Monday, November 21, 2011

ஜாக்கி பதிவை படிக்காத அம்மா .

v


கடந்த இரு நாட்களாக தமிழகம் அல்லோல தில்லோல பட்டு கொண்டிருக்கிறது .
எல்லாத்திற்கும்  இந்த விலைவாசி உயர்வுதான் காரணம் .எனக்கு இது ஆச்சரியமாக இல்லை .
அம்மையாரை பற்றி அறியாதவர்கள் வேண்டுமானால் அதிர்ச்சி அடையலாம் .

எல்லாவறிற்கும் அம்மையாரை குறை சொல்வதை நான் ஏற்று கொள்ள மாட்டேன் .
அவருக்கு வழங்கப்படும் ஆலோசனைகளின் தரம் அப்படி . அல்லது அம்மையார் ஜாக்கி பதிவுகளை
படிக்காதவராக  இருப்பார் . படித்திருந்தால் இந்நேரம் கட்சியை  கலைத்துவிட்டு திருந்தி இருப்பார் .

தமிழகத்தில் அனைவரும் ஐ.டி. துறையில்  வேலைபார்த்து மாதம் லட்ச ருபாய் சம்பாதிக்கிறார்கள்.
என்று அவரின் ஆலோசனை அம்பிகள்  சொல்லி இருப்பார்கள். அதனால்தான் அனைவரும் லட்ச லட்சமாக
சம்பாதிக்கும் போது. எதற்கு இந்த பதிமூன்றாயிரம் மக்கள் நல பணியாளர்கள் மட்டும் குறைந்த வருமானத்தில்
அரசாங்கத்திடம் அடிமை வேலை செய்யவேண்டும் என்று. தாயுள்ளத்தோடு அனைவரையும் வேலையே விட்டு
நீக்கி உள்ளார் . இனிமேல் அவர்களும் ஏதாவது ஒரு ஐ.டி. கம்பனியில் வேலைக்கு சேர்ந்து லட்ச லட்சமாக
சம்பாதிக்க தான் போகிறார்கள் .

இப்படி லட்சாதிபதிகள் மட்டும் வாழும் தமிழகத்தில் எதற்கு மக்கள் தேவை இல்லாமல் பஸ்ஸில் வியர்வை வழிய
பயணம் செய்யவேண்டும் ? அதனால்தான் தாயுள்ளத்தோடு அம்மா அவர்கள் பஸ் கட்டண உயர்வை அமல் படுத்தி உள்ளார் .
இனிமேல் நீங்கள் கார் வாங்கி அதில் ஏ.சி. மாட்டிகொண்டு வியர்க்காமல் பயணம் செய்யலாம் .

இதை எல்லாம் சரியாக புரிந்து கொள்ளாத எதிர்கட்சிகள் மற்றும் கம்யுநிச்ட்டுகள் சிலர் போராட்டம் உண்ணாவிரதம்
என்று ஆரம்பித்து விடுவார்கள் . இதை எல்லாம் பார்த்து நீங்கள் மனம் இறங்கி விடாதீர்கள் .சில பல பேர் தீக்குளிதாலும்
நீங்கள் விட்டு கொடுத்துவிடாதீர்கள் . விட்டு குடுத்தால் அப்புறம் உங்கள் தாய் உள்ளத்திற்கு பங்கம் ஏற்பட்டுவிடும் .

உங்களுக்கு ஆலோசனை சொல்லும் அந்த அதிசய அம்பிகளை மட்டும் கடைசி வரை கை விட்டுவிடாதீர்கள்.
அவர்கள் உங்களை இன்னும் உயரத்திற்கு கொண்டு செல்லாமல் விட மாட்டார்கள் .
இனம் இனத்தோடு சேரும் . குணம் குணத்தோடு சேரும் . இது முன்னோர்கள் சொன்னது .
பிச்சகாரனுக்கு செக்யுரிட்டி பிச்சகாரனே பேஷ் ................இது எங்க தலைவர் கவுண்டமணி சொன்னது .
 


16 கருத்து சொல்றாங்க:

Anonymous said...

//இது எங்க தலைவர் கவுண்டமணி சொன்னது .//

எந்த கவுண்டமணி?

இவண்,

'நவீன நமீதா'நற்பன்னி மன்றம்,
தலைமை அலுவலகம்,
உலக உருண்டை - 543210

அஞ்சா சிங்கம் said...

! சிவகுமார் ! said...

//இது எங்க தலைவர் கவுண்டமணி சொன்னது .//

எந்த கவுண்டமணி?

இவண்,

'நவீன நமீதா'நற்பன்னி மன்றம்,
தலைமை அலுவலகம்,
உலக உருண்டை - 543210

//////////////////////////////////

இது நவீன நமிதா சொன்னது அல்ல எங்கள் தானை தலைவர் செந்திலிடம் சொன்னது .........

கவிதை வீதி... // சௌந்தர் // said...

ஓ.. இதற்க்குதான இந்த நடவடிக்கை..

நான் கூட ஏதோ விலையை ஏத்திட்டாங்கன்னு நினைச்சி புலம்பிக்கிட்டு இருக்கேன்.


அம்மாவின் அரும்பணி தொடரட்டும்...

அஞ்சா சிங்கம் said...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

ஓ.. இதற்க்குதான இந்த நடவடிக்கை..

நான் கூட ஏதோ விலையை ஏத்திட்டாங்கன்னு நினைச்சி புலம்பிக்கிட்டு இருக்கேன்.


அம்மாவின் அரும்பணி தொடரட்டும்...//////
//////////////////////
ஹி ஹி புரியாத ஆளாய் இருக்கீங்களே ..பால்விலை உயர்வுக்கு காரணம் அனைவரும்
ரெட் புல் ஆரோக்கியபானம் குடித்து உடம்பை வளர்க்கத்தான் .........

சக்தி கல்வி மையம் said...

எங்கள் தானை தலைவர் கவுண்டமணியை வெறும் தலைவர் என்று அழைத்த செலவின் அவர்களை வன்மையாக கண்டிக்கிறேன்.

சக்தி கல்வி மையம் said...

ஜாக்கி பதிவுகளை
படிக்காதவராக இருப்பார் .//

ஜெய் ஜாக்கி..

அஞ்சா சிங்கம் said...

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

எங்கள் தானை தலைவர் கவுண்டமணியை வெறும் தலைவர் என்று அழைத்த செலவின் அவர்களை வன்மையாக கண்டிக்கிறேன்.............////////////////
//////////////////
அவர் தானை தலைவர்தான் கமன்ட்டில் பாருங்கள் ........

சி.பி.செந்தில்குமார் said...

ஹா ஹா ஹா அம்மாவுக்கு பதிவு படிக்க எல்லாம் எங்கே நேரம் இருக்கு?

அஞ்சா சிங்கம் said...

சி.பி.செந்தில்குமார் said...

ஹா ஹா ஹா அம்மாவுக்கு பதிவு படிக்க எல்லாம் எங்கே நேரம் இருக்கு?..........//////////
//////////////

அப்படியா? நான் அம்மாவை ஜாக்கியின் தீவிர வாசகி என்று அல்லவா நினைத்திருக்கிறேன் ....

MANO நாஞ்சில் மனோ said...

உங்களுக்கு ஆலோசனை சொல்லும் அந்த அதிசய அம்பிகளை மட்டும் கடைசி வரை கை விட்டுவிடாதீர்கள்.//

கைவிடுறது ஒன்னும் அம்மையாருக்கு புதுசு இல்லையே...!!!

Unknown said...

எலேய் மாப்ள நீ யார கின்ற சரியா சொல்லுய்யா...ஜெ வா இல்ல பதிவரய்யா ஹிஹி!

rajamelaiyur said...

கடைசி போட்டோ ல இருக்குற முவர் யாரு ?

rajamelaiyur said...

இன்று என் வலையில்

தயவு செய்து ஒருமுறை மட்டுமே படிக்கவும்.

அஞ்சா சிங்கம் said...

விக்கியுலகம் said...

எலேய் மாப்ள நீ யார கின்ற சரியா சொல்லுய்யா...ஜெ வா இல்ல பதிவரய்யா ஹிஹி!..................//////////
////////////////////////////////////////////////////////
நான் அவன் இல்லை .............

நெல்லை கபே said...

//பிச்சகாரனுக்கு செக்யுரிட்டி பிச்சகாரனே பேஷ்// super!

நெல்லை கபே said...

எமது வலையில் ;

வருமானவரியை தவிர்க்க மனைவியை டைவர்ஸ் செய்த ஜி.டி.நாயுடு
பங்குச் சந்தையில் ஜெயிக்க வாரன் பஃபெட்(Warren Buffet) சொன்ன எளிய உத்திகள்

Popular Posts