபாய் 1200 ரூபாய்க்கு சத்தியம் தியேட்டர் ப்யுள் கார்ட் குடுத்து அணிப்பியிருந்தார் அதை பற்றி விசாரணைகள் நடந்து கொண்டிருக்கிறது ..

எல்லாருக்கும் மேல் நாங்கள் மிகவும் நன்றி சொல்ல கடமைபட்டிருப்பது டிஸ்கவரி அண்ணன் வேடியப்பன் அவர்கள் .
விரிவான பட பதிவுகள் இனிமேல் நம் பதிவர்களால் வெளியிடப்படும்

அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி ....





Thursday, April 5, 2012

இப்பதிவு பிலாசப்பி பிரபாகரனுக்கு டெடிக்கேட் செய்யபடுகிறது

v
                                                       இது என் 50 தாவது பதிவு 

                                                        
சம்பவம் ஒன்று

நண்பர்களுடன் ஒருநாள் சென்னையில் உள்ள மிக மட்டமான பராமரிப்பு உடைய டாஸ்மாக் பார் ஒன்றில் நுழைந்தேன் .
உள்ளே நுழைந்துடன் குடலை பிரட்டும் நாற்றம் . சுத்தம்  சுகாதாரம் பற்றி எல்லாம் யாரும் கவலை பட்டதாக தெரியவில்லை . இங்கு வேண்டாம் நாம் வேறு எங்காவது செல்லலாம் என்று கிளம்ப எத்தனிக்கும் போது ஒரு நான்கு வயது குழந்தையை தூக்கிக்கொண்டு ஒருவன் அந்த பாருக்குள் நுழைந்தான் .

வந்தவன் நேராக தண்ணீரும் எச்சிலும் கலந்து வழிந்துகொண்டிருந்த ஒரு டேபிளை லேசாக கையால் துடைத்து விட்டு அந்த குழந்தையை அதன் மேலே அமரவைத்துவிட்டு சரக்கு வாங்க சென்றுவிட்டான். எனக்கு ரத்தம் லேசாக சூடாக ஆரம்பித்தது . அவன் வரும்வரை அங்கே காத்திருந்தேன். கையில் ஒரு பாட்டிலுடன் வாட்டர் பாக்கெட் மற்றும் பொடிமாஸ் வாங்கிவந்தவன் அந்த குழந்தை அருகே அமர்ந்து குடிக்க ஆரம்பித்தான் . போடிமாசையும் அந்த குழந்தைக்கு ஊட்டிவிட்டான்.

அவனிடம் சென்று யோவ் அறிவு இருக்கா குழந்தையை இந்த மாதிரி இடத்துக்கு கூட்டிவரலாமா . இது உன் குழந்தையா ? இதை வீட்டில் விட்டுவிட்டு வந்து குடிக்க உனக்கு என்ன கேடு . இந்த வயதில் குழந்தைகள் தங்கள் உலகை கூர்ந்து கவனிக்கிறார்கள் அதன் எதிர்காலத்தை நாசமாக்க உனக்கு என்ன அதிகாரம் இருக்கிறது. நீ குடித்து விட்டு மட்டை ஆனால் இந்த குழந்தை நிலை என்ன  என்று கோவத்தோடு கேட்டேன் . என்னை லேசாக முறைத்து
பார்த்து விட்டு அவன் சொன்னான் . வந்தமா குடிச்சமா போனமான்னு இரு என் புள்ளையை எனக்கு எப்படி வளர்க்கனும்ன்னு தெரியும் .பெருசா புத்திசொல்ல வந்துட்டாரு போடா போத்திக்கிட்டு என்று .

அதற்க்கு மேல் நான் எதுவும் பேசவில்லை ஆனால் அந்த சம்பவம் என்னை மிகவும் பாதித்து விட்டது . நார்வே நாட்டில் ஒரு இந்திய குழந்தைக்கு வெறும் கையால் உணவு ஊட்டிய பெற்றவர்களை அந்த அரசாங்கமே தண்டித்தது நினைவுக்கு வருகிறது . அங்கு அரசாங்கம் குழந்தைகள் மேல் காட்டும் அக்கறையை இங்கே பெற்றவர்கள் கூட காட்டுவதில்லை . இந்த குற்றசாட்டில் எல்லோருக்கும் பங்கிருக்கிறது .
இந்திய பெற்றோர்கள் தான் ரொம்ப பாசமானவர்கள் என்றும் மற்ற நாட்டு காரர்கள் எல்லாம் குழந்தை பெற்று தெருவில் வீசிவிடுபவர்கள் போலவும் ஒரு பொய்யான பிம்பத்தை இங்கு விதைத்திருக்கிறார்கள் .

உண்மையில் இந்திய பெற்றோர்கள் மிகவும் சுயநல வாதிகள் என்றே கருதுகிறேன் . அவர்கள் தங்கள் பிள்ளைகள் மீது அளவுக்கு அதிகமான அதிகாரத்தை செலுத்துகிறார்கள் . அல்லது பாசம் என்ற போர்வையில் செண்டிமெண்டல் ப்ளாக்மெயில் செய்கிறார்கள் . காரணம் முடிவெடுக்கும் அதிகாரம் எப்போதும் தன்னிடம் இருக்க வேண்டும் என்ற காரணம் . சுயமாக சிந்திப்பது அவனுக்கான பாதையை அவனே தேர்ந்தெடுக்கும் பக்குவத்தை குடுப்பது .விலகி நின்று கண்காணிப்பது அல்லது அவன் சுதந்திரத்தை மதிப்பது . போன்ற எந்த விசயமும் இங்கே யாருக்கும் பிடிப்பதில்லை
பெத்தவங்க பேச்சை தட்டாத பிள்ளை ரொம்ப கீழ்படிந்த பிள்ளை . எதிர்த்து பேசாத பிள்ளை .இவர்கள் தான் நல்ல பிள்ளைக்கு அடையாளமாக நாம் கொண்டாடுகிறோம் . மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள் நாம் பிள்ளை வளர்க்கிறோமா அல்லது அடிமை வளர்க்கிறோமா ?
முடிவெடுக்க முடியாமல் திணறும் பல பேரை நான் பார்த்திருக்கிறேன் . அற்ப காரணங்களுக்கு தற்கொலை செய்பவர்கள் .வீட்டுக்கு தெரிஞ்சா அவ்ளோதான் என்று வீட்டை விட்டு ஓடியவர்கள் என்று இந்த பட்டியல் நீளும்
வெறும் கலாச்சார போதை ஊட்ட பட்ட நாட்டில் இப்படி பட்ட பெற்றோர்கள் தான் பிறப்பார்கள் .
தங்களை உயர்த்தி கொண்டு மற்றவர்களை தாழ்வாக நினைப்பார்கள். தங்கள் தவறை சுட்டிக்காட்டும் தகுதி யாருக்கும் இல்லை என்று நினைப்பார்கள் . இந்தியன் என்பதற்கு பெருமை படவேண்டும் என்று சொல்லி கொள்வார்கள் .
காரணம்தான் சொல்ல மாட்டார்கள் . நிச்சியமாக இந்தியன் என்று சொல்லிகொள்வதில் பெருமை பட நியாயமான
காரணம் எதுவும் இருப்பதாக எனக்கு தெரிய வில்லை .



*********************************************************************************************************************
                            
                         
சம்பவம் இரண்டு

புரட்சிதலைவி மாண்பிமிகு தமிழக முதல்வர் இதயதெய்வம் டாக்டர் அம்மா (குலோ துங்குவை விட்டிருந்தால் மன்னிக்கவும் ) அவர்களின் ஆணைக்கிணங்க தமிழகம் முழுவதும் நீர் மற்றும் மோர் பந்தல் திறக்கப்பட்டதை அனைவரும் அறிந்திருப்பீர்கள் அப்படி ஒரு பந்தலில் நடந்த சம்பவம்
மைக் வைத்து போவோர் வருவோர் எல்லோரிடமும் அம்மாவின் கருணையை பறை சாற்றிகொண்டிருந்த ஒரு ரத்தத்தின் ரத்தம் யாரும் உள்ளே வராத வெறுப்பில் இருந்தார் .
அப்போது அங்கே சென்றுகொண்டிருந்த ஒரு பெரியவரிடம் பெருசு வந்து மோர் குடிச்சிட்டு போ என்று அழைத்தார் .
அவ்ளோதான் பெருசு ஏற்கனவே புல் போதை வந்ததே கோவம் .

த்தா ...பீப்....மோர் குடுக்குறானாம் மோரு......பீப்.............பீப்............அதை உன்கிட்ட வாங்கி குடிக்கிறதுக்கு விஷத்தை குடிச்சிட்டு போயிடுவேன் .............. ....பீப்.............பீப்........பீப்.............பீப்....கரண்ட்டு பில்லு ஏத்துனே பால் விலை ஏத்துனே
பஸ் டிக்கட் விலையை ஏத்துனே ..பாவிகளா சரக்கு விலையையும் ஏத்தீட்டியே ........பீப்.............பீப்....உன் மோரை கொண்டுபோய் ....பீப்.............பீப்........பீப்.............பீப்........பீப்.............பீப்........பீப்.............பீப்........பீப்.............பீப்....ஊத்து....பீப்.............பீப்........பீப்.............பீப்....

அங்கு இருந்த ஒரு ரத்தத்தின் ரத்தம் சட்டையை பிடித்து பெருசை சிறிதுதூரம் தள்ளி கொண்டுபோய் விட்டு வந்தார் ..
இதே சம்பவம் உடன்பிறப்பின் பந்தலில் நடந்திருந்தால் அந்த பெருசின் நிலை என்னவாகி இருக்கும் என்று நினைத்தேன் விடை தெரியவில்லை ....

***********************************************************************************************************************


அனுபவம் மூணு

நிறையமுறை சாகசபயணம் செய்திருக்கிறேன் . ஆனால் என் வாழ்க்கையில் நான் செய்த மிக பெரிய சாகச பயணமாக நான் கருதுவது குடித்துவிட்டு மட்டை ஆன நண்பனை வீடுவரை பத்திரமாக கொண்டு வந்து சேர்த்தது தான் .
என்ன திரிலிங் என்ன சேசிங் .... அந்த நண்பர் சம்மதித்தால் அந்த சாகச பயணம் பற்று ஒரு பதிவு வரலாம் பார்ப்போம்
என்ன சொல்கிறார் என்று ....................


 

Monday, February 27, 2012

இவர்கள் எல்லாம் பிரபலபதிவர்கள் ---காலகொடுமை

v
இந்த பதிவு சும்மா ஜாலிக்காக ..யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் சத்தியமாக நமக்கு கிடையாது ..
இதில் வரும் ஒவ்வொரு படமும் ஏதாவது ஒருவிதத்தில் பிரபல பதிவர்களை ஞாபகபடுத்தும் ...
எந்த படம் யாருக்கு பொருந்தும் என்று நீங்கள் தான் சொல்லவேண்டும் .
பதிலை பின்னூட்டத்தில் தெரிவிக்கவும் ..

  
இந்த பதிவர் எது கிடைத்தாலும் சாப்பிடுவார் . அப்புறம் அதுக்கு ஒரு பதிவு போட்டு நம்மள இம்சை பண்ணுவார் .


  
 நம்பர் ஒன் பதிவர் எந்த சூழ்நிலையிலும் பதிவு எழுதுவதை விடமாட்டாரு ..
அண்ணா உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவு இல்லைங்கலானா ?


  
எந்த பாதை எங்கே போகும்ன்னு அவருக்கே தெரியாது .( பாவம் அவரே கன்பீஸ் ஆயிட்டாரு )


  
வம்பு பண்றது இவருக்கு ரொம்ப  பிடிக்கும் அதுக்காக எங்க வம்பு பண்ணணுமோ அங்கதான் பண்ணனும் இல்லைன்னா இப்படிதான் டர்ர் ஆகா வேண்டியதுதான் .
  
இவரு லேப்டாப் வச்சிருக்காராம் அதுக்கெல்லாம் ஒரு பதிவு போடுவாரு .
அண்ணே லேப்டாப் இவ்ளோ பெருசா இருக்கே அப்புறம் அருவா வைக்க அங்க இடம் இருக்கா?
  
தம்பி எல்லாத்தையும் மாத்தி யோசிக்க கூடாதுப்பா கிறுக்கன்னு சொல்லிடுவாங்க ........
  

இந்த பதிவர் மிகவும் ரசிக்கும் ஒரு இடம் .இவர் பதிவுகளில் பவர் ஸ்டாருக்கு பிறகு அதிகம் இடம்பெறுவது இதுதான் .
  


என்னதான் ஒயின்ஷாப் ஓனராக இருந்தாலும் அதுக்காக இப்படியா ? தம்பி இந்த வயசுக்கு இது கொஞ்சம் அதிகம்தான் .
  
இந்த பயபுள்ள அநியாயத்துக்கு யோசிக்குது பாரேன் ..ஆனா பண்றது எல்லாம் கோமாளித்தனம் ......
  
இந்த படத்தை நல்லா பாருங்க விக்கல் எடுத்த தக்காளி மாதிரி இருக்கும் ......
  
இந்தியாவின் இளவரசர் அப்படீன்னு நினைப்பு . அண்ணே அரசியல்ல உங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கு ஆனா அந்த உறுப்பினர் கார்டை மட்டும் புதுபிச்சிருங்க போதும் ...
  


நெஞ்சை நக்கீட்டீங்க  போங்க ....
  
இதுக்கு மட்டும் எந்த க்ளூவும் கிடையாது நீங்களே கண்டு பிடிங்க .
  
எல்லை  மீறி போயிகிட்டுருக்க நீயி .எல்லை  மீறி போயிகிட்டுருக்க நீயி .இந்த கொசு தொல்லை தாங்க முடியல .
இது பிரபல பதிவர் எல்லாம் இல்லைங்க . ஆனா எல்லா பதிவுலயும் வந்து விளம்பரம் பண்ணிட்டு போயிடும்
**************************************************************
லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்
  
இந்த போண்டா கோழிக்கு மட்டும் எந்த துப்பும் குடுக்க வேண்டிய அவசியம் இல்லை .
கண்டிப்பா எல்லாரும் கண்டு பிடிச்சிடுவாங்க . இருந்தாலும் சொல்றேன் .
இந்த கோழியை பெப்பர் போட்டு எத்தனை முறை வருத்தெடுத்தாலும் நல்லாதான்பா இருக்கு ...
-------------------------------------------------------------------------------------------------





டிஸ்க்கி :- பதிலை பின்னூட்டத்தில் அமைதியான முறையில் தெரியபடுத்த விரும்புபவர்கள் தெரிய படுத்தலாம்
அல்லது என்னை என்கவுண்டர் செய்ய வேண்டும் என்று துடிப்பவர்களும் இதில் கலந்துகொள்ளலாம் .





Popular Posts