Wednesday, March 30, 2011

வருங்கால நிரந்தர முதல்வர் டி.ஆர்.(2081)

v

தக்காளி நானும் பார்த்துக்கிட்டு இருக்கேன் .யாருமே எங்க வருங்கால முதல்வரை கண்டுக்க மாட்றாங்க .
வைகோ தேர்தலை புறக்கணித்த போது வளைச்சி வளைச்சி பதிவு எழுதினவங்க எல்லாம் எங்க போனாங்க .
இந்த நாட்டுக்காக எப்பேர் பட்ட தியாகத்தை பண்ணிருக்காரு யாருமே கண்டுக்கலேனா எப்படி ......
அதான் அந்த வரலாற்று சிறப்பு மிக்க அறிக்கையை நான் உங்கள் பார்வைக்கு வைக்கிறேன் படிக்க சோம்பல் படுபவர்களுக்காக காணொளி இணைக்கப்பட்டுள்ளது .
அதனால் அனைவரும் கண்டிப்பாக பார்த்துவிட்டு செல்லவும் வரலாறு மிக முக்கியம் அமைச்சரே ..............


லட்சிய திமுக தலைவர் டி.ராஜேந்தர் வெளியிட்டுள்ள அறிக்கை.....

தற்போது வரும் அறிக்கைகளில் சிலர் தங்கள் கோணத்தில் சொல்வதைப் போல நாங்களும் விரட்டப்பட்டவர்களும் அல்ல. விடு பட்டவர்களும் அல்ல. துரத்தப்பட்டவர்களும் அல்ல.


தொலைநோக்குப் பார்வையில் சிந்தித்துப் பார்த்து தூரம் தள்ளி நின்றவர்கள். கடந்த காலத்து கசந்த அனுபவங்கள் மறக்க வில்லை. அதனால் இந்த தேர்தல் குறித்து இடைப்பட்ட காலத்தில் நான் வாய் திறக்கவில்லை.

இந்த காலத்தில் அரசியலில் முன்னேறுவதற்கு தேவைப்படுகின்றன சில அடிப்படைத் தகுதிகள். அப்படிப்பட்ட தகுதிகள் இருந்தால்தான் தேர்தலில் கூட கிடைக்கும்போல இருக்கிறது கணிசமான தொகுதிகள். இன்றைய சூழலில் அரசியலில் முன்னேறுவதற்கு தேவை யோகம். மாறாக தேவை இல்லவே இல்லையோ தியாகம்.

ஆம் நாட்டு நடப்பைப்பார்த்தால் அரசியல் ஆகி விட்டது கேலிக்கூத்து. அதிக பட்சத்தினர் பேசுகின்றனர்.   வரும் இந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழக மக்கள் வாக்களிக்கும் நாள் ஏப்ரல்-13 வாக்குகளை எண்ணும் நாள் மே-13. இடையில் இருப்பது ஒரு மாசம். எதற்கு இந்த அவகாசம்? எனப் பலர் மனதில் எழுந்தது இந்தக் கேள்வி. எந்த கண்கட்டு வித்தை காரணமாகவும் கண்டு விடக்கூடாதல்லவா தோல்வி.

என இந்த தேர்தலில் இறைவனை நோக்கி நடத்த விரும்புகிறோம் ஒரு வேள்வி. மின்னணு வாக்கு பதிவில் குளறுபடி நடப்பதற்கு இருக்கிறதாம் பல வழிமுறை... ஆகையால் மீண்டும் வர வேண்டும் வாக்குச் சீட்டு முறை... அப்படி ஒரு மாற்றம் வராத வரை இந்திய ஜனநாயகத்துக்கே அதுபெரும் குறை. அமாவாசையன்று மாதத்தில் வான் நிலவுக்கு ஒரு நாள் விடுமுறை. சில நாள் வளர்பிறை.

சில நாள் தேய்பிறை. இந்த சட்டமன்றத் தேர்தலை பொறுத்தவரையில் எங்களுக்கு இருக்கலாம் தேய்பிறை.

இறைவன் அருளால் வரும் காலத்தில் காண்போம் வளர்பிறை. இந்த தேர்தல் காலம் எங்களுக்கான கோடை விடு முறை. கொள்கையைக் காக்க இதுதான் எனக்கு தெரிந்த நடைமுறை. 


தனித்து நின்று தனி ஆவர்த்தனம் வாசிப்போம் என்று சொல்லவும் கூடாது. தண்டவாளம் இல்லாத ஊருக்கு புறப்பட்டு போகவும் முடியாது என்ற சமயோசித முடிவின்படி இந்த சட்ட மன்ற தேர்தலெனும் கிரிக்கெட் ஆட்டத்தில் ஆட்டக் காரர்களாக களமிறங்காமல் வெறும் பார்வையாளர்களாகவே இருக்க விரும்புகிறோம்’’தெரிவித்துள்ளார்.
************************************************************************

எல்லோரும் கரகோஷங்களை எழுப்புங்கள் .........



தமிழ்நாடு எத்தனையோ சோதனைகளையும் வேதனைகளையும் சகித்து கொண்டிருக்கிறது ................
இதையும் சேர்த்துதான் .....................

Monday, March 28, 2011

மானம்கெட்ட வாக்காள பெருமக்களே

v

மொத்த தமிழ்நாடே தேர்தல் சுரத்தில் பேஸ்தடித்து இருக்கிறது தண்ணி போடாமலே தமிழ்நாட்டு மக்கள் இப்போது போதையில் இருக்கிறார்கள் . ஐயா வந்தால் என்ன கிடைக்கும் அம்மா வந்தால் என்ன கிடைக்கும் என்று மன கணக்கு போட்டு கொண்டிருக்கிறான் .
அட மானம் கெட்ட வாக்காள பெருமக்களே ஐயாவும் சரியில்லை ஆத்தாளும் சரியில்லை பின்னே மக்களும் தறுதலையாகதான் இருப்பார்கள் .....

இவ்வளவு  இலவசங்கள் இரு கழகங்களும் மாறி மாறி குடுக்கிரார்களே கொஞ்சமாவது சுரனையுடன் எதிர்ப்போம் என்று யாருக்காவது தோன்றுகிறதா ? இவர்கள் இலவசமாக குடுத்து வள்ளல் என்று பெயர் வாங்க அது என்ன அவர்கள் அப்பன் வீட்டு பணமா.?

நல்ல அரசின் வேலை இலவசங்கள் குடுப்பது அல்ல . நல்ல திட்டங்கள் குடுப்பதுதான் . அப்படியே இலவசம் குடுத்துதான் ஆகவேண்டும் என்றால் கல்வியை குடு . மருத்துவத்தை இலவசமாக குடு மற்றதை நாங்கள் சம்பாதித்து கொள்கிறோம் .

நான் இப்போது சம்பாதித்து சேர்த்துவைக்கும் பணம் முழுவதும் என் வாரிசுகளுக்கு முழுமையாக போகும் என்று நினைத்தால் உங்களை விட முட்டாள் வேறு யாரும் இல்லை .

உதாரணம் சொல்கிறேன் கேளுங்கள் முன்பு வைன் ஷாப் கடைகள் எல்லாம் அரசியல்வாதிகள் கையில் இருந்தது அவர்கள் அதில் சம்பாதித்து கட்சிகளுக்கு படி அளந்து கொண்டிருந்தார்கள் .அரசு சாராயம் விற்க ஆரம்பித்த பின்னர் அவர்களுக்கு சம்பாதிக்க வேறு துறை தேவைபட்டது . எல்லோரும் இப்போது கல்வித்தந்தை ஆகிவிட்டார்கள் . தேசிய நெடுஞ்சாலையில் பயணம் செய்யும் பொது ஒருவிஷயத்தை கவனியுங்கள் .பெட்ரோல் பன்க்கை விட அதிகமாக பொறியியல் கல்லூரிகள் இருபக்கமும் இருக்கும் .
அதற்க்கு அடுத்த படியாக மருத்துவம். ஒரு நடுத்தர குடும்பத்தை  சேர்ந்த ஒருவன் தன வாழ்நாள் முழுவதும் உழைத்து சம்பாதிக்கும் பணம் பாதி அவன் வாரிசுகளின் கல்விக்காகவும் மீதி அவனின் முதிய வயதில் மருத்துவதுக்காகவும் செலவழிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறான். ஒருவரின் வாழ்நாள் சம்பாத்தியம் முழுதும்  இருவரால் கொள்ளையடிக்க படுகிறது. அது தெரியாமலேயே ஒண்ணரையணா மிக்சீக்காக சோரம் போகும் வாக்காளர்களை வேறு எப்படி அழைக்க முடியும் .....

இப்போது வரை இலவசங்களை மக்கள் வெறுப்பதாக தெரிய வில்லை ஒரு வித நப்பாசையுடன் தான் இருக்கிறார்கள் .
கல்வி கட்டனத்தை குறைக்கும் நடவடிக்கை என்ன ஆனது. எந்த கட்சியாவது தேர்தல் அறிக்கையில் இதை பற்றி சொல்லி இருக்கிறதா? கல்வி என்ன அத்தியாவசிய பொருளா? மிக்சி மாதிரி ...........

முன்னேற்றம் தரும் திட்டம் என்று ஏதாவது கழகங்களிடம் இருக்கிறதா?
நாம் ஏன் இலவசங்களை எதிர்த்து போராடகூடாது. ஈ என இறத்தல் இழிந்தன்று .............அவ்வை கிழவி அப்பவே சொன்னது .
எங்க வீட்டு கிழவி மூணுமே யாரு தராங்களோ அவுங்களுக்கு தான் ஒட்டு போடணும்ன்னு சொல்லுது ..................
ஏற்கனவே தமிழனின் வீரத்தையும் ரோஷத்தையும் தனித்தன்மையையும் மழுங்கடித்து விட்டோம் ...........
மிச்சம் இருப்பது மானம் மட்டும் தான் அதையும் இந்த அரசியல்வாதிகள் மழுங்கடித்து விடுவார்கள் ................

இது மிகவும் ஆபத்தான அரசியல் என்று யாரும் உணர்ந்ததாக தெரியவில்லை. இதை மக்களுக்கு புரியவைக்க யாரும் முன்வரவும் இல்லை. வலையுலக நண்பர்கள் குறைந்தபட்சம் இந்த பிரச்சாரத்தை முன்னெடுக்க ஆசை படுகிறேன் . இந்த இலவசங்களை பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று அறிய ஆவலாய் இருக்கிறேன் .................. 

   

 

Monday, March 21, 2011

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் ........

v


இந்த மூன்று மாதத்தில் ஜனங்கள் பொழுது போக்க எத்தனை விதமான பொழுதுபோக்குகள் இருக்கிறது பாருங்கள். உலக கோப்பை கிரிக்கட்டு அடுத்து ஐ.பீ.எல் கிரிக்கெட்டு அப்புறம் தேர்தல் கூத்துக்கள் என்று ஜனங்களுக்கு ஒரே கிளுகிளுப்புதான் .

தேர்தல் தேதி அறிவிக்க பட்டவுடன் நடந்த கூத்துக்கள் எல்லாருக்கும் தெரியும்.என் சிறுமூளைக்கு மட்டும் சின்ன டவுட்டு இருக்கு பெருமூளை  எப்போதும் வேலை செய்வதில்லை.யாராவது விவரமானவங்க சொன்னா புரிஞ்சிபேன் .

இந்த தேர்தலில் தி.மு.க. ஒரு அணியாகவும் ஆ.தி.மு.க ஒரு அணியாகவும் நிற்கிறது. ஆரம்பத்தில்  தி.மு.க. மேல் இருந்த மக்கள் கோபம் ஆ.தி.மு.க அணியை சுலபமாக வெற்றி பெற வைக்கும் என்று தான் நினைத்திருந்தேன் . ஆனால் கடந்த நாட்களில் அம்மா ஆடிய கூத்து பார்த்து என் கணக்கு தவறு என்று புரிந்துகொண்டேன் .

போதாத குறைக்கு கலைஞ்சரின் தேர்தல் அறிக்கை வேறு .நாம் என்னதான் கரடியாக கத்தினாலும் மிக்சி கிரைண்டர்க்கு சோரம் போகும் மக்கள் தான் எண்ணிக்கையில் பெரும்பாலும் இருக்கிறார்கள்.

இந்த தேர்தலில் நாம் காங்கிரசை தோற்கடிக்க வேண்டும் .........ம்................நியாயமான கோபம் .
சரி நாம் தோற்கடிக்க முயற்சிப்போம் தமிழ் இனத்தை அளிக்கும் வேலையே நயவஞ்சகமாக செய்யும் கட்சி தமிழகத்தில் இருக்க கூடாது நியாயமான கோபம்தான் .

அதை தோற்கடிக்க வேண்டும் என்றால் எதிரணியை ஜெயிக்கவைக்க வேண்டும் எதிர் அணியில் யார் இருக்கிறார்கள் ?
போர் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள் என்று சொன்ன தங்கதாரகை பிரபாகரனை கைது செய்ய வேண்டும் என்று குரல்குடுத்த வீராங்கனை .சரி அவரை பற்றிதான் தெரியுமே கேப்டன் பிரபாகரன் இருக்கிறார் ஆனால் இவர் கடைசி வரை காங்கிரஸ் கூட்டணிக்கு காத்திருந்து வேறு வக்கு இல்லாமல் அம்மா காலில் போயி விழுந்து விட்டார்.

வை.கோ என்று ஒரு மானஸ்தன் இருந்தார்  ( இந்த ஊரு இன்னுமா இவரை நம்புது )ஊரை விடுங்க கட்சிக்காரன் நிலைமை என்ன?
தமிழர்களுக்காக தம்மு கட்டி குரல் குடுப்பவர்கள் இவரும் திருமாவும் திருமா இப்போது காங்கிரசுடன் கும்மியடிக்கிறார் .
வை.கோ போட்டிக்கு நான் வரலை என்று சொல்லி விட்டார் .
நமக்கு ஒரே வாய்ப்பு தங்க தாரகைக்கு ஒட்டு போடுவதுதான் .

எனக்கு என்ன சந்தேகம்னா தேர்தலுக்கு பிறகு அம்மா ஆட்சி அமைந்துவிட்டால். காங்கிரஸ் மஞ்சள் துண்டை உதறிவிடும் அம்மாவும் காங்கிரசும் சேர்ந்து விடுவார்கள் . இதில் சந்தேகம் இல்லை இது நடக்க போகும் உண்மை .
காங்கிரஸ் அறுபத்தி மூன்று இடத்திலும் தோற்றாலும் இது நடக்கும் மத்தியில் தி.மு.க.கழட்டிவிடபட்டு அம்மா அதிகாரத்தை சுவைப்பார் ஐந்து ஆண்டுகள் பிரெச்சனை இல்லாமல் இங்கு ஆட்சி செய்ய காங்கிரஸ்  தயவு வேண்டும்.

காங்கிரஸ் காரனுக்கு மானம் ரோஷம் சூடு சொரணை எதுவும் இருக்க போவதில்லை அதனால் அவர்கள் எதற்கும் கவலை பட போவது இல்லை .இப்போது காங்கிரசுக்கு எதிராக நாம் போடும் வாக்குகளின் எதிர்காலம் என்ன?
அது இலையாக மாறி மத்தியில் செல்வாக்காக அடுத்த ஐந்து ஆண்டுகள் இருக்கும் என்பதுதான் என் நம்பிக்கை .



காங்கிரசுக்கு எதிராக நான் போடும் வாக்குகளின் எதிர்காலம் என்ன?
49 ஒ போடலாமா ?
விவரமானவங்க சொல்லுங்களேன் புரிஞ்சிகுறேன் ..............


Thursday, March 17, 2011

எங்களுக்கு உணர்ச்சி இல்லை என்று யார் சொன்னது ?

v
கீழே உள்ள  படங்களை பாருங்கள்..........



நெடுஞ்சாலை ஒன்றில் வேகமாக சென்ற காரில் அடிப்பட்டு இருக்கிறாள் அவள் ........


அவன் அவளுக்கு உணவு கொண்டு வந்து தருகிறான் ....





மீண்டும் உணவு எடுத்து வருகிறான் ..............




அவள் இறந்துவிட்டதை நம்ப முடியாமல் அவளை அசைத்து பார்க்கிறான் ..........



தன் காதலி  இறந்து விட்டதை தாங்க முடியாமல் நெஞ்சி வெடித்து அழுகிறான் ..............





மீண்டும் வரமுடியாத தூரத்திற்கு அவள் சென்றுவிட்டால் என்று புரிந்தவுடன்  சோகமே உருவாக அவளை பார்த்து கொண்டிருக்கிறான் ...................

*********************************************************
இப்போது சொல்லுங்கள் பறவைகளுக்கு உணர்ச்சி இல்லையா ?

இதை விட உயர்ந்ததா ஷாஜஹானின் காதல் ?

இதை எடுத்த புகைப்படக்காரர் நிச்சியமாக ஒரு துளி கண்ணீர் ஆவது விட்டிருப்பார்........

நீங்கள் ?................... 
**********************************************************
டிஸ்கி 1 :-  நான் பிரபல பதிவர் ஆவது பிடிக்காமல் அதை தடுக்க பாக்கிஸ்தான் தீவிரவாதிகள் சதி செய்கிறார்கள் என்று நினைக்கிறேன் .
தமிழ்மணத்தில் எனக்கு யாரும் ஒட்டு போட முடியவில்லை no such post என்று வருகிறது தமிழ்மண நிர்வாகத்திடம் கேட்டால் இந்த ப்ராப்ளம் எனக்கு மட்டும் தான் இருக்கிறது அதனால் எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்று சொல்லிவிட்டார்கள் ...
டிஸ்கி 2   :- அப்பாடா இவனுக்கு ஒட்டு போடுற தொல்லை  இல்லைன்னு யாரும் தப்பித்து போக முயற்சி செய்யவேண்டாம் இன்ட்லி இருக்கிறது அதில் உங்கள் பொன்னான வாக்கை போடுங்கள் .இதற்க்கு தீர்வு தெரிந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும் ............. 


 

Wednesday, March 9, 2011

பன்னிகுட்டி - அறிவியல் (பாகம் -2 )

v



பன்னிக்குட்டி ராம்சாமி said...
///// நாகராஜசோழன் MA said...
மேலும் ஒரு தகவல்: இப்போ இருக்கிற உபகரணங்களைப் பயன்படுத்தி ஒளியின் திசைவேகத்திற்கு இணையாக எந்த பொருளையும் செலுத்த முடியாது. (இது சரிதானே?)/////

இப்போன்னு இல்ல, எப்பவுமே முடியாதுன்னுதான் நினைக்கிறேன். ஏன்னா ஒரு பொருள் ஒளியின் திசைவேகத்தை அடையனும்னா அதன் நிறை (mass) ஜீரோ ஆகிடும் அதாவது அது பொருளாக இருக்கமுடியாது, அலைவடிவமாக (wave) மாறிவிடும், ஒளித்துகளான போட்டோனுக்கு (photon) நிறை கிடையாது....

********************************************************************************************************************************************************************************

நிச்சியமாக எப்போதும் முடியாது .ஏனென்றால் ஒளியின் வேகம் வினாடிக்கு 1,86000 மைல் அதாவது வினாடிக்கு 3,00000 கி.மீ. இந்த வேகத்தில் ஒரு துகள் பயணம் செய்தால் சில அபத்தங்கள் நடக்கும்.

ஒரு துகள் ஒளியின் வேகத்தில் 90 % வேகத்தை அடையும் பொது அதன் எடை 10 % கூடுகிறது அதே துகள் 99 % வேகத்தை அடையும் போது அதன் எடை இரு மடங்காக ஆகிறது பின்னர் அது 99 .9 % வேகத்தை அடையும் போது அதன் எடை  infinity அதாவது ஈறிலி(சரி என்று நினைக்கிறேன்)யாக இருக்கும் அந்த துகளை உந்தி தள்ளுவதற்கு தேவையான ஆற்றல் infinity  ஆக இருக்கும் அதாவது ஈறிலி இது சாத்தியம் இல்லாதது .அதாவது வரைமுறை இல்லாத எடையை உந்தி தள்ள வரைமுறை அற்ற ஆற்றல் வேண்டும் . இந்த தடைதான் எப்போதும் எந்த துகளும் ஒளியின் வேகத்தை எட்ட முடியாமல் நிரந்தரமாக முடக்கி வைக்கபடுகிறது.



அலை துகள் ரெட்டைதன்மை :- இது ஒளியை பற்றி நாம் புரிந்துகொள்ள கணக்கீடு செய்ய ஏற்படுத்த பட்டது . உள்ளார்த எடை இல்லாத எந்த பொருளும் ஒளியின் வேகத்தில் பயணம் செய்யலாம் கதிர் வீச்சுகள் போல் . ஒளியின் இடத்தையும் அதன் வேகத்தையும் எப்போதுமே துல்லியமாக அளவிட முடியாது அதன் இடத்தை எவ்வளவு துல்லியமாக அளக்கிறீர்களோ அந்த அளவுக்கு அதன் வேகத்தை தவறாக அளவீடு செய்வீர்கள் . அதன் வேகத்தை துல்லியமாக அளவீடு செய்யும் போது அதன் இடத்தை தவறாக அளப்பீர்கள் . இந்த முரண்பாடு அதன் இயல்பான தன்மையில் இருக்கிறது . அதனால் தான் அதை அலையாகவும் துகளாகவும் மாற்றி அளவிடுகிறோம் ஒளி என்பது form of energy (இதுக்கு தமிழில் என்னப்பா ) அது ஆற்றலை சுமந்து செல்கிறது அதற்க்கும் ஒரு வரைமுறை இருக்கிறது அது தன்னிச்சையாக ஆற்றல் முழுவதையும் எடுத்து செல்ல முடியாது சிறு சிறு பொட்டலங்களாக தான் எடுத்து செல்ல முடியும் குவாண்டம் என்று சொல்லலாம் .

அலைவடிவில் கற்பனை செய்தால் சூரியன் எரிய ஆரம்பித்து சிலமணி நேரங்களில் அதன் ஆற்றல் முழுவதும் தீர்ந்து போய் இருக்கும் .

ஆனால் இந்த வரைமுறை அதாவது குவாண்டம் தியரிபடி ஆற்றல் வெளியிடுவதால் இன்னும் பல கோடி ஆண்டுகளுக்கு சூரியன் ஆற்றலை வெளிபடுத்தி கொண்டிருக்கும் .............



ரொம்ப கடுப்பேத்துரேனோ சரி விடுங்க இப்போ கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணுங்க .............

இந்த படத்தை பாருங்க ஒரு கஷ்டமான கேள்வி கேட்க போறேன்
சரியான பதில் சொல்றவங்க அத்தனை பேருக்கும் சிட்டு குருவி லேகியமும் மாரியம்மா கோயில்ல மந்திரிச்சு குடுத்த தாயத்து இலவசமா தருகிறேன் .
அதை கட்டிக்கிட்டு அவங்க என் கூட சிங்கபூர் டூர் வரலாம் ............................





மேலே உள்ள படத்தில் யாரெல்லாம் ............................

A ௦) தூங்கிகொண்டிருக்கிறார்கள் ?

B  ) முழித்து கொண்டிருக்கிறார்கள் ?

C ) சந்தோஷமாக இருக்கிறார்கள் ?

D )  ஜுரத்தில் (காய்ச்சல் ) இருக்கிறார்கள் ?

E ) குடித்து இருக்கிறார்கள் ?

சரியான விடையை அனுப்புப்ப வேண்டிய முகவரி தபால் பெட்டி என் :- 111
நல்லா குப்புற படுத்து யோசிங்க விடை கிடைத்தாலும் கிடைக்கும் ...........................

Thursday, March 3, 2011

கவுண்டர் கலை உலக பொக்கிஷம்

v


ஐன்ஸ்டீன் தியரியை  புரிந்து கொள்வது கடினம் அதை விட கடினம் அதை எளிமையாக விளக்கி சொல்லமுயற்சிப்பது
சென்ற பதிவு பன்னிகுட்டி -அறிவியல் அந்த மாதிரி ஒரு சிறு முயற்சிதான். இப்போது அலை துகள் கொட்பாட்டை எளிமையான உதாரணத்துடன் விளக்க முயற்சித்து கொண்டிருக்கிறேன் எப்படி பார்த்தாலும் பதிவு மிக பெருசாக இருக்ககூடாது இதுவரை சேர்த்து வைத்த உடன்பிறப்புகலான பாலோவர்ஸ் தெறித்து ஓடிவிட கூடாது என்பதில் கவனாமாக இருக்கிறேன் சென்ற பதிவின் பின்னூட்டத்தில் நண்பர் ஜெயதேவ்தாஸ் நல்ல கருத்துக்களை சொல்லிருந்தார் அவருக்கும் நம் நன்றிகள் ...........


ஆனால் இன்று கொஞ்சம் ரிலாக்ஸ் மூடுக்காக கவுண்டமணியை பற்றி நான் வலையில் சேகரித்த தகவல்கள் அப்படியே  தருகிறேன்
பன்னிகுட்டி அறிவியல் அடுத்த பதிவு ஓக்கேவா ..............................
கவுண்டமணி பேன்சுக்காக .............




கவுண்டமணி தமிழ் சினிமாவின் கலகல கலைஞன். அவரைப் புறக்கணித்து தமிழ்


சினிமா சிரிப்பு சரித்திரத்தை எழுத முடியாது. கவுண்டமணியின் சில மணியோசைகள் மட்டும் இங்கே...

'சுப்பிரமணி'யாக கவுண்டமணி பிறந்தது உடுமலைப்பேட்டைக்கு அருகில் உள்ள வல்லக்கொண்டபுரம்!

கவுண்டமணிக்குப் பெரிய படிப்பெல்லாம் இல்லை. ஆனால், பேச்சில் ரஜனீஷின் மேற்கோள்கள் தெறிக்கும். 'பார்த்தால் காமெடியன், படிப்பில் அறிவாளி' என்பார் இயக்குநர் மணிவண்ணன்!

பாரதிராஜாதான் 'கவுண்டமணி' எனப் பெயர் மாற்றினார். '16 வயதினிலே'தான் அறிமுகப் படம்!

அம்மாவை 'ஆத்தா' என்றுதான் ஆசையாக அழைப்பார். வீட்டைத் தாண்டினால் ஆத்தா காலடியில் கும்பிட்டுவிட்டுத்தான் நகர்வார். மனைவி பெயர் சாந்தி. இரண்டு மகள்கள். செல்வி, சுமித்ரா. முதல் பெண்ணின் திருமணத்தின்போதுதான் அவருக்கு இரண்டு குழந்தைகள் என்கிற விவரமே தெரிய வந்தது. அவ்வளவு தூரம் மீடியா வெளிச்சம் படாமல் இருப்பார்!

கவுண்டமணியை நண்பர்கள் செல்லமாக அழைப்பது 'மிஸ்டர் பெல்' என்று. கவுண்டமணியே நண்பர்களைப் பட்டப் பெயர் வைத்துத்தான் கூப்பிடுவார். அவை யாரையும் புண்படுத்தாது. நகைச்சுவையாக மட்டுமே இருக்கும். ஆரம்ப கால நண்பர் மதுரை செல்வம் முதல் அனைவரிடமும் இன்று வரை நட்பினைத் தொடர்ந்து வருகிறார்!

மிகப் பிரபலமான கவுண்டமணி - செந்தில் கூட்டணி இணைந்தே 450 படங்களுக்கு மேல் நடித்து இருக்கிறார்கள். இது ஓர் உலக சாதனை!

இவர் மட்டுமே 750 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். இதில் ஹீரோவாக மட்டும் நடித்த படங்கள் 12.

கவுண்டமணிக்குப் பிடித்த நிறம் கறுப்பு. எந்நேரமும் அந்த நிறம் சூழ இருந்தால்கூட 'சரி' என்பார். 'இங்கிலீஷ் கலருடா ப்ளாக்!' என்பவர், எங்கே போவதென்றாலும் ஜீன்ஸ்-கறுப்பு நிற பனியன் அணிந்துதான் செல்வார்!

உணவு வகைகளில் ரொம்பக் கண்டிப்பு. 'பசி எப்போதும் அடங்காத மாதிரியே சாப்பிடுங்கப்பா' என நண்பர்களுக்கு அறிவுறுத்துவார். பக்கா சைவம்!

திருப்பதி ஏழுமலையான்தான் கவுண்டமணி விரும்பி வணங்கும் தெய்வம். நினைத்தால் காரில் ஏறி சாமி தரிசனம் செய்து திரும்புவார். வாராவாரம் நடந்த தரிசனத்தை இப்போதுதான் குறைத்திருக்கிறார் கவுண்டர்!

சினிமா உலகில் அவருக்குப் பெரிய நட்பு வட்டம் கிடையாது. ஆனாலும் சத்யராஜ், அர்ஜுன், கார்த்திக் ஆகிய மூவரிடமும் நெருக்கமாகப் பழகுவார்!

கவுண்டமணிக்குப் பிடித்த நகைச்சுவை நடிகர் சுருளிராஜன்தான். அவரின் நகைச்சுவைபற்றி அவ்வளவு பெருமிதமாகப் பேசுவதைக் கேட்டுக்கொண்டே வயிறு வலிக்கச் சிரித்து வரலாம்!

புகைப் பழக்கம் அறவே கிடையாது. வெளியே விழாக்கள், பார்ட்டிகள், பிறந்த நாள் நிகழ்ச்சிகள் என எதிலும் கலந்துகொள்கிற வழக்கம் கிடையாது. தனிமை விரும்பி!

ஓஷோவின் புத்தகங்களுக்கு ரசிகர். அதே மாதிரி ஹாலிவுட் படங்களைத் தவறாமல் பார்த்து, நல்ல படங்களை நண்பர்களுக்குச் சிபாரிசும் செய்வார்!

கவுண்டரின் தி.நகர் ஆபீஸுக்குப் போனால் சின்ன வயதுக்காரராக இருந்தாலும் எழுந்து நின்று கைகூப்பி வணக்கம் சொல்வார். நாம் அமர்ந்த பிறகுதான் அவர் உட்கார்ந்து பேச்சை ஆரம்பிப்பார்!

கவுண்டருக்கு எந்தப் பட்டங்களும் போட்டுக்கொள்ளப் பிடிக்காது. 'என்னடா, சார்லி சாப்ளின் அளவுக்கா சாதனை பண்ணிட்டோம். அவருக்கே பட்டம் கிடையாதுடா!' என்பார்.

ஒவ்வொரு சனிக்கிழமையும் நிச்சயம் பெருமாள் கோயில் தரிசனமும் விரதமும் உண்டு!

ஷ¨ட்டிங் இல்லை என்றால், எப்பவும் சாயங்காலம் உட்லண்ட்ஸ் டிரைவ் இன் ஹோட்டலில் முன்பு கவுண்டரைப் பார்க்கலாம். இப்போது நண்பர்களைச் சந்திப்பது ஆபீஸ் மொட்டை மாடியில் மாலை நடைப் பயிற்சியின்போதுதான்!

கார்களின் காதலன் கவுண்டர். 10 கார்களை வைத்திருக்கிறார். நெரிசல் நிரம்பிய இடங்களுக்கு சின்ன கார். அகல சாலைகள் உள்ள இடங்களுக்குப் பெரிய கார்களை எடுத்துச் செல்வார். 'நம் சௌகர்யம் பார்த்தா பத்தாது... ஜனங்க நடமாட சௌகர்யம் கொடுக்கணும்' என்பார்!

எண்ணிக்கையில் அடங்காத வாட்ச், கூலிங்கிளாஸ் கலெக்ஷன் வைத்திருக்கிறார். நடிக்க ஆரம்பித்த காலத்தில் இருந்தே வந்த பழக்கம் இது!

டுபாக்கூர் சாமியார்களைப் பயங்கரமாகக் கிண்டல் செய்வார். 'மனிதனாகப் பிறந்தவர்களைத் தெய்வமாகச் சித்திரிப்பது ஏமாற்றுவேலை' என்பார். நமக்கும் கடவுளுக்கும் சாமியார்கள் மீடியேட்டரா எனச் சாட்டை வீசுவார். ஆனாலும், தீவிர கடவுள் நம்பிக்கை உடையவர்!

கவுண்டருக்கு, அவர் நடித்ததில் பிடித்த படங்கள் 'ஒண்ணா இருக்கக் கத்துக்கணும்' 'வரவு எட்டணா செலவு பத்தணா', 'நடிகன்'. 'அட... என்னடா பெருசா நடிச்சுப்புட்டோம், மார்லன் பிராண்டோவா நானு' என சுய எள்ளலும் செய்துகொள்வார்!

'மறக்க வேண்டியது நன்றி மறந்தவர்களை, மறக்கக் கூடாதது உதவி செய்தவர்களை' என அடிக்கடி குறிப்பிடுவார். ஒருவரை எதிரி என நினைத்துவிட்டால் அவர்களை அப்படியே புறக்கணித்துவிடுவார். ஆனால், நண்பர்கள் கோபித்தாலும், அவரே சமாதானத்துக்குப் போவார்!

சமீபத்தில் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்ந்து, சிகிச்சைக்குப் பிறகு குணமானார் கவுண்டர். அப்போது மருத்துவமனைக்கு உலகம் முழுவதிலும் இருந்து வந்த போன் கால்கள், இ-மெயில்கள் கணக்கில் அடங்காதவை. அதைப்பற்றிப் பேசினால் சிரிப்பு அரசனின் கண்களில் நீர் சுரக்கும்!

ஒரே ஒரு தடவைதான் விகடனில் மிக நீண்ட பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். மற்றபடி பேட்டி, தொலைக்காட்சி நேர்காணல் என எதிலும் தலை காட்டியது இல்லை!




 நன்றி மகேந்திரன்.பெ




Tuesday, March 1, 2011

பன்னிகுட்டி -அறிவியல்

v


கடுகு சைஸ் பொருளை வச்சு இந்த உலகத்தை அழிக்க முடியுமா?
இப்படி ஒரு பதிவு ரோஜா பூந்தோட்டம் பாரத் பாரதி தளத்தில் போட்டிருந்தாங்க ரொம்ப நல்லா இருந்துச்சி .

எனக்கு ஆச்சரியம் என்னனா அந்த பதிவுக்கு நம்ம பன்னிகுட்டி அண்ணனின் பின்னூட்டம் பார்க்கணுமே சும்மா பின்னி பெடல் எடுத்திருந்தாரு உண்மையில் நான் ஆச்சரிய பட்டேன் (அதாவது கழுத மேய்க்கிற பையனுக்கு இம்ம்புட்டு அறிவான்னு ?) சும்மா தமாசுக்கு தல கோவிச்சுக்காதீங்க .............

அதே மேட்டர இன்னும் கொஞ்ச விரிவா பார்க்கலாம்ன்னு தான் இந்த பதிவு.
அந்த பதிவின் பின்னூட்டத்தில்  பன்னிகுட்டி என்ற நகைச்சுவை மனிதருக்கு பின்னால் இப்படி ஒரு விஷய ஞானம் உள்ள ஒரு மனிதர் இருக்கிறார் என்று  தெரிஞ்சுகிட்டேன். அதனால சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால் அங்கு எங்கள் அண்ணன் தானை தலைவன், தன்மான தமிழன், ஏழைகளின் ஏந்தல்,தாய்குலத்தின் கூந்தல் , இப்படி ஏகப்பட்ட பட்டங்களுக்கு சொந்தக்காரரான பன்னிகுட்டி அவர்களின் ஒவ்வொரு கமன்ட்ஐயும் எடுத்து அதற்க்கு ஒரு சிறு விளக்கம் குடுத்து இங்கு போட போகிறேன்.........  
யாரும் என் மேல பொதுநல வழக்கு போட்டுறாதீங்க ...........................
இப்போது அவரின் அறிவுபூர்வமான பின்னூட்டத்தை பாப்போம் ..............

பன்னிக்குட்டி ராம்சாமி said...
ஐன்ஸ்டைனுடைய சார்பியல் தத்துவங்கள் நிருவப்பட முடியாததே அவருக்கு அதற்காக நோபல் பரிசு கொடுக்கப்படாததற்குக் காரணம், நோபல் பரிசு வழங்குவதற்கு, முழு ஆதாரத்துடன் கூடிய கண்டுபிடிப்பு அவசியம்../////////

உண்மை தான் ஐன்ஸ்டீன் கொள்கைகும் நியுட்டன் கொள்கைக்கும் அடிப்படையில் ஒரு முரண்பாடு இருந்தது .
கோள்கள் மையத்தை சுற்றி வருவது புவிஈர்ப்பு விசைதான் காரணம் என்பது நியுட்டன் வாதம்.
 அப்படி பார்க்க போனால் தற்செயலாக ஒரு கோள் இன்னொரு கோள் மீது  மோதினால் எல்லா கோள்களும் ஒன்றோடு ஒன்று மோதிகொள்ளும். காரணம் பொருட்களின் நிறையை பொருத்து அதன் ஈர்ப்பு விசை அமையும் .நிறை இருமடங்கானால் ஈர்ப்பும் இருமடங்காகும் .
இதற்க்கு ஐன்ஸ்டீன் தீர்வு :-  கோள்களின்  சுற்றுப்பாதை ஈர்ப்பு விசையால் அமைவதில்லை மாறாக இந்த பிரபஞ்சத்தின் ஒட்டுமொத்த துகள்களின் அபரிதமான ஏடையின் காரணமாக விண்வெளியே வளைத்து சுருட்ட பட்டிருக்கிறது இங்கு எல்லாமே வளைவான பாதையில்தான் செல்ல முடியும் நேர்கோடு என்பது கிடையாது .
இப்படி கற்பனை செய்து பாருங்கள் நீங்கள் இப்போது இருக்கும் இடத்தில இருந்து ஒரே நேர்க்கோட்டில் பயணத்தை  தொடங்குகிறீர்கள் நடுவில் எந்த தடையும் உங்களை தடுக்க முடியாது என்று வைத்துகொள்வோம் .அப்படி என்றால் நீங்கள் புறப்பட்ட இடத்திற்கே தான் வந்து சேர்வீர்கள் உங்களை பொறுத்தவரை நீங்கள் பயணித்தது நேர் கொடு ஆனால் வெளியே இருந்து பார்த்தால் நீங்கள் பயணித்தது சுற்று பாதை இது தான் பிரச்சனை. ரோடு மோசம்பா அதான் இப்படி. கோள்கள் நேர்கொட்டில்தான் பயணிக்கிறது ஆனால் வெளிமண்டலம் வளைத்து சுருட்ட பட்டிருப்பதால் நம் கணக்கீடுகள் அனைத்தும் அவை வளைந்து பயணிப்பதாக  காட்டும்.
நியுட்டன் விதிப்படி மற்ற கோள்களின் சுற்றுப்பாதையை தெளிவாக கணக்கிட முடிந்தாலும் .புதன் கோளின் சுற்றுப்பாதையை  துல்லியமான கணக்கீடு செய்யமுடியவில்லை மற்ற கோள்களின் சுற்றுபாதைக்கும் புதனின் சுற்றுப்பாதைக்கும் சுழற்சி வேறுபாடு வித்யாசம் இருந்தது. இரண்டாம் உலகப்போர் நடந்துகொண்டிருந்ததால் உடனடியாக ஐன்ஸ்டீனின் இந்த கொள்கையை உறுதிபடுத்த முடியவில்லை அதன்பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து ஒரு சூரியகிரகணத்தின் போது புதன் கிரகத்தின் சுற்றுப்பாதையை துல்லியமாக அளந்து ஐன்ஸ்டீன் கொள்கை உறுதிபடுத்தினார்கள் .


அடுத்த பதிவிற்கான கமன்ட் :-பன்னிக்குட்டி ராம்சாமி said...
///// நாகராஜசோழன் MA said...
மேலும் ஒரு தகவல்: இப்போ இருக்கிற உபகரணங்களைப் பயன்படுத்தி ஒளியின் திசைவேகத்திற்கு இணையாக எந்த பொருளையும் செலுத்த முடியாது. (இது சரிதானே?)/////

இப்போன்னு இல்ல, எப்பவுமே முடியாதுன்னுதான் நினைக்கிறேன். ஏன்னா ஒரு பொருள் ஒளியின் திசைவேகத்தை அடையனும்னா அதன் நிறை (mass) ஜீரோ ஆகிடும் அதாவது அது பொருளாக இருக்கமுடியாது, அலைவடிவமாக (wave) மாறிவிடும், ஒளித்துகளான போட்டோனுக்கு (photon) நிறை கிடையாது....

இதை இன்னும் கொஞ்சம் விரிவாக அடுத்த பதிவில் பார்க்கலாம் .....................
பன்னிகுட்டி ராமசாமிக்கு ஸ்பெசலாக ஒரு நன்றி................. 
    

Popular Posts