Monday, March 28, 2011

மானம்கெட்ட வாக்காள பெருமக்களே

v

மொத்த தமிழ்நாடே தேர்தல் சுரத்தில் பேஸ்தடித்து இருக்கிறது தண்ணி போடாமலே தமிழ்நாட்டு மக்கள் இப்போது போதையில் இருக்கிறார்கள் . ஐயா வந்தால் என்ன கிடைக்கும் அம்மா வந்தால் என்ன கிடைக்கும் என்று மன கணக்கு போட்டு கொண்டிருக்கிறான் .
அட மானம் கெட்ட வாக்காள பெருமக்களே ஐயாவும் சரியில்லை ஆத்தாளும் சரியில்லை பின்னே மக்களும் தறுதலையாகதான் இருப்பார்கள் .....

இவ்வளவு  இலவசங்கள் இரு கழகங்களும் மாறி மாறி குடுக்கிரார்களே கொஞ்சமாவது சுரனையுடன் எதிர்ப்போம் என்று யாருக்காவது தோன்றுகிறதா ? இவர்கள் இலவசமாக குடுத்து வள்ளல் என்று பெயர் வாங்க அது என்ன அவர்கள் அப்பன் வீட்டு பணமா.?

நல்ல அரசின் வேலை இலவசங்கள் குடுப்பது அல்ல . நல்ல திட்டங்கள் குடுப்பதுதான் . அப்படியே இலவசம் குடுத்துதான் ஆகவேண்டும் என்றால் கல்வியை குடு . மருத்துவத்தை இலவசமாக குடு மற்றதை நாங்கள் சம்பாதித்து கொள்கிறோம் .

நான் இப்போது சம்பாதித்து சேர்த்துவைக்கும் பணம் முழுவதும் என் வாரிசுகளுக்கு முழுமையாக போகும் என்று நினைத்தால் உங்களை விட முட்டாள் வேறு யாரும் இல்லை .

உதாரணம் சொல்கிறேன் கேளுங்கள் முன்பு வைன் ஷாப் கடைகள் எல்லாம் அரசியல்வாதிகள் கையில் இருந்தது அவர்கள் அதில் சம்பாதித்து கட்சிகளுக்கு படி அளந்து கொண்டிருந்தார்கள் .அரசு சாராயம் விற்க ஆரம்பித்த பின்னர் அவர்களுக்கு சம்பாதிக்க வேறு துறை தேவைபட்டது . எல்லோரும் இப்போது கல்வித்தந்தை ஆகிவிட்டார்கள் . தேசிய நெடுஞ்சாலையில் பயணம் செய்யும் பொது ஒருவிஷயத்தை கவனியுங்கள் .பெட்ரோல் பன்க்கை விட அதிகமாக பொறியியல் கல்லூரிகள் இருபக்கமும் இருக்கும் .
அதற்க்கு அடுத்த படியாக மருத்துவம். ஒரு நடுத்தர குடும்பத்தை  சேர்ந்த ஒருவன் தன வாழ்நாள் முழுவதும் உழைத்து சம்பாதிக்கும் பணம் பாதி அவன் வாரிசுகளின் கல்விக்காகவும் மீதி அவனின் முதிய வயதில் மருத்துவதுக்காகவும் செலவழிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறான். ஒருவரின் வாழ்நாள் சம்பாத்தியம் முழுதும்  இருவரால் கொள்ளையடிக்க படுகிறது. அது தெரியாமலேயே ஒண்ணரையணா மிக்சீக்காக சோரம் போகும் வாக்காளர்களை வேறு எப்படி அழைக்க முடியும் .....

இப்போது வரை இலவசங்களை மக்கள் வெறுப்பதாக தெரிய வில்லை ஒரு வித நப்பாசையுடன் தான் இருக்கிறார்கள் .
கல்வி கட்டனத்தை குறைக்கும் நடவடிக்கை என்ன ஆனது. எந்த கட்சியாவது தேர்தல் அறிக்கையில் இதை பற்றி சொல்லி இருக்கிறதா? கல்வி என்ன அத்தியாவசிய பொருளா? மிக்சி மாதிரி ...........

முன்னேற்றம் தரும் திட்டம் என்று ஏதாவது கழகங்களிடம் இருக்கிறதா?
நாம் ஏன் இலவசங்களை எதிர்த்து போராடகூடாது. ஈ என இறத்தல் இழிந்தன்று .............அவ்வை கிழவி அப்பவே சொன்னது .
எங்க வீட்டு கிழவி மூணுமே யாரு தராங்களோ அவுங்களுக்கு தான் ஒட்டு போடணும்ன்னு சொல்லுது ..................
ஏற்கனவே தமிழனின் வீரத்தையும் ரோஷத்தையும் தனித்தன்மையையும் மழுங்கடித்து விட்டோம் ...........
மிச்சம் இருப்பது மானம் மட்டும் தான் அதையும் இந்த அரசியல்வாதிகள் மழுங்கடித்து விடுவார்கள் ................

இது மிகவும் ஆபத்தான அரசியல் என்று யாரும் உணர்ந்ததாக தெரியவில்லை. இதை மக்களுக்கு புரியவைக்க யாரும் முன்வரவும் இல்லை. வலையுலக நண்பர்கள் குறைந்தபட்சம் இந்த பிரச்சாரத்தை முன்னெடுக்க ஆசை படுகிறேன் . இந்த இலவசங்களை பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று அறிய ஆவலாய் இருக்கிறேன் .................. 

   

 

51 கருத்து சொல்றாங்க:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

வடை..

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

i support it

கவிதை வீதி... // சௌந்தர் // said...

சரியான வார்த்தைகள்..
நாட்டு மக்களை இது போன்ற தலையாட்டி பொம்மைகள் போன்று ஆக்கி விட்டார்கள்... என்ன செய்ய..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

கல்விக் கட்டணம் பற்றி பேசாதற்கு காரணம் அனைத்து அரசியல் வாதிகளும் கல்வி நிறுவன்ங்கள் நடத்துகிறார்கள்..
அவர்களுக்கும் அல்லவா பாதிப்பு..

இது போல் சென்றால் இலவசங்களுக்காக நம் தன்மானத்தை தாறை வார்க்க வேண்டியதுதான்...

அஞ்சா சிங்கம் said...

# கவிதை வீதி # சௌந்தர் said...

வடை..////////

வாங்க நண்பரே .........

அஞ்சா சிங்கம் said...

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

i support it.................../////////////

நன்றி கண்டிப்பாக சாமானியர் களுக்கு புரியும் படி ஏதாவது செய்தாக வேண்டும் ...............

அஞ்சா சிங்கம் said...

# கவிதை வீதி # சௌந்தர் said...

சரியான வார்த்தைகள்..
நாட்டு மக்களை இது போன்ற தலையாட்டி பொம்மைகள் போன்று ஆக்கி விட்டார்கள்... என்ன செய்ய..//////////////

குறைந்த பட்சம் மக்களுக்கு புரியும் படி எடுத்து சொல்வோம் நம் வீட்டில் உள்ளவர்களாவது கேட்பார்கள் ..............

கவிதை வீதி... // சௌந்தர் // said...

ஏறக்குறை இதே பொருளுடைய என்னுடைய பதிவையும் பாருங்கள்..

http://kavithaiveedhi.blogspot.com/2011/03/blog-post_25.html

ரஹீம் கஸ்ஸாலி said...

சரியான சாட்டையடி பதிவு....இன்றைய அடிப்படை தேவை கல்வியும், மருத்துவமும் தான்.சரியாக சொன்னீர்கள்.
இந்த பதிவையும் படித்துவிட்டு உங்கள் கருத்தி சொல்லுங்கள் நண்பரே
http://ragariz.blogspot.com/2011/03/tweet-or-poem.html
இதை கவிதையென்று சொல்வதோ...ட்வீட்டென்று சொல்வதோ உங்க இஷ்டம்.

அஞ்சா சிங்கம் said...

# கவிதை வீதி # சௌந்தர் said... ஏறக்குறை இதே பொருளுடைய என்னுடைய பதிவையும் பாருங்கள்..
//////////////////////////////////////
பார்த்தேன் நண்பா அருமை இலவசம் வாங்குவது அவமானம் என்று புரிய வைப்போம் .........

அஞ்சா சிங்கம் said...

ரஹீம் கஸாலி said... சரியான சாட்டையடி பதிவு....இன்றைய அடிப்படை தேவை கல்வியும், மருத்துவமும் தான்.சரியாக சொன்னீர்கள்.
இந்த பதிவையும் படித்துவிட்டு உங்கள் கருத்தி சொல்லுங்கள் நண்பரே.........///////////////

பார்த்தேன் நண்பரே நல்ல கவிதை வரிகள் ...................

பன்னிக்குட்டி ராம்சாமி said...

பிச்சி உதறிட்டே மாப்பு......... அவசியம் எல்லாரும் கவனிக்க வேண்டிய விஷயங்கள்..........!

அஞ்சா சிங்கம் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

பிச்சி உதறிட்டே மாப்பு......... அவசியம் எல்லாரும் கவனிக்க வேண்டிய விஷயங்கள்..........!////////////////
/////////////////
வாங்க குரு எனக்கு ஆத்திர ஆத்திரமா வருது அதான் கொஞ்சம் சீரியஸ் ஆய்ட்டேன் ................

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////இப்போது வரை இலவசங்களை மக்கள் வெறுப்பதாக தெரிய வில்லை ஒரு வித நப்பாசையுடன் தான் இருக்கிறார்கள் .
கல்வி கட்டனத்தை குறைக்கும் நடவடிக்கை என்ன ஆனது. எந்த கட்சியாவது தேர்தல் அறிக்கையில் இதை பற்றி சொல்லி இருக்கிறதா? கல்வி என்ன அத்தியாவசிய பொருளா? மிக்சி மாதிரி ...........
/////

ரொம்ப ரொம்ப சிந்திக்க வேண்டிய வரிகள்....

அஞ்சா சிங்கம் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////இப்போது வரை இலவசங்களை மக்கள் வெறுப்பதாக தெரிய வில்லை ஒரு வித நப்பாசையுடன் தான் இருக்கிறார்கள் .
கல்வி கட்டனத்தை குறைக்கும் நடவடிக்கை என்ன ஆனது. எந்த கட்சியாவது தேர்தல் அறிக்கையில் இதை பற்றி சொல்லி இருக்கிறதா? கல்வி என்ன அத்தியாவசிய பொருளா? மிக்சி மாதிரி ...........
/////

ரொம்ப ரொம்ப சிந்திக்க வேண்டிய வரிகள்....////////
/////////////////
ஒரு பொறியாளரை உருவாக்க பெற்றோருக்கு குறைந்தது பத்து லச்சம் செலவாகிறது . அதை சம்பாதிக்க எத்தனை வருடம் ஆகிறது ......................

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////அஞ்சா சிங்கம் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

பிச்சி உதறிட்டே மாப்பு......... அவசியம் எல்லாரும் கவனிக்க வேண்டிய விஷயங்கள்..........!////////////////
/////////////////
வாங்க குரு எனக்கு ஆத்திர ஆத்திரமா வருது அதான் கொஞ்சம் சீரியஸ் ஆய்ட்டேன் ................ /////////

மாப்பு நீ சொன்ன விஷயங்கள் எல்லோருமே சீரியஸ் ஆகவேண்டியவைதான்....!

தமிழ் 007 said...

இவனுங்களும் திருந்த மாட்டானுங்க நம்ம மக்களும் திருந்தமாட்டாங்க நண்பா!

உங்கள் கருத்தை நானும் வழிமொழிகிறேன்..

MANO நாஞ்சில் மனோ said...

எலேய் மக்கா கல்வியும் மருத்துவமும் இந்த நாதாரி பயலுக கண்ட்ரோல்லல்லா இருக்கு...

Unknown said...

மாப்ள செருப்பால அடிச்ச பதிவு..........நாம கூவறது நம்மோட கடமை மட்டுமல்ல மக்களோட அறியாமையும் சேர்ந்து அதில் வெடிக்கும் என்று நம்புவோமாக...........

Unknown said...

//நல்ல அரசின் வேலை இலவசங்கள் குடுப்பது அல்ல . நல்ல திட்டங்கள் குடுப்பதுதான் . அப்படியே இலவசம் குடுத்துதான் ஆகவேண்டும் என்றால் கல்வியை குடு . மருத்துவத்தை இலவசமாக குடு மற்றதை நாங்கள் சம்பாதித்து கொள்கிறோம்//
நச்!!

Chitra said...

வலையுலக நண்பர்கள் குறைந்தபட்சம் இந்த பிரச்சாரத்தை முன்னெடுக்க ஆசை படுகிறேன் . இந்த இலவசங்களை பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று அறிய ஆவலாய் இருக்கிறேன்


.....இந்த இலவசங்களை நம்பி வோட்டு போட
முடிவெடுப்பவர்கள் : வலைப்பதிவுகளை வாசிப்பவர்கள்
ratio என்ன?

வைகை said...

தேசிய நெடுஞ்சாலையில் பயணம் செய்யும் பொது ஒருவிஷயத்தை கவனியுங்கள் .பெட்ரோல் பன்க்கை விட அதிகமாக பொறியியல் கல்லூரிகள் இருபக்கமும் இருக்கும் //

இது உண்மைதான்! இன்றைக்கு காவாலிகள்தான் கல்வித்தந்தையாம்!

வைகை said...

மிச்சம் இருப்பது மானம் மட்டும் தான் //

இன்னுமா இருக்கு?

சி.பி.செந்தில்குமார் said...

>>மானம்கெட்ட வாக்காள பெருமக்களே

ம் சொல்லுங்க...

சி.பி.செந்தில்குமார் said...

இலவசங்கள் பார்த்து மயங்குபவர்கள் நடுத்தர மக்கள் தான்.. படிப்பறிவு குறைவாக உள்ளவ்ர்கள் தான்.. ஆனால் யார் சி எம் என்பதை தீர்மானிக்கற சக்தியும் மெஜாரிட்டியும் அவர்களிடமே இருப்பதுதான் வேதனை

logu.. said...

கண்டிப்பாக எல்லோரிடமும் கொண்டு செல்லப்பட வேண்டிய விசயம் நண்பரே..

அஞ்சா சிங்கம் said...

தமிழ் 007 said...

இவனுங்களும் திருந்த மாட்டானுங்க நம்ம மக்களும் திருந்தமாட்டாங்க நண்பா!

உங்கள் கருத்தை நானும் வழிமொழிகிறேன்..
//////////////////
நன்றி நண்பா ........

அஞ்சா சிங்கம் said...

MANO நாஞ்சில் மனோ said...

எலேய் மக்கா கல்வியும் மருத்துவமும் இந்த நாதாரி பயலுக கண்ட்ரோல்லல்லா இருக்கு...///
////////////////////////

சாராயம் வித்தவன் எல்லாம் இப்போ கல்வி தந்தையாம் ................

அஞ்சா சிங்கம் said...

விக்கி உலகம் said... மாப்ள செருப்பால அடிச்ச பதிவு..........நாம கூவறது நம்மோட கடமை மட்டுமல்ல மக்களோட அறியாமையும் சேர்ந்து அதில் வெடிக்கும் என்று நம்புவோமாக......./////////////////////
//////////////////////////////
இவனுங்களுக்கு வெறும் செருப்படி மட்டும் பத்தாது சாணி தொட்டு அடிக்கணும் ...............

அஞ்சா சிங்கம் said...

ஜீ... said...
நச்...............

////////////
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா ............

அஞ்சா சிங்கம் said...

Chitra said...

வலையுலக நண்பர்கள் குறைந்தபட்சம் இந்த பிரச்சாரத்தை முன்னெடுக்க ஆசை படுகிறேன் . இந்த இலவசங்களை பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று அறிய ஆவலாய் இருக்கிறேன்


.....இந்த இலவசங்களை நம்பி வோட்டு போட
முடிவெடுப்பவர்கள் : வலைப்பதிவுகளை வாசிப்பவர்கள்
ratio என்ன?//////////////////////////////////////
//////////////////////////
பதிவர்களில் கூட இந்த விழிப்புணர்வு இல்லை குறைந்த பட்சம் அவர்கள் குடும்பத்தையாவது அவர்கள் திருத்த முடியும் ......
மருத்துவத்தையும் கல்வியையும் இலவசமாக கேட்டு பெறுவோம் வேரு எந்த இலவசமும் எங்களுக்கு வேண்டாம் என்று சொல்லுகிற துணிச்சலை வளர்க்க வேண்டும் ..........

அஞ்சா சிங்கம் said...

வைகை said...

தேசிய நெடுஞ்சாலையில் பயணம் செய்யும் பொது ஒருவிஷயத்தை கவனியுங்கள் .பெட்ரோல் பன்க்கை விட அதிகமாக பொறியியல் கல்லூரிகள் இருபக்கமும் இருக்கும் //

இது உண்மைதான்! இன்றைக்கு காவாலிகள்தான் கல்வித்தந்தையாம்!................./////////////
//////////////
ஊருக்குள்ள தாலியை அறுத்துக்கிட்டு ஓடுனது துண்டுபீடியை கிள்ளி குடிச்சது . சாராயம் காச்சினது எல்லாம் கல்வி தந்தை ஆனா இப்படிதான் இருக்கும் ...............................

அஞ்சா சிங்கம் said...

வைகை said...

மிச்சம் இருப்பது மானம் மட்டும் தான் //

இன்னுமா இருக்கு?.............////////////////

கொஞ்சம் பேருக்காவது இருக்குன்னு நெனைக்கிறேன் ...................

அஞ்சா சிங்கம் said...

சி.பி.செந்தில்குமார் said...

>>மானம்கெட்ட வாக்காள பெருமக்களே

ம் சொல்லுங்க............/////////////////////
இது என்ன அட்டண்டன்சு புது மாதிரி இருக்கு ...............

அஞ்சா சிங்கம் said...

சி.பி.செந்தில்குமார் said...

இலவசங்கள் பார்த்து மயங்குபவர்கள் நடுத்தர மக்கள் தான்.. படிப்பறிவு குறைவாக உள்ளவ்ர்கள் தான்.. ஆனால் யார் சி எம் என்பதை தீர்மானிக்கற சக்தியும் மெஜாரிட்டியும் அவர்களிடமே இருப்பதுதான் வேதனை..................////////////////////////
/////////////////////////
உண்மைதான் நாம் புரிய வைக்க வேண்டும் கல்வியை இலவசமாக பெறும்போது அதனால் கிடைக்கும் லாபம் அவர்களுக்கு தெரியாது அவர்கள் சேமிப்பு கரைவதே கல்விக்கும் மருத்துவத்துக்கும் மட்டும் தான் .........................

அஞ்சா சிங்கம் said...

logu.. said...

கண்டிப்பாக எல்லோரிடமும் கொண்டு செல்லப்பட வேண்டிய விசயம் நண்பரே..///////////////

நன்றி நண்பா .................

Sivakumar said...

// இந்த இலவசங்களை பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று அறிய ஆவலாய் இருக்கிறேன் //

//ஒரு நடுத்தர குடும்பத்தை சேர்ந்த ஒருவன் தன வாழ்நாள் முழுவதும் உழைத்து சம்பாதிக்கும் பணம் பாதி அவன் வாரிசுகளின் கல்விக்காகவும் மீதி அவனின் முதிய வயதில் மருத்துவதுக்காகவும் செலவழிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறான்//

நம்ம நாட்ல நடுத்தர குடும்பத்துல பிறந்தவன் என்னைக்கிதான் சந்தோசமா இருந்துருக்கான். வேலை, புள்ளகுட்டி...இந்த மாநிலத்தில் பிறக்க என்ன புண்ணியம் செய்தோமோ..

Robin said...

இந்த பிளாக் கூட இலவசமா கிடைத்ததுதான்!

அஞ்சா சிங்கம் said...

Robin said...

இந்த பிளாக் கூட இலவசமா கிடைத்ததுதான்!...........///////////////
////////////////
இது இலவசம் அல்ல நம்மை வைத்து ட்ராபிக் ரேங்க்கில் கூகிள் சம்பாதிக்கிறது .........
கூகிள் என்பது ஒரு நிறுவனம் .......லாப நோக்கிற்கு வேலை செய்கிறார்கள் .
அரசு அப்படியா ?

சக்தி கல்வி மையம் said...

ரொம்ப லேட்டு...

சக்தி கல்வி மையம் said...

ஓட்டு போட மறுபடியும் வந்திருக்கோமில்ல..

மாலதி said...

சரியான சாட்டையடி பதிவு....இன்றைய அடிப்படை தேவை கல்வியும், மருத்துவமும் தான்.

போளூர் தயாநிதி said...

சரியான வார்த்தைகள்..
நாட்டு மக்களை இது போன்ற தலையாட்டி பொம்மைகள் போன்று ஆக்கி விட்டார்கள்... என்ன செய்ய..

இராமநாதன் சாமித்துரை said...

அர்த்தமான உரத்த சிந்தனை. செவியுடையோர் கேட்பர்.

Sunny said...

Entha kazhagam atchikku vandalum adhay kadhai than. Makkalum enna than seivargal paavam. Padipparivu illatha pamara makkal miga adhigam irukkum nattil kural kodutthal mattum pothathu. Arasu ivargal kaiiyil ulla varaiyil, evanum ivargalin mayirai kooda pidinga mudiyathendra aanavam. Makkalagiya naamo idhai edirthu edhuvum seiya mun varuvathillai. Thiraipadatthil kadhanayagan samudhaya avalangalai ethirthu poradugayil kai kotti rasippom aanal nijatthil naam ethuvume seivathillai enbathu than unmai.

ivvaluvu ezhuthiya anja singame, neengal ithai thadukka enna seithullirgal idhuvaraiyil? verum pathivu mattum pothuma?

Sathik Ali said...

நல்லா சொன்னீங்க.எல்லோருக்கும் கேட்கட்டும்.

நேர்மையான மக்களே நேர்மையான அரசை உருவாக்க முடியும்.இலவசம் விரும்பும் மக்கள் தேர்வு செய்யும் அரசு ஊழலில் ஊறியதாகவே இருக்கும்.

Sunny said...

எந்த கழகம் ஆட்சிக்கு வந்தாலும் ஒரே கதை தான். எதுவும் புதிதாக நடப்பதற்கு வாய்ப்பே இல்லை. மக்களும் என்ன தான் செய்வார்கள்? என்ன தான் செய்ய முடியும்? இலவசம் கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் இந்த இரண்டு கழகங்கள் தான் தமிழகத்தின் சாபக்கேடு என உறுதியாக தெரிகிறது. இரண்டு கழகங்கள் செய்த ஊழல்களுக்கு கணக்கே இல்லை. ஆனாலும் நமது ஊரில் வாழும் முட்டாள்கள் தனது கட்சியை பற்றி தம்பட்டம் அடித்து கொள்ள தவறுவதில்லை. சில நேரம் நமது முட்டாள்கள் (தொண்டர்கள்) தனது அம்மாவையும் ஐயாவையும் பற்றி பேசுகையில் சிரிப்பதா அழுவதா என்று புரிவதில்லை.

குடும்ப அரசியலை பற்றி இந்திரா காந்திக்கு எதிராக பேசிய ஐயா இன்று அதையே தான் செய்து கொண்டுள்ளார் ஆனாலும் அது அந்த கட்சி தொண்டர்களுக்கு பெரிதாக தெரிவதில்லை. வேகுபல ஊழல்களில் சிக்கிய அம்மா இன்று தான் தருமனின் தங்கை என நடிப்பதும் அந்த கட்சி தொண்டர்களுக்கு பெரிதாக தெரியவில்லை. அனைத்து மனிதரும் ஒன்று என்று வாழவேண்டிய கால கட்டத்தில் சாதி அரசியல் நடத்தும் சிறிய கட்சிகள். ஒதுக்கிடு என்ற பெயரில் முட்டாள்களை முக்கிய பொறுப்பில் அமர்த்தும் அரசாங்கம். அவலங்களின் பட்டியலோ ஏராளம் ஆனால் அதை எதிர்த்து போராட இயலாதவர்கலாகிவிட்டோம் மக்களாகிய நாம்.

இப்படிப்பட்ட சுதந்திரத்தை வாங்கத்தான் அந்த பாடு பட்டார்களோ? இந்த மானமில்லா பிழைப்பை விட ஆங்கிலேயர் ஆட்சியிலேயே இருந்திருக்கலாம். அன்று அவர்கள் திருடினர் இன்று நம்மவர்களே நம் தாயகத்தை கூட்டி கொடுக்கும் வேளையில் இடுபட்டுள்ளனர். வெட்க கேடு!

அஞ்சா சிங்கம் said...

!* வேடந்தாங்கல் - கருன் *! said..
நன்றி.........////////

malathi in sinthanaikal said...

சரியான சாட்டையடி பதிவு....இன்றைய அடிப்படை தேவை கல்வியும், மருத்துவமும் தான்.
///////////////////
நன்றி ...................////////////////
போளூர் தயாநிதி said...

சரியான வார்த்தைகள்..
நாட்டு மக்களை இது போன்ற தலையாட்டி பொம்மைகள் போன்று ஆக்கி விட்டார்கள்... என்ன செய்ய..
/////////////////////////////////////
நமக்கு தேவையானதை நாம் தான் கேட்டு பெற வேண்டும் இவர்கள் குடுப்பதை எல்லாம் வாங்கிக்கொள்ள முடியாது
இராமநாதன் சாமித்துரை said...

அர்த்தமான உரத்த சிந்தனை. செவியுடையோர் கேட்பர்.......

நன்றி ......................//////

அஞ்சா சிங்கம் said...

Sathik Ali said...

நல்லா சொன்னீங்க.எல்லோருக்கும் கேட்கட்டும்.

நேர்மையான மக்களே நேர்மையான அரசை உருவாக்க முடியும்.இலவசம் விரும்பும் மக்கள் தேர்வு செய்யும் அரசு ஊழலில் ஊறியதாகவே இருக்கும்.........///////////////////
////////////////
ஊழல் செய்வதற்காகவே இப்போதேல்லாம் கட்சிகள் ஆரம்பிக்க படுகிறது ...........

அஞ்சா சிங்கம் said...

Sunny said...
/////////////////////

தங்கள் வருகைக்கும் விரிவான கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே ..........

Jayadev Das said...

இலவசம் என்று எதுவுமே இல்லை, நாம் பாக்கெட்டில் இருந்து நூறு ரூபாயை எடுத்து நமக்கே ஒரு ரூபாயை இலவசமாக வழங்கும் வள்ளல் இன்றைய அரசு. படிக்காத பாமர மக்களுக்கு இது புரியாதுன்னு நினைக்கிறோம், ஆனா படிச்சவன் அதை விட அயோக்கியனாய் இருக்கிறான், படித்த மக்கள் வாழும் நகர்ப் புறங்களில் தி.மு.க. அதிகம் வெற்றி பெறுவதே இதற்க்கு சாட்சி. காரணம்? அரசுப் பணியிலுள்ளவர்கள், ஆசிரியர்களுக்கு இந்த அரசு ஒரு போதும் குறை வைப்பதில்லை, இவர்கள் அடிப்பது மொத்தத் தமிழ் நாட்டை, அதைப் பார்த்து கூக்குரல் இடாமளிருக்க இவர்கள் வாயை புத்திசாலித் தனமாக அடைத்து விடுகிறார் மஞ்சள் துண்டு. மக்கள் வாயை அடைக்க இலவசம். இவரது நோக்கம் கொள்ளையடிப்பது, அடித்ததை வெளிநாட்டு வங்கிகளில் போடுவது. மொத்தத் தமிழ நாட்டையும் இந்தாள் விற்று விட்டு பாடையில் எரி போய் விடுவான், நாம் ஆறு கோடி சனம் தலை முறை தலை முறைக்கும் தவிக்கப் போகிறோம்.

Popular Posts