Monday, April 25, 2011

இந்தியாவின் காலில் குத்த போகும் முள்

v


அமெரிக்காவிற்கு ஒரு கியூபா அதே போல் இந்தியாவிற்கு ஒரு இலங்கை .
முடிந்தவரை அங்கிருந்த தமிழர்களை கொன்று விட்டு நட்புக்கு அடையாளமாக ராஜபக்சையுடன் முஸ்தபா முஸ்தபா ....பாட்டு பாடி தேனிலவு முடித்தாகிவிட்டது இனிமேல் தான் தம்பியின் சுயரூபம் அண்ணனுக்கு தெரிய வரும் ....

நான் ஏற்கனவே ஒரு பதிவில் சொல்லி இருந்தேன். எப்போதெல்லாம் இந்திய அணி கிரிகெட் ஆடுகிறதோ அப்போதெல்லாம் மீனவர்கள் கொல்லபடுகிறார்கள் என்று அது மீண்டும் ஒரு முறை நிரூபணம் ஆகி விட்டது. உலக கோப்பை போட்டியில் இலங்கை நம்மிடம் தோத்ததற்கு நான்கு மீனவர்களை கொன்று வெறியை தீர்த்து கொண்டது . வழக்கம் போல் நிருபமா வருத்தம் தெரிவித்தாகி  விட்டது . பிரெச்சனையை இந்தியா உன்னிப்பாக கவனித்து கொண்டிருக்கிறதாம் .ஹி ஹி .வேற என்ன புடுங்க முடியும் ..இன்னும் நாற்ப்பது பேரை கொன்றாலும் இன்னும் உன்னிப்பாக கவனித்து கொண்டுதான் இருப்பார்கள்.பேசாமல் உன்னிப்பாக கவனிக்கும் இலாக்கா ஒன்று ஆரம்பித்து  அதுக்கு ஒரு அமைச்சரையும் போடலாம் மங்குனி சும்மாதான் இருக்காரு .

சரி விசியத்துக்கு வரேன் ஐ.பி.எல். என்னும் பணம் கொழிக்கும் ஆட்டத்தில். கிரிகெட் ஆடும் அணைத்து நாடுகளும் விளையாட மிக ஆர்வமாக இருக்கிறது . காரணம் வீரர்களுக்கு கிடைக்கும் அபரிதமான பணம் .
அந்த அற்ப சந்தோசத்தை கூட பாகிஸ்தானுக்கு குடுக்க இந்தியா தயாராக இல்லை . அந்த நாட்டில் இருந்து ஒருவரையும் ஏலத்தில் எடுக்கவில்லை. பழி வாங்குறாங்கலாமாம்.

அப்பேற்பட்ட ரோசகார புளியாங்கொட்டை நாடான இந்தியா இலங்கையில் இருந்து மட்டும் பதினொரு வீரர்களை ஏலம் எடுத்தது .
எல்லாம் செஞ்சோற்று கடன் .வேற எந்த நாட்டில் இருந்தும் இவ்ளவு வீரர்களை மொத்தமாக எடுக்கவில்லை .

ஆனால் நேரம் பார்த்து வச்சான் பாரு ஆப்பு. எல்லாரும் ஆடுனது போதும் திரும்பி வாங்கன்னு . நம்ம ஆளுங்க  கெஞ்சி கேக்குறாங்க ஒன்னுத்துக்கும் மசியவில்லை .

 இப்போ ஐ.பி.எல். க்கு போட்டியாக எஸ்.பி.எல். ஆரம்பிக்க போறாங்களாம் இந்த போட்டியை பாகிஸ்தானும் இலங்கையும் சேர்ந்து நடத்துகிறது என்று நினைக்கிறன் . கிழக்கு இலங்கைக்கு அப்ரிதி கேப்டனாக நியமிக்க பட்டுள்ளார்
ஜூலை முதல் ஆகஸ்ட்டு வரை இலங்கையில் நடக்கும் வெளிநாட்டு வீரர்களை அவர்கள் ஏலம் எடுப்பார்களாம் .
போங்கடா போங்க இங்க விலை போகாத மாடுங்க எல்லாம் இனிமேல் அங்க போயி கழுத்துல டோக்கன மாட்டிக்கிட்டு நில்லுங்க நல்ல விலைக்கு போவீங்க மகராசனுங்களா .

அமெரிக்காவின் காலில் குத்திய முள் என்று கியூபாவை சொல்வார்கள் . அதே போல இந்தியாவின் காலில் குத்த போகும் முள்ளாக வளர்ந்து  வருகிறது இலங்கை. இந்த புண்ணியம் எல்லாம் அந்த கணவனை இழந்த அந்த அன்னையாரை தான் சேரும்.
அது சரி எவன் தாலி அறுத்தா நமக்கு என்ன இத்தாலி பிசா சாப்பிட்டா போதும். நல்ல கட்சி,...... நல்ல தலைவி,..... நல்ல நாடு,...நல்ல தேசபக்தி......நல்ல (மானங்கெட்ட)தொண்டர்கள் ..............
நேரு நாமம் வாழ்க ........
இந்திரா நாமம் வாழ்க .......
ராஜீவ் நாமம் வாழ்க ......
சோனியா நாமம் வாழ்க ............
மொத்தத்தில் அவர்கள் குடும்பம் மட்டுமே வாழ்க ..........
மீதி எல்லாம் கடலுக்கு போங்க .......................        

Thursday, April 14, 2011

நீ எல்லாம் ஒரு அரசியல்வாதியா?

v


செக் குடியரசின் அதிபர் அரசு முறை பயணமாக சிலி நாட்டிற்கு போயி இருக்கிறார் .
அங்கு பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின் போது அவர் முன்னாள் வைக்கபட்டிருந்த பேனாவை நைசாக திருடி விட்டார் .
அந்த கொடுமையை நீங்களும் பாருங்க .


இவரெல்லாம் ஒரு அரசியல்வாதி அதிலும் அதிபர் என்று சொல்லவே தகுதி இல்லாதவர் .
அதிலும் இவர் இந்த சம்பவத்திற்கு வருத்தம் வேற தெரிவிச்சிருக்காரு ....
எப்பேர்பட்ட அவமானம் ச்சே முதலில் இவர் இந்தியா வந்து நம் தலைவர்களிடம் அரசியல் பால பாடம் கற்று கொள்ளட்டும் .
ஒரு பேனாவை திருடியதற்கு வருத்தம் தெரிவிக்கும் அளவிற்கு செக்  நாட்டு அரசியல் கெட்டு கிடக்கிறது ....
அவர்களுக்கு இந்திய அரசாங்கம் அரசியல் பயிற்சி அளிக்க வேண்டும் என்பதுதான் நமது ஆசை ...
இவரெல்லாம் ஸ்பெக்ட்ரம் காமன்வெல்த் பற்றி கேள்வி பட்டாலே செத்து போயிடுவாருன்னு நினைக்கிறேன் ........
இந்தியாவில் ஒரு கவுன்சிலர் ஆக கூட தகுதி இல்லாதவர் எல்லாம் அந்த நாட்டில் அதிபர் .......
கலி முத்தி போச்சி  கலி முத்தி போச்சி வேற என்ன சொல்ல ..............



Tuesday, April 12, 2011

நகைச்சுவை கலாட்டா

v

நேற்றைய பதிவை போல இதுவும் காமடி கலவை மட்டும் தான் யார் மனதையும் புண்படுத்தும் எண்ணம் கம்பனிக்கு கிடையாது .

இந்த உலகம் இன்னும் நம்மளை நம்புது ....................




சீக்கிரம் எடுங்க பாஸ் பதிவர்கள் சண்டை போட்டு ரொம்ப நாள் ஆச்சி .......................


டி.வீ.யை  உடச்சது  ஒரு குற்றமா? இதுக்கு போட்டு ஆளாளுக்கு அடிக்கிறாங்க ஒரு பச்சை பிள்ளையை போட்டு ..................




இப்போ வந்த மதுரை  படங்களை பார்த்த பாதிப்பு .........................


அந்த கிழவியின் முகத்தை பாருங்க உண்மையிலேயே ரொம்ப நொந்து போயி வசனம் பேசுறாங்க ........
அரசியலில் இவர் வந்தால் வடிவேலு அளவுக்கு வருவாரா என்பதே கேள்விக்குறிதான் ..................
**********************************************************************
இப்போ கொஞ்சம் எஸ்.எம்.எஸ். ஜோக் 


நான் உங்க லவ்வர பஸ் ஸ்டாண்ட்’ல பார்த்தேன்...


அவ என் பக்கத்துல வந்தா...


ரொம்ப பக்கத்துல வந்தா....


வந்து எங்கிட்ட ஒன்னு சொன்னா...


“கொஞ்சம் ஓரமா போங்க...குப்பை அள்ளனும்னு”


ஆமாம்.......சொல்லவே இல்ல!!!!!!!!!!!
*****************************************************
என்னதான் நீங்க செண்டிமெண்ட் பார்த்தாலும்,
கப்பல்
கெளம்பறதுக்கு முன்னாடி எலுமிச்சம்பழம்  எல்லாம் வைக்க முடியாது... சங்கு
ஊதிவிட்டுதான் கெளம்பனும்...
*****************************************************
இது தத்துவம் (அட நம்புங்கப்பா)

முதல் பெஞ்ச்ல இருப்பவனுக்கு பிரச்சனைய எப்படி தவிர்ப்பது

என்றுதான் தெரியும்... ஆனா கடைசி பெஞ்ச்ல இருப்பவனுக்குதான் எப்படி

பிரச்சனையே எதிர்கொள்வது என்பது தெரியும்...........

 


Monday, April 11, 2011

சும்மா வந்து சிரிச்சிட்டு போங்க

v

இது எல்லாமே sms ஜோக் தான் நான் ரசித்தவை உங்கள் பார்வைக்கு


1 – 3rd Std.: தினமும் படிக்கிறேண்டா...


4th – 6th: கொஞ்சம் கஷ்டம்டா...


7th – 9th: முக்கியமான கொஸ்டின் மட்டும்தான் படிக்கிறேண்டா...


10th - +2: மைக்ரோ செராக்ஸ் எடுதுக்கலாமடா மச்சான்?


UG: இன்னிக்கு என்ன எக்ஸாம்’டா?


PG: என்னடா சொல்ற... இன்னிக்கு எக்ஸாமா? சொல்லவே இல்ல....
****************************************************************************************************

ஆசிரியர் – 1: எதுக்கு சார் அந்த பையன

பெஞ்ச் மேல நிக்கவச்சு இருக்கீங்க?


ஆசிரியர் – 2: கட்டபொம்மன தூக்குல போட்ட இடம் எதுன்னு கேட்டா கழுத்துன்னு

சொல்றான்...

*******************************************************************************************************************
 ஏப்ரல் முதல் தேதி அன்று பன்னிகுட்டி  ஒரு பஸ்ஸில்

ஏறினார். கண்டக்டர் டிக்கெட் வாங்க சொல்ல, பத்து ரூபாய்க்கு டிக்கெட்

வாங்கினார்...


பின் கண்டக்டரைப் பார்த்து சத்தமாக “ ஹே ஏப்ரல் பூல்! என்னிடம் பஸ் பாஸ்

இருக்கே!?” என்றார்..
**********************************************************************************************************************
பெண் – 1: அக்கா இன்னைக்கு என் புருஷன்

ஊருக்கு போறாரு... இன்னைக்கு ராத்திரி மட்டும் என் கூட துணைக்கு

படுங்களேன்...


பெண் – 2: அடிப் போடி...உனக்கும் உன் புருஷனுக்கும் வேற வேல இல்ல! யார்

ஊருக்கு போனாலும் என்னையே கூப்பிடுறீங்க!!
*****************************************************************************************************************************
வாழ்க்கை நமக்கு எவ்வளவோ பாடங்கள் கற்று தருகிறது.. ஒரு

புகழ்வாய்ந்த சீன கவிஞர் சொல்கிறார்...” சிங்க்லியோ சுவா சொன்கலோமா ச்யோன

சுங் உணா செவோல்”


உண்மையிலேயே மனசை தொடும் வரிகள்தானே!...


நான் இதை படித்துவிட்டு அழுதே விட்டேன்!.....


*******************************************************************************************************************************
ஆசிரியர்: போய் சிலபஸ் வாங்கிட்டு வாடா!


கொஞ்ச நேரம் கழித்து மாணவன் வெறும் கையுடன் வருகிறான்...


மாணவன்: சார்..


சிட்டிபஸ்..


ஏர்பஸ்...


டவுன்பஸ்...


எக்ஸ்பிரஸ் பஸ்...


பாயிண்ட்-பாயிண்ட் பஸ்....


டீலக்ஸ்பஸ்....


ஏசிபஸ்....


இப்படி எல்லா பஸ்சும் இருக்கு...


ஆனா நீங்க கேட்ட சிலபஸ் மட்டும் கிடைக்கவே இல்ல!


பஸ் டெபோவிலேயே கேட்டுட்டேன்!
****************************************************************************************************************
டிஸ்கி :- நேரம் கிடைக்கவில்லை அதான் இப்படி இறங்கிட்டேன் கண்டுக்காதீங்க ........

Popular Posts