Monday, January 31, 2011

இயலாமையும் இறையாண்மையும் .........

v




கடந்த இரு நாட்களாக பதிவுலகில் தமிழக மீனவர்கள் பிரச்சனை என்கிற சூறாவளி மையம் கொண்டுள்ளது .
அனைவரும் அதை பற்றி ஒரு பதிவு கட்டாயம் எழுத வேண்டும் .

ஏறதாழ அனைவரும் இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து பதிவு போட்டுவிட்டார்கள் .
நாம் நம் எதிர்ப்பை பதிவு செய்ய எந்த தளங்களுக்கு செல்லவேண்டும் என்கிற தகவல்கள் .நண்பர் பிரபா தளத்தில் விரிவாக சொல்லிருக்கிறார் .
அதன் இணைப்பு இங்கே இருக்கிறது.

நண்பர் ராஜன் நாம் அனைவரும் உலககோப்பை கிரிக்கட்டை புறக்கணிக்கும் யோசனை கூறி இருக்கிறார் .
நல்ல ஆனால் சாத்தியமில்லாத யோசனை .
500 முதல் 10000 ருபாய் வரை செலவு செய்து டிக்கெட் வாங்கி மைதானத்தில் கிரிகட் பார்க்கும் ரசிகர்களில் எத்தனை பேர் தமிழ் உணர்வாளர்கள் இருப்பார்கள் ?

இப்போது போராட்டம் மீனவர்கள் கொல்லபடுவதை தடுப்பதற்கா ? அல்லது மீனவர்கள் மீன்பிடிக்கும் உரிமையை மீட்பதற்கா ?
எல்லை தாண்டும் மீனவர்களை சுடவேண்டாம் என்று இந்தியா வற்புறுத்தி இருக்கிறது .
சரிதான்பா இனிமேல் சுடமாட்டாங்க .கட்டைல அடிச்சும் . கழுத்துல கையறு கட்டி இழுத்தும் தான் கொல்லுவாங்க.

மீனவர்கள் படுகொலை எந்த நாட்களில் அதிகமாக நடக்கிறது என்று கவனித்தால் ஒரு உண்மை நமக்கு புரியும் .
அந்த நாளில் இந்திய கிரிகட் அணி உலகின் ஏதாவது ஒரு மூலையில் மேட்ச் ஆடிகொண்டிருக்கும் .
சமீபத்திய கொலை கூட இந்தியா சவுத் ஆப்ரிகா கடைசி மேட்ச் அன்றுதான் .
அதற்க்கு என்ன காரணம் இருக்க முடியும் ?
அந்த நாளில் கொலை செய்தால் இந்திய மக்கள் இந்தியாவின் கிரிகெட் வெற்றி தோல்வி செய்திகளுக்கு முக்கியத்துவம் அளிப்பார்கள் .
மீனவர் கொலை என்னும் செய்தி தமிழ்நாட்டில் மட்டும் அல்லது ஒரு மாவட்ட செய்தி அளவில் சுருங்கிவிடும் .
இந்த கணிப்பு உண்மை என்றால் இது திட்டம் மிட்ட படுகொலை என்பதில் சந்தேகம் இல்லை .

இந்திய அரசாங்கம் இருநாட்டு மீனவர்களும் மீன்பிடிக்கும் வண்ணம் ஒரு ஒப்பந்தம் இலங்கையிடம் போட முடியாதா ?
இயலாமையின் மொத்த உருவம் நம் இந்திய அரசாங்கம் இதற்க்கு இறையாண்மை ஒரு கேடா ? 
இந்த சொல் கொஞ்சம் கடினமாக இருந்தாலும் உண்மை அதுதான் ........................

டிஸ்கவரி சானலில் காட்டு மிருகங்களுக்கு கழுத்தில் G.P.S. கருவி மாட்டுவார்கள் அது காட்டுக்குள் எங்கெல்லாம் செல்கிறது .
அதன் எல்லை என்ன என்று கண்காணிக்க .
அதை போல் அமெரிக்காவில் படிக்க போன நம் இந்திய மாணவர்களுக்கு காலில் G.P.S. கருவி பொருத்தி இருக்கிறார்கள் .
வழக்கம் போல் இந்தியா இதற்க்கு கண்டனம் தெரிவித்திருக்கிறது .
உலக நாடுகள் அனைத்திற்கும் தெரியும் இந்தியாவின் கண்டனம் என்கிற வார்த்தைக்கு என்ன பலம் என்று .
அதை ஒரு டாய்லட் பேப்பரில் கண்டனம் என்று எழுதி கொடுத்திருந்தால் அமெரிக்ககாரன் துடைத்து போட வசதியாக இருந்திருக்கும் .
அது சரி முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் ராணுவ அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் ஆகியோர்களையே டிரஸ்சை கழட்டி ராகிங் செய்தவர்கள் தானே . 
மாணவர்களை மட்டும் சும்மா விடுவார்களா கழுத்தில் இன்னும் சங்கிலி மாட்ட வில்லை என்று சந்தோச படவேண்டியதுதான் .

குஜராத்தில் பூகம்பம் .கார்கில் போர் என்று வடக்கில் என்ன நடந்தாலும் நாங்கள் பதறி போய் விளக்கேற்றி நிதி திரட்டி தருகிறோம் .
தெற்கில் என் தமிழ் இனம் அழியும் போதும் மீனவ பெண்கள் தாலி அறுத்த போதும் வடக்கில் ஒரு மயிர் கூட மடங்கவில்லை என்றால் .
இதற்க்கு பெயர்தான் உங்கள் மானங்கெட்ட இறையாண்மை என்றால்.
போங்கடா நீங்களும் உங்க இறையாண்மையும்........................................

இந்தியன் என்று சொல்லடா .......எல்லாரிடமும் அடிவாங்கீட்டு நில்லடா ...........................


டிஸ்கி :- கலைஞ்ர் டி.வீ. இல் ஒருவர் அடிக்கடி தமிழர்களே தமிழர்களே என்னை கடலில் தூக்கி போடுங்கள் என்று சொல்கிறார் .
வாருங்களேன் அவர் ஆசையை நிறைவேற்ற ஒருமுறை முயற்சி செய்து பார்க்கலாம்.   


  

24 கருத்து சொல்றாங்க:

சி.பி.செந்தில்குமார் said...

போடு முத வெட்டை

சி.பி.செந்தில்குமார் said...

>>>>இந்தியன் என்று சொல்லடா .......எல்லாரிடமும் அடிவாங்கீட்டு நில்லடா ...........................



உண்மை

சி.பி.செந்தில்குமார் said...

>>>டிஸ்கி :- கலைஞ்ர் டி.வீ. இல் ஒருவர் அடிக்கடி தமிழர்களே தமிழர்களே என்னை கடலில் தூக்கி போடுங்கள் என்று சொல்கிறார் .
வாருங்களேன் அவர் ஆசையை நிறைவேற்ற ஒருமுறை முயற்சி செய்து பார்க்கலாம்.

ஹா ஹா

ரஹீம் கஸ்ஸாலி said...

பதிவு சூப்பர் என்றால்.....டிஸ்கி கலக்கல் நண்பா.....படிச்சுட்டு சும்மா போகல....வாக்களித்துவிட்டு, பின்னூட்டமிட்டுத்தான் செல்கிறேன்

ரஹீம் கஸ்ஸாலி said...

தமிழ் 10 இல் இணைத்தும் விட்டேன்

வைகை said...

தூக்கிபோடும்போது என்னையும் கூப்புடுங்க...அந்த கட்ட ரெம்ப கனமாஇருக்கும்!

Unknown said...

//குஜராத்தில் பூகம்பம் .கார்கில் போர் என்று வடக்கில் என்ன நடந்தாலும் நாங்கள் பதறி போய் விளக்கேற்றி நிதி திரட்டி தருகிறோம் .
தெற்கில் என் தமிழ் இனம் அழியும் போதும் மீனவ பெண்கள் தாலி அறுத்த போதும் வடக்கில் ஒரு மயிர் கூட மடங்கவில்லை//
உண்மை!

Unknown said...

"கலைஞ்ர் டி.வீ. இல் ஒருவர் அடிக்கடி தமிழர்களே தமிழர்களே என்னை கடலில் தூக்கி போடுங்கள் என்று சொல்கிறார் .
வாருங்களேன் அவர் ஆசையை நிறைவேற்ற ஒருமுறை முயற்சி செய்து பார்க்கலாம்"

>>>>>>>>>>

இத செய்யலாம் முதல்ல வாங்க

Chitra said...

ம்ம்ம்ம்....... அவல நிலை என்றுதான் மாறுமோ?

Unknown said...

டிஸ்கி :- கலைஞ்ர் டி.வீ. இல் ஒருவர் அடிக்கடி தமிழர்களே தமிழர்களே என்னை கடலில் தூக்கி போடுங்கள் என்று சொல்கிறார் .


யோவ் நீவேற அவரு தூக்கிபோட்டாலும் மெதப்பாரு

அஞ்சா சிங்கம் said...

சி.பி.செந்தில்குமார் said...
>>>>இந்தியன் என்று சொல்லடா .......எல்லாரிடமும் அடிவாங்கீட்டு நில்லடா ...........................



உண்மை.....................////////////////////////////////////////


வருத்தமான உண்மை ...............

அஞ்சா சிங்கம் said...

ரஹீம் கஸாலி said...
பதிவு சூப்பர் என்றால்.....டிஸ்கி கலக்கல் நண்பா.....படிச்சுட்டு சும்மா போகல....வாக்களித்துவிட்டு, பின்னூட்டமிட்டுத்தான் செல்கிறேன்...........................////////////////////////////////


ரொம்ப நன்றி நண்பரே......................

அஞ்சா சிங்கம் said...

ஜீ... said...
//குஜராத்தில் பூகம்பம் .கார்கில் போர் என்று வடக்கில் என்ன நடந்தாலும் நாங்கள் பதறி போய் விளக்கேற்றி நிதி திரட்டி தருகிறோம் .
தெற்கில் என் தமிழ் இனம் அழியும் போதும் மீனவ பெண்கள் தாலி அறுத்த போதும் வடக்கில் ஒரு மயிர் கூட மடங்கவில்லை//
உண்மை!
///////////////////////////////////////////////////////

எல்லோருக்கும் புரிந்தால் சரி..................

அஞ்சா சிங்கம் said...

வைகை said...
தூக்கிபோடும்போது என்னையும் கூப்புடுங்க...அந்த கட்ட ரெம்ப கனமாஇருக்கும்........................//////////////////


கண்டிப்பா ரெண்டு கை பத்தாது .................

அஞ்சா சிங்கம் said...

நா.மணிவண்ணன் said...
டிஸ்கி :- கலைஞ்ர் டி.வீ. இல் ஒருவர் அடிக்கடி தமிழர்களே தமிழர்களே என்னை கடலில் தூக்கி போடுங்கள் என்று சொல்கிறார் .


யோவ் நீவேற அவரு தூக்கிபோட்டாலும் மெதப்பாரு.................//////////////////////////////

தக்காளி அவ்ளோ பெரிய அப்பா டேகரா.. அதையும் பார்க்கலாம் .....................

Speed Master said...

வெட்கக்கேடு

அஞ்சா சிங்கம் said...

Speed Master said...
வெட்கக்கேடு//////////////////////////////


எல்லாம் நமக்கு பழக்கபட்டதுதானே.....................

Anonymous said...

>>> நிஜமாவே நீங்க அஞ்சாசிங்கம்தான்.

Philosophy Prabhakaran said...

// 500 முதல் 10000 ருபாய் வரை செலவு செய்து டிக்கெட் வாங்கி மைதானத்தில் கிரிகட் பார்க்கும் ரசிகர்களில் எத்தனை பேர் தமிழ் உணர்வாளர்கள் இருப்பார்கள் ? //

கரெக்டு தான்...

டிஸ்கி சூப்பர்...

Philosophy Prabhakaran said...

ஆல் இன் ஆல் அழகுராஜா கடைக்கு போய் மெரீனா பீச் சந்திப்பின் முழு விவரத்தை தெரிந்துக்கொள்ளவும்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////டிஸ்கி :- கலைஞ்ர் டி.வீ. இல் ஒருவர் அடிக்கடி தமிழர்களே தமிழர்களே என்னை கடலில் தூக்கி போடுங்கள் என்று சொல்கிறார் .
வாருங்களேன் அவர் ஆசையை நிறைவேற்ற ஒருமுறை முயற்சி செய்து பார்க்கலாம். ///////

வேற எதுவும் சொல்ல விரும்பல!

Anonymous said...

சமீபத்திய கொலை கூட இந்தியா சவுத் ஆப்ரிகா கடைசி மேட்ச் அன்றுதான்//வித்தியாசமான கணிப்பா இருக்கே

அஞ்சா சிங்கம் said...

உண்மை அதற்க்கு முந்தைய கொலை இலங்கை உடன் போட்டி நடக்கும் பொது ..

Anonymous said...

இந்த மாதிரியான எழுத்துக்க​ளை படிக்கும் ​பொழுதுதான் வாழ்க்​கையில் நம்பிக்​கையும உற்சாகமும் வருகிறது. எதிரிகளின் ​நெஞ்​சை பிழந்து இரத்தம் குடித்தது ​போல. ​தொடர்ந்து எழுதுங்கள். ​வெற்றி நம​தே!

Popular Posts