Sunday, November 3, 2019

கி. பி. 3553

v
நாடே விழாகோலம் பூண்டிருந்தது இந்திய நாட்டின் முக்கிய திருவிழாக்களில் ஓன்று அது.

இதுவறை இதை கொண்டாடும் வசதி, வாய்ப்பு அவனுக்கு அமைந்ததில்ல.
ஆனால் இந்த முறை பண்ணையார் தாராளமாகவே பழைய துணிகளையும், அரிசி,வெல்லம், என்று வாரி கொடுத்திருந்தார்.

உற்சாகமாக வீட்டுக்கு வந்தவனை அவனது 8வயது மகன் வந்து கட்டிகொண்டான். எல்லாம் கையில் இருந்த பையும் அதில் நிறைந்திருந்த  பொருட்களும்தான் காரணம்.

அப்பா இந்த வருஷம் நாம மோடி ஜெயந்தி கொண்டாடுவோமாப்பா?
ஆமாம்டா மகனே பாத்தியா பண்ணையார் எவ்வளோ குடுத்திருக்காருன்னு.
நாம ஏன்ப்பா மோடி ஜெயந்தி கொண்டாடுறோம்?
அதுவா இன்னைக்குதான் விஷ்ணுவின் அவதாரமான மோடி பிறந்தநாள்.
அந்த கதையை சொல்லுறேன் கேளு.


அதாவது முன்னொரு காலத்தில பெரியார்,பெரியார்ன்னு ஒரு அசுரகுல தலைவன்  இருந்தான். அவன் தேவர்களை எல்லாம் ரொம்ப கொடுமைபடுத்தினான்.
அவர்களை உழைத்து சாப்பிடசொல்லி கட்டாயபடுத்தினான்.

பிராமணன் அல்லாத அசுரர்களை படிக்க சொன்னான் தேவர்களும் அசுரர்களும் சமம் என்று சட்டம் இயற்றினான். இப்படியாக நாட்டில் தர்மம் அழிந்து அதர்மம் தலைதூக்கிய நேரத்தில் தேவர்கள் எல்லாம் மகாவிஷ்ணுவிடம் முறையிட்டார்கள்.

 பகவான் உடனே என் சக்தியால் மட்டும் இந்த அசுரனை அழிக்கமுடியாது இதற்க்கு சிவனின் உதவியும் வேண்டும் என்று நினைத்து. மோகினியாக உருமாறி சிவனின் கைலாயம் செல்கிறார். சிவனுக்கு அப்போது மூடு சரியில்லாததால். ஆட்டமா தேரோட்டமா என்று பாட்டு பாடி நடனம் ஆடி சிவனை உசுப்பேத்துகிறார்.

இதனால் மூடு வந்த சிவன் பெண்வேடத்தில் இருக்கு விஷ்ணுவிடம் ஆனந்த சயனத்தில் ஈடுபடுகிறார். இப்படி பல ஆண்டுகள் தொடர்ந்து நடக்கிறது.
ஒரு நாள் சிவனின் விந்து தெறித்துசிதருகிறது அதில் ஒருதுளி குஜராத்தில் உள்ள ஒரு தாமரை குளத்தில் உள்ள ஒரு தாமரையில் விழுகிறது.

 அந்த தாமரையில் இருந்து மோடி அவதரிக்கிறார்.சிவனும் விஷ்ணுவும் மேட்டர் செய்வதில் காலதாமதம் ஆனதால் பெரியார் என்கிற அந்த அசுரகுல தலைவன் வயதாகி இறந்துவிடுகிறார்.
ஆனாலும் அவரின் தம்பிகள் அண்ணா, கருணாநிதி, என்ற இரண்டுபேர் நாட்டை ஆள்கிறார்கள்.
அவர்களும் பெரியாரை போலவே அனைத்து சாதியினரும் அர்சகர் ஆகலாம். இலவச கல்வி என்று நால்வர்ண தர்மத்தை சிதைக்கிறார்கள்.

ராமன் எப்படி ராவணனை வீழ்த்தி விபீஷணன்னை மன்னன் ஆக்கினாரோ அதேபோல் மோடி இந்த அசூரர்களை வீழ்த்தி அசுரகுலத்தில் இருந்த எடப்பாடி என்றவனை மன்னனாக்கி நீட், 5, 8, ஆம் வகுப்புக்கு போதுதேர்வு தேவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு, குலகல்வி, என்று வருணாசிரம தர்மத்தை மீண்டும் நிலைநாட்டினார்.

அவர் பிறந்தநாளைதான் நாம் மோடி ஜெயந்தி என்று கொண்டாடுகிறோம்மகனே.

அப்பா இந்த அசுரர்கள் எல்லாம் யாருப்பா?
நம்ம முப்பாட்டனுங்கதான் மகனே, போ போயி அம்மா லட்டு உருட்டிடாளான்னு பாரு. அப்படியே களத்துமேட்டில் வேலை செய்யும் உன் நண்பர்களுக்கும் ஹாப்பி மோடிஜெயந்தி சொல்லிடு மகனே.

4 கருத்து சொல்றாங்க:

தினேஷ் ராம் said...

மீ தி ஃபர்ஸ்ட் அண்ணே!

ஆனா மோடி யாரையும் வீழ்த்தவில்லை. காலம் அவருக்கு சாதகமாக அமைந்தது. அவ்ளோதான்!

அஞ்சா சிங்கம் said...

//தினேஷ் ராம் said...
மீ தி ஃபர்ஸ்ட் அண்ணே!

ஆனா மோடி யாரையும் வீழ்த்தவில்லை. காலம் அவருக்கு சாதகமாக அமைந்தது. அவ்ளோதான்!//
ஆனாலும் பார்ப்பினிய கதை உருவாக்கங்கள் இப்படிதானே இருக்கும்.
பெரியாருக்கு பத்து கைகள் இருபது தலைகளையும் சேர்த்துகொள்ளலாம்.

தினேஷ் ராம் said...

நாட்டார் கதைகளும் கூட! சொல்பவரையும் கேட்பவரையும் பொறுத்து புதுப்புது ரூபங்கள் எடுத்த வண்ணமிருக்கும். எந்த வெர்ஷன் டாக்குமென்ட் செய்யப்படுதோ அவை டாமினேட் செய்யும்.ஆமா, நீங்களே அவங்க வெர்ஷன் எழுதிஏன் வெப்பன் சப்ளை செய்றீங்க??

பெரியாரைப் பாட்டுடை நாயகனாக வச்சு ஒருப்சீரிஸ் ஆரம்பிங்க. :-)

திண்டுக்கல் தனபாலன் said...

ஹா... ஹா... செம தாக்குதல்...!

Popular Posts