Sunday, November 3, 2019

கி. பி. 3553

v
நாடே விழாகோலம் பூண்டிருந்தது இந்திய நாட்டின் முக்கிய திருவிழாக்களில் ஓன்று அது.

இதுவறை இதை கொண்டாடும் வசதி, வாய்ப்பு அவனுக்கு அமைந்ததில்ல.
ஆனால் இந்த முறை பண்ணையார் தாராளமாகவே பழைய துணிகளையும், அரிசி,வெல்லம், என்று வாரி கொடுத்திருந்தார்.

உற்சாகமாக வீட்டுக்கு வந்தவனை அவனது 8வயது மகன் வந்து கட்டிகொண்டான். எல்லாம் கையில் இருந்த பையும் அதில் நிறைந்திருந்த  பொருட்களும்தான் காரணம்.

அப்பா இந்த வருஷம் நாம மோடி ஜெயந்தி கொண்டாடுவோமாப்பா?
ஆமாம்டா மகனே பாத்தியா பண்ணையார் எவ்வளோ குடுத்திருக்காருன்னு.
நாம ஏன்ப்பா மோடி ஜெயந்தி கொண்டாடுறோம்?
அதுவா இன்னைக்குதான் விஷ்ணுவின் அவதாரமான மோடி பிறந்தநாள்.
அந்த கதையை சொல்லுறேன் கேளு.


அதாவது முன்னொரு காலத்தில பெரியார்,பெரியார்ன்னு ஒரு அசுரகுல தலைவன்  இருந்தான். அவன் தேவர்களை எல்லாம் ரொம்ப கொடுமைபடுத்தினான்.
அவர்களை உழைத்து சாப்பிடசொல்லி கட்டாயபடுத்தினான்.

பிராமணன் அல்லாத அசுரர்களை படிக்க சொன்னான் தேவர்களும் அசுரர்களும் சமம் என்று சட்டம் இயற்றினான். இப்படியாக நாட்டில் தர்மம் அழிந்து அதர்மம் தலைதூக்கிய நேரத்தில் தேவர்கள் எல்லாம் மகாவிஷ்ணுவிடம் முறையிட்டார்கள்.

 பகவான் உடனே என் சக்தியால் மட்டும் இந்த அசுரனை அழிக்கமுடியாது இதற்க்கு சிவனின் உதவியும் வேண்டும் என்று நினைத்து. மோகினியாக உருமாறி சிவனின் கைலாயம் செல்கிறார். சிவனுக்கு அப்போது மூடு சரியில்லாததால். ஆட்டமா தேரோட்டமா என்று பாட்டு பாடி நடனம் ஆடி சிவனை உசுப்பேத்துகிறார்.

இதனால் மூடு வந்த சிவன் பெண்வேடத்தில் இருக்கு விஷ்ணுவிடம் ஆனந்த சயனத்தில் ஈடுபடுகிறார். இப்படி பல ஆண்டுகள் தொடர்ந்து நடக்கிறது.
ஒரு நாள் சிவனின் விந்து தெறித்துசிதருகிறது அதில் ஒருதுளி குஜராத்தில் உள்ள ஒரு தாமரை குளத்தில் உள்ள ஒரு தாமரையில் விழுகிறது.

 அந்த தாமரையில் இருந்து மோடி அவதரிக்கிறார்.சிவனும் விஷ்ணுவும் மேட்டர் செய்வதில் காலதாமதம் ஆனதால் பெரியார் என்கிற அந்த அசுரகுல தலைவன் வயதாகி இறந்துவிடுகிறார்.
ஆனாலும் அவரின் தம்பிகள் அண்ணா, கருணாநிதி, என்ற இரண்டுபேர் நாட்டை ஆள்கிறார்கள்.
அவர்களும் பெரியாரை போலவே அனைத்து சாதியினரும் அர்சகர் ஆகலாம். இலவச கல்வி என்று நால்வர்ண தர்மத்தை சிதைக்கிறார்கள்.

ராமன் எப்படி ராவணனை வீழ்த்தி விபீஷணன்னை மன்னன் ஆக்கினாரோ அதேபோல் மோடி இந்த அசூரர்களை வீழ்த்தி அசுரகுலத்தில் இருந்த எடப்பாடி என்றவனை மன்னனாக்கி நீட், 5, 8, ஆம் வகுப்புக்கு போதுதேர்வு தேவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு, குலகல்வி, என்று வருணாசிரம தர்மத்தை மீண்டும் நிலைநாட்டினார்.

அவர் பிறந்தநாளைதான் நாம் மோடி ஜெயந்தி என்று கொண்டாடுகிறோம்மகனே.

அப்பா இந்த அசுரர்கள் எல்லாம் யாருப்பா?
நம்ம முப்பாட்டனுங்கதான் மகனே, போ போயி அம்மா லட்டு உருட்டிடாளான்னு பாரு. அப்படியே களத்துமேட்டில் வேலை செய்யும் உன் நண்பர்களுக்கும் ஹாப்பி மோடிஜெயந்தி சொல்லிடு மகனே.

Saturday, December 19, 2015

மதுராந்தகி

v


            




      
மன்னா நம் அரண்மனையை உங்கள் புதல்வர்கள் முற்றுகையிட்டுவிட்டார்கள்.

கனத்த மவுனம்’

உப்பரிகையில் நின்று கோட்டை சுவரை வெறித்து பார்த்துகொண்டிருந்தான் இரண்டாம் கவுசிகன்.

என் மகள் மதுராந்தகி தேவி பாதுகாப்பாகத்தானே இருக்கிறாள்.?

ஆம் மன்னா. போர் தொடங்குவதற்கு முன்னரே அவரை பட்டாசாரியார்களின் பாதுகாப்பில் ஒப்படைத்துவிட்டேன்.

இந்நேரம் அவர் இலங்கையில் பாதுக்காப்பாக இருப்பார்.

மன்னா...

ம்..
கடைசியாக ஒருமுறை உங்கள் புதல்வர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பார்க்கலாமே .

எதற்கு மந்திரியாரே வீண் கால விரயம். எல்லாம் விதிப்படி நடக்கட்டும் .

என்னை எதிர்ப்பதிலாவது ஒற்றுமையாக இருக்கிறார்களே.
பெண் நாடாண்டாள் என்ன குடியா மூழ்கிவிட போகிறது .?

மதுராந்தகி திறமையை நான் சிறுவயதில் இருந்தே கவனித்து வருகிறேன் ஆட்சி அதிகாரத்தை கையாள்வதில் அவள் எந்த ஆணுக்கும் சளைத்தவள் அல்ல.

அவள் மூலமாக இந்த நாடு பெரும் பேரு அடையும் என்று கனவு கண்டது ஒரு தவறா.?

என் மகன்களின் ஒப்புதலோடுதானே இந்த ஏற்ப்பாட்டை செய்ய  முயற்சித்தேன்?. இப்போது என்ன ஆயிற்று இவர்களுக்கு?.

எல்லாம் கீழை சாளுக்கிய மன்னனின் சதி மன்னா. பெண் நாடாள்வது தெய்வ குற்றம் சாஸ்திர சம்பிரதாயங்களுக்கு எதிரானது என்று தூண்டிவிட்டார்கள்.

அரியணையையும், அவர் மகளையும், உங்கள் மூத்த புதல்வனுக்கு தருவதாக  ஆசைகாட்டி இருக்கிறார்.

அதில் இருக்கும் அரசியல் சூழ்ச்சி தெரியாமல் இந்த முட்டாளும் அதற்க்கு ஒத்துகொண்டானா.?

மன்னா... ராஜகுரு தங்களை காண வந்திருக்கிறார்.

சரி வரச்சொல்.

                         ராஜகுரு வருகை


வெள்ளை தாடியுடன் ஒளிபொருந்திய பார்வையுடன் வயதுக்கேற்ற தள்ளாமையுடன் உள்ளே வந்தார் ராஜகுரு.

அரசே..

கரங்கள் கூப்பிய நிலையில்..

வாருங்கள் குருநாதரே..தங்களை மிகவும் சிரமபடுத்திவிட்டேன். என்னை மன்னித்தருள்க.

என்னால் ஆன முயற்சிகள் எல்லாம் செய்துவிட்டேன் மன்னா.

எதுவும் பலன்தரவில்லை. தங்களை சிறை பிடிப்பதே லட்சியம் என்று கருவிகொண்டு இருக்கிறான் விஜயாதித்தன்.

குருநாதா தாங்கள் தானே மதுராந்தகியின் ஜாதகத்தை கணித்து கூறினீர்கள்.
இவள் நாடாள பிறந்தவள் என்று.

பின்னர் ஏன் இப்படி எல்லாம் நடக்கிறது?    


என் கணிப்பு பொய்க்காது மன்னா..
இப்போது நடப்பது ஏதோ ஊழ்வினை பயனாக இருக்கலாம். மதுராந்தகி தேவி பொன்னியின் அம்சம் கொண்டவர். அதனால் மதுராந்தகி கண்டிப்பாக நாடாள்வார்.அதை உங்கள் கண்களால் நீங்கள் காண்பீர்கள் மன்னா.

உணர்ச்சியற்ற கண்களால் அவரை பார்த்துகொண்டிருந்தான் மன்னன்
.
மன்னா ஒரு சிறு விண்ணப்பம்.

தாங்கள் என்னிடம் விண்ணப்பம் வைப்பதா .?

என்னை மேலும் பாவி ஆக்காதீர்கள் குருநாதரே என்ன செய்யவேண்டும் என்று சொல்லுங்கள்.

பாண்டியர்களிடம் உதவி கேட்டுள்ளேன் நிலைமை சீரடையும் வரை தாங்கள் தலைமறைவாக இருப்பது நல்லது.

எப்படி குருதேவா? முற்றுகையை உடைத்து கொண்டு தப்பிக்க நம்மிடம் போதிய படை வீரர்கள் இல்லை.

வடக்கு வாசல் படையினரை நம்ப முடியாது நம் வீரர்கள் பலர் இப்போது அவனுக்கு சாதகமாக மாறி இருக்கும் வாய்ப்பு உள்ளது.

சற்றே நெருங்கி மன்னனின் காதருகே வந்தார் ராஜகுரு ..

உங்கள் முன்னோர்கள் வெட்டிவைத்த சுரங்க பாதை இருக்கிறதே மன்னா ?

குருநாதரே எதிரியாக நிற்ப்பவர்கள்  என் மகன்கள்  அவர்களுக்கு இந்த கோட்டையில் உள்ள அத்தனை சுரங்கங்களும் தெரியும்..

தலையை அசைத்தவாறே மன்னனின் காதில் லேசாக கிசுகிசுத்தார் அவர்களுக்கு தெரியாத ஏன் உங்களுக்கே தெரியாத சுரங்கம் ஒன்று இருக்கிறது மன்னா .....



ஆச்சிரியத்தில் விழிகள் விரிய பார்த்தான் மன்னன் .

எனக்கு தெரியாமலா?

ஆம் மன்னா அது களப்பிரர்கள் காலத்தில் இந்த அரண்மனையை கைப்பற்றும் போது கண்டு பிடிக்கபட்டது. தாமரைக்குளத்தின்  படிக்கட்டுகளுக்கு அடியில் உள்ளது.

அது எங்கே முடியும் என்று யாருக்கும் தெரியாது.

ஏன் ?
அந்த சுரங்கத்தின் உள்ளே ஒரு குறிப்பு உள்ளது மன்னா.

இது மாய சுரங்கம். ராஜரத்தம் மட்டும் உள்ளே செல்ல அனுமதி என்று.
  
அதை எனது முன்னோர்கள் கண்டுபிடித்து பாதுகாத்து வருகிறார்கள். இரண்டொரு முறை அந்த சுரங்கத்துள் ஆள் அனுப்பி சோதிக்க முயன்றனர் சென்ற யாரும் திரும்பவில்லை..

இதை ரகசியமாக நான்கு தலைமுறையாக பாதுகாத்துவருகிறோம்.

இப்போது இதை விட்டால் வேறு வழி இல்லை மன்னா ...

சிறிதுநேர யோசனைக்கு பிறகு திடமாக எழுந்தான் மன்னன்.

தங்கள் ஆலோசனையை இதுவரை நான் தட்டியது இல்லை நீங்கள் சொன்னபடியே ஆகட்டும் ...

                     சுரங்க வாயில் 

        (மன்னனும், ராஜகுருவும், ஆபத்துதவிகளும்,)

ஆபத்துதவிகள் இரண்டுபேர் என்னுடன் வந்தால் போதும்.

பந்தம் கொளுத்தப்பட்டது.

சிறிது வெளிச்சத்தில் பந்தம் தேவை படவில்லை.
ஆனால் உள்ளே செல்ல செல்ல இருள் வெளிச்சத்தை கவ்வியது.

அடேய் கார்மேகா எங்கு இருக்கிறாய் எனக்கு ஒன்றும் தெரியவில்லை.

பதில் இல்லை..

பந்தத்தில் சூடு இருக்கிறது ஆனால் வெளிச்சம் இல்லை. இது எந்தமாதிரியான மாய சுரங்கம்.?

வழி தவறிவிட்டோமா?

இருள் சூராவளிக்குள் சிக்கிகொண்டது போல் இருக்கிறதே ..
கால்கள் தள்ளாட தொடங்கியது..

காலம் திசை எல்லாம் இந்த குகைக்குள் வெறும் மாயை போல் உள்ளதே.

முடிவு இதுதான் ..நம்பிக்கை உடையும் வேளையில் தூரத்தில் ஒரு புள்ளியாக வெளிச்சம்.

அது போதும் அந்த ஒற்றை புள்ளி போதும்.

சோர்ந்து இருந்த உடலுக்கு புது தெம்பு தருவதற்கு இந்த சிறு வெளிச்சம் போதும் .
கண்களால் அந்த புள்ளியை நோக்கி வேகமாக முன்னேறினான்.

குகைவாயில் அடைபட்டு இருந்தது.

பலம் கொண்டமட்டும் அதை தன் தோள்வலிமையால் இடித்து திறந்தான்.

ஒரு கற்பலகை பெயர்ந்து வெளியே சரிந்தது.

லேசாக சாக்கடையும் தண்ணீரும் குகைக்குள் சரிந்தது.

வெளியே வந்து பார்த்தான்.

இது என்ன நதி .?

இப்படி நாற்றம் எடுக்கிறதே !

அட இது எந்த நாடு .?

நாற்றம் எடுக்கும் அந்த நதி ஓரத்தில் நடந்து வந்தான்.

குதிரைகளும் மாடுகளும் இழுக்காமல் இங்கு ரதங்கள் எல்லாம் தானாக ஓடுகிறதே?

இது என்ன மாய உலகமா .?

அது என்ன ஓவியம் இவ்வளவு பிரம்மாண்டமாக?

அந்த ஓவியம் மிகவும் தத்ரூபமாக உள்ளதே..

கண்களை சுருக்கி அதில் இருந்த எழுத்துக்களை கூர்ந்து படித்தான்.
“காவேரி தாயே தமிழகத்தில் என்றும் உன் ஆட்சியே”..

இவ்வளவு பிரம்மாண்டமாகவும் தத்ரூபமாகவும் ஒரு ஓவியனால் வரைய முடியுமா.?

அது யார் அந்த ஓவியத்தில்..

மதுராந்தகி போலவே இருக்கிறதே!

மதுராந்தகியேதான் .................

மதுராந்தகி..........
மதுராந்தகி...........        
(கூவம் நதிக்கரையில் ஒரு பைத்தியத்தை போல அந்த பிரம்மாண்ட ஓவியத்தை நோக்கி ஓடிகொண்டிருந்தான் அந்த சோழ மன்னன்.)                    
     
           

Tuesday, October 20, 2015

ஹிந்து நாடு ஏன் கூடாது

v


இந்த நாட்டை ஒரு இந்து மத நாடாக மாற்ற துடிப்பவர்கள் அல்லது அதுபோன்றதொரு ஆசையை மனதில் மட்டும் வைத்து கொண்டு சகிப்புத்தன்மையற்ற செயலுக்கும் மவுனம் சாதித்து மறைமுக ஆதரவு தருபவர்களும் ஏன் இந்த நாடு இந்து மத நாடாக ஆக வேண்டும் என்பதற்கும் தெளிவான ஒரு விளக்கமும் சொல்ல முடியாது .
 முஸ்லீம்களுக்கு தனி நாடுகள் இல்லையா? அவர் நாட்டில் போயி நீ இந்தமாதிரி பேசமுடியுமா ? என்கிற சொத்தை வாதத்தைதான் முன் வைக்கிறார்கள் . ஐயா அது மதவாதநாடாக இருந்து அதனால் அவர்கள் பெற்ற பயன் என்ன என்பதை ஆராய்ந்து விட்டு உன் நாட்டை மதவாத நாடாக மாற்ற உன் ஆதரவு தெரிவித்தால் நலம்.

இப்போது அனைத்து துறைகளிலும் முன்னணியில் இருக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் ஒரு இருண்டகாலம் இருந்தது.  ஆம் ஐரோப்பிய நாடுகளில் பெரும்பாலும் கிருஸ்துவ மதத்தை தழுவின பின்பு விளைந்த நாசங்களை பட்டியல் இட்டால் தெரியும். அரசனின் கையில் இருக்கும் அதிகாரத்தை விட ஒரு மத நிறுவனத்திடம் அதிக அதிகாரம் குவியுமானால் அவர்கள் செயல் எப்போதும் அமைதியின்மைக்கே நம்மை இட்டு செல்லும் என்பதற்கு ஏராளமான வரலாறுகள் உள்ளது. 

போப்பின் பேச்சை மன்னன் தட்டமுடியாது சிலுவைபோர்கள் என்கிற வரலாற்றின் மிக நீண்ட போரை ஏறதாழ 200 ஆண்டுகள் சிறியது பெரியதுமாக பல சிலுவைபோர்கள் நடந்திருக்கிறது இதை ஆரம்பித்து வைத்தவர் போப் இரண்டாம் அர்பன். மதம் வெறும் போர்களை தானே உற்பத்தி செய்யும் அதில் சாவது ராணுவ வீரர்கள் தானே என்று விட்டு விட முடியுமா. அதே காலகட்டத்தில் கிறிஸ்தவ மதத்தை தழுவாதவர்கள் சடங்குகளில் நம்பிக்கை வைத்தவர்கள் எல்லாம் கூட்டம் கூட்டமாக சூனியம் செய்பவர்கள் என்று உயிரோடு கொளுத்த பட்டார்கள்.
பல ஆராய்சிகள் தடை செய்யபட்டது பல கண்டுபிடிப்பாளர்கள் கொலை செய்ய பட்டார்கள் கோப்பர்னிக்கஸ் தான் கண்டுபிடித்த சூரிய மைய கோட்பாடை இறக்கும் வரை வெளியிடவில்லை அவர் இறந்த பின் தான் அது வெளிவந்தது. கலிலேயோ அதை ஆதரித்ததால் பலவிதங்களில் கொடுமைபடுத்தபட்டார் ஏன் திருச்சபையில் தான் ஒரு பொய்யன் என்று கூறி மன்னிப்பு கேட்க்கும் நிலைமைக்கு தள்ளபட்டார். ஏன் என்றால் திருச்சபையின் அதிகாரத்திற்கு முன்னாள் மன்னனின் அதிகாரம் செல்லாது. 

இப்படி முன்னேற்றத்திற்கான எந்த தடையமும் இல்லாமல் தடுமாறி கொண்டுஇருந்த அதே ஐரோப்பிய கண்டம்தான் இன்று அறிவியல் ஆராய்ச்சியில் உலகிற்கு முன்னணி ஆகயுள்ளது .
போப்பின் அதிகாரத்தில் இருந்து வெளியேறிய பின்னர்தான் இது நடந்தது.
இனி ஒருபோதும் மத நிறுவனங்களை அரசியலில் கலக்கும் தவறை அவர்கள் செய்யமாட்டார்கள். காரணம் அவர்கள் வரலாறை வெறும் மார்க் வாங்குவதற்காக படிப்பவர்கள் அல்ல. அதில் நடந்த தவறுகளில் இருந்து பாடம் கற்பதற்காக படிப்பவர்கள். நாம் தான் வரலாறை உள்ளபடியே ஏற்றுகொள்ளும் பழக்கம் இல்லாதவர்கள் ஆயிற்றே. வாய்ப்பு கிடைக்கும்போது எல்லாம் அதை திருத்தி திருத்தி உண்மையை மறைத்து பொய்யையும் தற்புகழ்ச்சி மிக்க பாடல்களாலும் நிரப்பி விடும் பழக்கம் உள்ளவர்கள் தானே நாம். எந்த செயலுக்கும் நாம் வெட்கபட்டதே இல்லை மாறாக அதற்க்கு நியாயம் கற்ப்பிக்கும் குணம் உள்ளவர்களாக உருவாக்க பட்டுள்ளோம்.
   
ஆனால் நாம் பல்லாயிரம் ஆண்டுகளாக மதத்தின் பெயரால் ரத்தம் சிந்திகொண்டு தான் இருக்கிறோம். இஸ்லாமும் கிருத்துவமும் இந்த மண்ணிற்கு வருவதற்கு முன்னாள் இருந்தே இந்த ரத்தம் சிந்தும் படலம் நடந்து கொண்டே தான் இருக்கிறது. சைவம், வைணவம், பவுத்தம், சமணம், என்று ஏதோ ஒரு மதத்துடன் ஏதோ ஒரு காரணத்திற்காக அனல்வாதமும் புனல்வாதமும் புரிந்துகொண்டுதான் இருந்திருக்கிறோம். மற்றவர்களை கழுவில் ஏற்றுவது எப்போது நாம் ரசிக்கத்தகுந்த வெற்றியாகவே கொண்டாடி கொண்டிருந்திருக்கிறோம். வெள்ளையனின் வருகைக்கு பின்னால் சமத்துவம் சகோதரத்துவம் என்று லேசாக முன்அடி எடுத்து வைத்தால் அதற்குள் நம்மை பின்னால் இழுக்க ஒரு சக்தி கிளம்பிவிட்டது. 

இதனால் விளையபோகும் பாதிப்பு தெரியாமலேயே அந்த சக்திக்கு எரிபொருளாக ஆவதற்கு இங்கு பலர் துடிக்கிறார்கள். இன்று நீ மாட்டுகறி சாப்பிடாதே என்று சொல்பவன் நாளை நீ இதை மட்டும் தான் சாப்பிடவேண்டும் என்று உன் சாப்பாட்டை தீர்மானிப்பான் . இன்று நீ இதை எழுதாதே என்று சொல்பவன். நாளை நீ இதை மட்டும்தான் எழுதவேண்டும் அதையும் இப்படிதான் எழுத வேண்டும் என்று கட்டளை இடுவான். பிறகு இவன் மட்டும்தான் படிக்கணும் இவன் எல்லாம் படிக்கவே கூடாது அது நம்ம தர்மத்துக்கு விரோதமானது என்று சொல்வான். அப்போது நீ தலையில் காவி துண்டை சுற்றிக்கொண்டு கையில் காய்ச்சிய ஈயத்தோடு வீடு வீடாக சென்று எவன் காதில் ஊற்றலாம் என்கிற வெறியோடு சுற்றிக்கொண்டுதான் இருப்பாயா ?
சமத்துவமும், அமைதியும், குறிப்பாக நாகரிகமும் உள்ள ஒரு மதவாத நாடு நம்மால் காட்டமுடியுமா ? 
அப்படி இந்த நாடு தன் மதகொள்கையினால் மட்டுமே முன்னேறியது எல்லா மக்களும் ரத்தம் சிந்தாமல் அமைதியாக வாழ்கிறார்கள் என்று ஒரு முனுதாரனமான நாட்டை காட்டுங்கள் அப்படி ஒன்று இருந்து விட்டால் வாருங்கள் நாமும் கத்தியோடு கிளம்பலாம் இந்த நாட்டை ஒரு இந்துமத் நாடாக மாற்ற.  
                       

Popular Posts