Monday, May 30, 2011

பெரிய இடத்து கிசு கிசு

v

ஒரு கிசு கிசு
*****************
கேடி சகோ என்று பெயர் வாங்கியவர்களில் மூத்தவர். நிதிக்கு பஞ்சம் இல்லாதவர் பெயரிலேயே அதை வைத்திருப்பவர்
ஆனால் அவரை பற்றி அவர் நிறுவனத்தில் வேலை செய்பவர்கள் பிண கஞ்சன் என்று தான் சொல்வார்கள் .
வெஸ்டர்ன் டாயலட்டில் அம்பது பைசா விழுந்தால்  கையை விட்டு எடுக்கிற ஆளு .

ஊழியர்களுக்கு பிசினாரித்தனமாக சம்பளம் குடுப்பது அதிலும் அந்த பிடித்தம் இந்த பிடித்தம் என்று பாதி சம்பளத்தை திருப்பி வாங்கி கொள்வது என்று இவர் கஞ்சத்தனம் எல்லை மீறி இருக்க இவருக்கு வாய்த்த துணைவியோ இவரை விட ஒரு படி மேலே சென்று விட்டார். இருவரும்  சேர்ந்து பிசினாரித்தனதுக்கு ஒரு பயிற்சி பள்ளி ஆரம்பித்தால் நாங்களும் சேர்ந்து உங்கள் அளவுக்கு இல்லை என்றாலும் ஏதோ ஓரளவுக்கு பிழைத்து கொள்வோம் ........

கிழக்கே எந்த ரெயில் போனாலும் பின்னால் போகும் நடிகை இப்போது சின்னத்திரையில் உச்சத்தில் இருக்கிறார் .
ஒரு நாள் இவருக்கு கஞ்சத்தின் துணைவியார் போன் செய்து நான் வீட்டில் ஒரு எக்ஸ்இபிசன் வைத்திருக்கிறேன் நீங்கள் அவசியம் வரவேண்டும் என்று அழைப்பு விடுத்திருக்கிறார் . பெரிய இடத்து அழைப்பு என்று இவரும் எல்லா வேலைகளையும் நிறுத்தி வைத்து விட்டு. இதனால் ஏற்பட போகும்  சில நஷ்டங்களையும் சகித்து கொண்டு வீட்டிற்கு சென்று இருக்கிறார் அங்கே நான்கு டேபளில் வத்தல் , வடாகம்,ஊறுகாய் ,மற்றும் அப்பளம்  அடுக்கி வைக்க பட்டிருந்தது . இவரும் குழப்பத்துடன் எக்ஸ்இபிசன் என்று சொன்னீர்களே? என்று கேட்டிருக்கிறார் .
இவை எல்லாம் நானே என் கையால் செய்தது நீங்கள் கட்டாயம் ஒன்று வாங்கிதான் செல்லவேண்டும் என்று கஞ்ச துணைவியார் அடம்பிடிக்க நடிகைக்கு சிரிப்பதா  அழுவதா என்று தெரியவில்லை வேறு வழி இல்லாமல் ஐம்பது ரூபாய்க்கு ஒரு ஊர்காய் பாட்டில் வாங்கி  சென்றுள்ளார்.எப்படி எல்லாம் சம்பாதிக்கிறாங்க பாருங்க.......................

***********************************************************************************************************************


ஒரு ஜோக்
****************
மன்மோகன்சிங் :-           நாங்கள் 2012  இல் நிலவுக்கு 20  ஆட்களை அனுப்ப போகிறோம் .

ஒபாமா :-                    அப்படியா ரொம்ப சந்தோஷம் யாரெல்லாம் அவங்க ?

மன்மோகன்சிங் :-    4  ஓ,சி, ....... 4  பிசி, ........... 4  எம் பி சி ,..........3  எஸ் சி ,...........................3  எஸ் டி,.............2  ஸ்பெசல் கோட்டா .................

ஒபாமா :-   2012 ல மட்டும் இல்ல 3012 இல்  கூட உங்களை திருத்த முடியாது ..............

 

Wednesday, May 18, 2011

இந்த மிருகத்தை என்ன செய்யலாம்----உண்மை சம்பவம்

v

நான் என் நண்பர்கள் இருவருடன் வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு சில நாட்களுக்கு முன்னர் சென்று இருந்தேன் .
அங்கு நடந்த ஒரு சம்பவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் .

நேரில் பார்த்தவர்களுக்கு அந்த பூங்கா பற்றி நன்றாக தெரிந்திருக்கும் . சென்னைகுள் ஒரு காடு உள்ளது என்றால் அது வண்டலூர்தான். நல்ல அடர்த்தியான மரங்கள் உள்ள இடம் என்பதால் நல்ல மற்றும் கள்ள காதலர்களின் டாப் டென் வரிசையில் வண்டலூர் எப்போதும் முதலிடம் வகிக்கும் .

பிற்பகல் இரண்டு மணி நல்ல உச்சி வெயில். மரங்கள் சூழ்ந்த   இடம் என்பதால் வெயில் அவ்வளவாக  தெரியாது நல்லா உண்ட களைப்பு தீர ஒரு மரத்தடியில் என்னுடன் வந்த நண்பர்களில் ஒருவன் குட்டி தூக்கம் போட்டான் .
எனக்கு தூக்கம் வரவில்லை அதனால் முழித்திருந்த இன்னொருவனையும் கூட்டி கொண்டு அப்படியே ஒரு நடை போட்டு வரலாம் என்று கிளம்பினேன் .

லயன் சபாரி செய்யும் இடம் மிகவும் அடர்ந்த காடுபோல் இருக்கும் . நண்பகல் என்பதால் பயங்கர நிசப்தம் அப்போது காட்டுக்குள் யாரோ வேகமாக ஓடிவரும் சத்தம் கேட்டது . சத்தம் வந்த திசை நோக்கி நாங்கள் இருவரும் சென்றோம் அருகில் செல்ல செல்ல முச்சிரைக்கும்  சத்தம் பெரிதாக கேட்டது.

அப்போது புதருக்கு பின்னால் இருந்து ஒரு பதினைந்து வயது மதிக்க தக்க  இளம் பெண் வேகமாக ஓடிவந்தாள் .
வேகமாக வந்து என்மேல் மோதி என்னை  பின்னால் இருக்க பிடித்து கொண்டால் . அவள் உடல் நடுங்குவது அவள் இதய துடிப்பின் வேகம் மற்றும் அவள் ஓடிவந்த வேகம் அவள் மூச்சிரைப்பின் மூலம் நன்றாக புரிந்தது. யாருக்கோ பயந்து இப்படி நடுங்குகிறாள் என்று புரிந்தது .

அவளை மெல்ல ஆசுவாசபடுத்தி அவள் முதுகை தடவி பயபடாதே நான் இருக்கிறேன் என்ன ஆயிற்று என்று கேட்டேன். அவள் எவ்வளவோ பேச முயற்சித்தும் அவள் வாயில் இருந்து வார்த்தை  வரவில்லை  உடல் முழுவதும் ஒவ்வொரு மில்லி மீட்டரும் நடுங்கி கொண்டிருந்தது . என் பைகுள் கையை விட்டு என் செல் போனை எடுத்து யாருக்கோ போன் செய்ய முயற்சித்தாள் . அவள் விரல்கள் அதற்க்கு ஒத்துழைக்க வில்லை மீண்டும் போனை என்கையில் குடுத்துவிட்டு பரிதாபமாக பார்த்தாள்.
.


என் நண்பன் உடனே தன் கையில் இருந்த குளிர்பானத்தை அவளிடம் குடுத்து குடிக்க சொன்னான் .
அப்போது நான் அவளை கவனித்தேன் அவள் காலில் செருப்பு இல்லை. அவள் உடை ஓரளவு வசதியானவள் என்று காட்டியது .உடம்பில் ஆங்காங்கே முற்கள் குத்திய காயம் இருந்தது .
அவள் ஓடிவந்த திசை நோக்கி சில  அடி தூரம் நடந்து பார்த்தேன் ஒன்றும் தென்படவில்லை.
மீண்டும் திரும்பி வந்தபோது அவள் ஓரளவு தெளிவாக இருந்தால் என் நண்பனிடம் பேசி கொண்டிருந்தாள் .

என்னை பார்த்ததும் எழுந்து வந்து அண்ணா என்னை எப்படியாவது வெளியே கொண்டு விட்டு விடுங்கள் என்று கதறினாள். எனக்கு ஒன்றும் புரியவில்லை உன் பிரெச்சனை என்ன சொல் நான் இருக்கும் போது எந்த ஆபத்தும் வராது தைரியமாக இரு என்று சொன்னேன் .

அவள் சொன்னதை கேட்டு நானும் என் நண்பனும் கோவத்தின் உச்சிக்கு சென்று விட்டோம் .
அப்படி என்ன சொன்னால் என்று தெரிய வேண்டுமா ?

அவள் ஒரு ப்ளஸ் 2  மாணவி அவள் காதலனுடன் வண்டலூருக்கு வந்திருக்கிறாள் . அவனும் அவளுடன்  படிக்கும் மாணவன்தான்.    இருவரும் ஆள் நடமாட்டம் இல்லாத லயன் சபாரி இடத்தில அமர்ந்து பேசிக்கொண்டு இருந்திருக்கிறார்கள் . அப்போது அவன் அவளுக்கு முத்தம் குடுக்க முயற்சி செய்திருக்கிறான் . இதை அங்கு வந்த காவலர் ஒருவர் பார்த்துவிட்டார் . அவர் இருவரையும் பிடித்து மிரட்டி இருக்கிறார் . அந்த பையனை ஜெயிலில் போட்டு விடுவேன் என்று மிரட்டி அடித்து விரட்டி விட்டார் .

இந்த பெண்ணை மட்டும் பிடித்து கொண்டு உன்னை போலீசில் ஒப்படைக்க  போகிறேன். விபச்சாரம் செய்தாய் என்று உன்னை உள்ளே போட்டு விடுவேன் என்று மிரட்டி இருக்கிறார் .
ஐயா என்னை விட்டு விடுங்கள் இனிமேல் இந்தமாதிரி தனியாக வரமாட்டேன் என்று கெஞ்சி இருக்கிறாள் .

சரி அப்படி என்றால் என்னோடு வா என்று  அழைத்து போயிருக்கிறான் .அங்கே அவனோடு இன்னொரு கபோதியும் சேர்ந்து கொள்ள இவளுக்கு பயம் வந்துவிட்டது. என்னை எங்கே கூட்டி போகிறீர்கள் என்று கேட்டிருக்கிறாள் .
உன்னை போலீசில் பிடித்து குடுக்க வேண்டாம் என்றால் எங்களோடு ஒரு பத்து நிமிடம் ஜாலியாக இரு இல்லை என்றால் விபச்சார கேசில் உள்ளே இரு எப்படி விருப்பம் என்று எச்சில் ஒழுக அந்த நாய் கேட்டிருக்கு . இவள் மறுக்கவே பலாத்காரம் செய்ய முயன்று இருக்கிறார்கள் .

அவர்களை தள்ளி விட்டு தப்பி வந்து வழி தெரியாமல் ரொம்ப நேரம் சுற்றி எங்களை பார்த்திருக்கிறாள் .
 அவளிடம் அவள் காதலன் நம்பர் வாங்கி பேசினேன் .அவனும் பயந்து போய் பூங்காவிற்கு வெளியே காத்திருந்தான் .
பயபடாதே பத்திரமாக இருக்கிறாள் நான் வெளியே கூட்டி வருகிறேன் என்று சொன்னேன் .

வெளியே வரும் வழியில் இரண்டு காவலர்கள் யாரையோ தேடுவது போல் சுற்றும் முற்றும் பார்த்து கொண்டிருந்தனர்
நான் அந்த பெண்ணிடம் கேட்டேன் உன்னை பலாத்காரம் செய்ய முயன்றவர்கள் உனக்கு அடையாளம் தெரியுமா ?
தெரியும் அதோ இருக்கிறான் என்று ஒருவனை காட்டினாள் அவனுக்கு சத்தியமாக ஐம்பது வயது இருக்கும் .

நான் அவள் கையை பிடித்து கொண்டு என்னோடு வந்து அவனை நேராக அடையாளம் காட்டு என்று இழுத்து சென்றேன். அவள் அண்ணா வேண்டாம் என்னை பத்திரமாக  வெளியே  கொண்டு விடுங்கள் போதும் என்று மீண்டும் அழ ஆரம்பித்தாள் . நான் இவளை கூட்டி கொண்டு வருவதை பார்த்த அந்த காவலர்கள் வேகமாக தங்கள் பைக் ஸ்டார்ட் செய்து அந்த இடத்தை விட்டு ஓடி விட்டார்கள் .

என் நண்பனும் அந்த பெண் சொல்வது தான் சரி அதன் வாழ்க்கை பாதிக்கும் அதனால் விட்டு விடு என்று சொன்னான் .
எனக்கும் அது சரியாக பட்டது .
அவளை வெளியே கூட்டி வந்தேன் அங்கே அவள் காதலன் என்று சொல்ல கூடிய பொடியன் நின்று கொண்டிருந்தான்
எனக்கு அந்த காவலன் மேல் இருந்த கோவத்தை இவன் மேல் இறக்கி வைத்தேன் . இடது கன்னம் மட்டும் லேசாக வீங்கியது புத்திமதி சொல்லி இருவரையும் அனுப்பி வைத்தேன் .

இன்னும் வண்டலூரில் அந்த மிருகம் வேலை செய்கிறது எத்தனை  பயந்த அப்பாவி பெண்களை அது வேட்டையாடி இருக்குதோ இல்லை இன்னும் எத்தனை பேரை வேட்டையாட காத்திருக்குதோ ?

நீங்களே சொல்லுங்கள் அந்த மிருகத்தை என்ன செய்யலாம் என்று .
 

 

Monday, May 16, 2011

வந்துட்டாருயா ராஜபாட் ரங்கதுரை...................

v

இந்த படத்திற்கு வசனம் தேவை இல்லை என்று நினைக்கிறேன் ................

இப்போ அடுத்த டிராமா போட நொய்டா போயிருக்கு இந்த பச்ச கொழந்த .............

எப்பா நடிப்புக்கரசா உன் நடிப்பை அப்படியே எங்க ஊரு காங்கிரஸ் தலைவர் தங்கபாலுக்கு சொல்லி குடு .

சரியா நடிக்க தெரியாம தப்பு தப்பா நடிச்சி மாட்டிகிராப்புல ...........

டமாசு................ டமாசு .............................  

Popular Posts