Tuesday, November 30, 2010

கொள்ளை அடிக்கலாம் வாங்க

v


நம்ம நாட்டுல ஏமாத்துறது தப்பு இல்ல சார் .
அது ஒரு கலை. ஒரு குறிப்பிட்ட வரியை அரசாங்கத்துக்கு குடுத்துட்டா அரசாங்க அனுமதியோட கொள்ளை அடிக்கலாம்.
உங்களில் பல பேருக்கு இந்த மாதிரி மெசேஜ் வந்திருக்கும்.
ரஜினிகாந்த் யாரு ?

a. நடிகர்.

b.விண்வெளிவீரர்.

c.கிரிக்கெட் வீரர்.

சரியான பதில் சொல்லி ஸ்கோடா கார் வெல்லுங்கள் .

அடடா ரொம்ப ஈசியா இருக்கே நாம ரிப்ளை அனுப்பி கார் தூக்கிடலாம்.
அப்புறம் இந்த கார எங்க விடுறதுன்னு யோசனை போய்டும் .
ஆனா ஆப்பு அதுக்கப்புறம் தான் இருக்கு .
அடுத்த கேள்வி வரும் .
ஜே. ஜெயலலிதா தி.மு.கா.வா .தி.மு.கா.வான்னு
என்ன தல லைட்டா சுத்துதா.

இது ஒரு வகை.

எனக்கு ஒரு மெசேஜ் வந்தது 5 க்கு பின்னால பத்து சைபர்.

அது எவ்ளோ பணம்னு என் குருவி மண்டைக்கு எட்டவே இல்ல.

நீங்க ஒன்னும் செய்ய வேண்டாம்.வந்து இந்த பணத்த வாங்கிட்டு போய்டுங்க ரொம்பநேரம் தூக்கி வச்சுகிட்டு நிக்கிறோம் சீக்கிரம் வந்து வாங்கிட்டு போங்க மறக்காம உங்க அக்கௌன்ட் நம்பர் அனுப்புங்க அப்படின்னு.

அவ்ளோதான் சும்மா ஜிவ்வுன்னு ஆய்டுச்சி.

ஆனா ஒரு நாள் முழுவதும் மண்டைய சிலுப்பிகிட்டு காலர தூக்கிக்கிட்டு

கண்ணா இந்த பஸ் என்ன வெல கேளு. இந்த தெரு என்ன வெல கேளு.

இந்த ஏரோபிலேன் வாங்கனும்ம்னா எவ்ளோ செலவுஆகும்னு விசாரிச்சுகிட்டு அலைஞ்சேன்.

அப்புறம் என்ன அசிங்கபட்டான் மண்டையன்.

இப்போ புதுசா ஒரு குரூப்பு ராஜ் டிவில கெளம்பி இருக்கு ராத்திரி பத்து மணிக்கு மேல ரெண்டு பேரு நின்னுகிட்டு

வள வளன்னு பேசிக்கிட்டு இருப்பாங்க.பின்னால நம்ம டாக்குடர் தம்பி போட்டோ இருக்கும்.

கொஞ்சம் கூட கெட்டப்பு மாத்தாமல் (இருந்தா தானே மாத்துறதுக்கு )

இந்த படத்துல இருக்குறது யாரு சீக்கிரம் கண்டுபிடிச்சு சொல்லுங்க உங்களுக்கு நாற்பதுஆயிரம் பரிசு உடனே போன்

பண்ணுங்கனு பேசிக்கிட்டு இருக்கும். நம்பி போன் பண்ணுனா அவ்ளோதான் உங்க கால் வெய்டிங்கில் உள்ளது.

(என் கால் என்கிட்டதான் இருக்குது.) தயவு செய்து ஹோல்ட் செய்யவும். அப்டின்னு வரும் எவ்ளோ நேரம் ஆனாலும் எடுக்க மாட்டாங்க என்னடா இது சோதனைன்னு பார்த்தா நம்ம பாலன்ஸ் முன்நூருபா காலி ஆகி இருக்கும்

அதுக்கு அப்புறம் தான் தெரியும் அந்த நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பு கெடையாது.

ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட நிகழ்ச்சி ஒரு கால் பத்து ருபாய் எவ்ளோ புண்ணியவான் ஏமாந்தான்களோ.

இன்னும் எத்தனை பேரு ஏமாற போறாங்களோ. அதனால என்ன இப்போ அவங்க அரசாங்கத்துக்கு வரி கெட்டுறாங்க

அவங்களுக்கு அந்த உரிமை இருக்கு சார்.

நாமும் வரி கெட்டலாம் வியாபாரத்த ஆரம்பிக்கலாம்.

இப்போ உங்களுக்கான கேள்வி

மங்குனி அமைச்சர் என்பது யார் .

1. அமெரிக்க அதிபர்.

2. கலை கூத்தாடுபவர்.

3. டாகுட்டர் விஜய் ரசிகர்.

4. மொக்கை பதிவர்.

சரியான பதில் சொல்பவர்களுக்கு 12,000,000,000,000 $ யு.எஸ். டாலர் தரப்படும்.

பதில் தெரியாதவர்கள் பணகாட்டு நரியிடம் கேட்டு அனுப்பலாம்.

ஒரு மெசேஜ் 50 ரூபாய்தான்.

அனுப்ப வேண்டிய நம்பர் 9444125010.



Saturday, November 27, 2010

மரண வெட்டு

v


அஞ்சா சிங்கத்தையே அலறவச்ச ஒரு மாவீரன் இருக்கார் .
இது ஐயப்பசாமி சீசன் ஆச்சே .
இப்போபோய் இவன் வீராசாமீய பத்தி பேசுறானேன்னு யாரும் என்ன தப்பா நெனைக்க வேண்டாம் .
நம்ம அமைப்பு அப்படி .
இந்த உலக நாயகனுக்கு ஏன் இன்னும் ஆஸ்கார் குடுகலன்னு எனக்கு புரியல.
இந்த படத்த பார்த்தா நீங்களும் அப்டிதான் நினைப்பீங்க.

o.k ..........o.k............. o.k.................




அப்புறம் தன்னம்பிக்கைக்கும் தலைகனத்துகும் ஒரு நூல் வித்யாசம்னு சொன்னாங்க .
அப்டீனா விஜய T.ராஜேந்தர்க்கு இருப்பது தன்னம்பிக்கையா அல்லது தலைகனமா .?
தலைகனம்னு சொல்றவங்க ப்ளஸ் ஓட்டும் . தன்னம்பிகைனு சொல்றவங்க மைனஸ் ஓட்டும் போடுங்க .

அய்யய்யோ .................தெரியாம வாய்தவறி சொல்லிட்டேன் .........
எனக்கு யாரும் காசு வெட்டி போட்றாதிங்க அப்பு ......

Friday, November 26, 2010

தமிழேண்டா

v


தமிழன் என்றொரு இனம் உண்டு
தனியே அதற்கொரு குணம் உண்டு .

சின்ன வயசுல படிச்சது. சரி அது என்ன குணம்னு நானும் யோசிச்சு பார்த்தேன் .

பஸுல இடம் இருந்தாலும் தொங்கிகிட்டே போவது .
காலை பத்துமணிக்குதான் கடை தொரபாங்கனு தெரிஞ்சாலும் .
எட்டு மணிக்கெலாம் வாசல்ல இருந்துகிட்டு சார் கடை எப்போ சார் தொரபீங்கனு கேக்குறது .
ஹோட்டல்க்கு சாப்பிடபோனா பில்லு அடுத்தவன எப்படி கட்ட வைக்கிறது.
இப்படி நிறைய குணம் இருந்தாலும் .
ஸ்பெஷல் குணம் ஒன்னு இருக்கு சார்.
பள்ளிகூடத்துல சைன்சு வாத்தி சொன்னதெல்லாம் பாத்ரூம் செவுருல வரைஞ்சி பழகுறது.
அதான் படம் வரைஞ்சு பாகங்கள குறிக்கிறது .
மரத்த கண்டா சிற்பிமாதிரி பெயர செதுக்கிடுறாங்க. கஷ்டப்பட்டு மலை மேல ஏறி அங்க ரெண்டு பேரு பெயர் ஒரு ஆர்ட்டின் அப்புறம் ஒரு அம்புகுறி.
அவ்ளோதான் பிறப்பின் பயன் அடைஞ்சிடுறாங்க.


நானும் சின்னவயசுல இப்டிதான் சார் எங்க வீட்டுக்கு பக்கத்துல ஒரு வக்கீல் இருந்தாரு
அவரு புதுசா ஒரு நேம் போர்டு வச்சாரு.

கோ.அரங்கநாதன் ma.ml.

நானும் என் நண்பனும் நைட்டோட நைட்டா புள்ளிய மட்டும் அளிச்சிடோம்
அவரு பாவம் சாகுற வரைக்கும் கோரங்கநாதன் அப்படிங்குற பேரோடதான் வாழ்ந்தார் .

இது நான் சமீபத்துல பார்த்தது ஒரு பஸ் டிரைவர் சீட்டுக்கு பின்னால் ஒரு விளம்பரம் பார்த்தேன் .

அதை யாரோ கலை ஆர்வம்கொண்ட ஒரு சுரண்டல் கலைஞ்ன் மேனக்கட்டும் உங்கார்ந்து ஒருமணி நேரம் சொரண்டிருகான்.

அந்த கலைமாமணி என்ன சொல்லவருதுனு உங்களுக்கு புரியுதா.

இந்த குசும்புல மட்டும் தமிழன யாரும் அசைக்கமுடியாது...... அசைக்கமுடியாது..........


Thursday, November 25, 2010

லிவ்விங் டுகெதர் காலத்தின் கட்டாயம்

v

ஹே நானும் பதிவு எழுத ஆரம்பிச்சுட்டேன் .
நானும் பிரபல பதிவர் ஆகிடவேண்டியதுதான் .

கமிங் டு தி பாயிண்ட் கொஞ்சநாள இந்த மேட்டர் பலபேர் மண்டைய கொடைஞ்சுக்கிட்டு இருக்கு .
நான் மட்டும் என்ன விதிவிலக்கா?
அதான் என் குருவி மண்டைக்கு எட்டியது .

இதை ஆதரிப்பவர்கள் எதிர்பவர்கள் என்று பதிவுலகமே
ரெண்டா பிரிஞ்சுகெடக்கு.

ஆதரிபவர்கள் கருத்து என்னானா தனிமனித உரிமை
அதை தவறு சொல்ல யாருக்கும் அதிகாரம் இல்லை என்பது.

எதிர்பவர்கள் கருத்து என்னனா இது கலாசார சீரழிவு .

இதை அனுமதித்தால் குடும்பம் என்ற கட்டுமானம் சிதைக்கப்படும் என்பது .

சரி நீ என்ன சொல்ல வரணு கேக்றீங்களா?.

சொல்றேன் சொல்றேன் . அதுக்கு தானே வந்திருகோம்.

கலாசாரம் அப்டினா என்ன சார் ?

நம்ம பன்னிக்குட்டி கூட இந்த கேள்விய கேக்குறார்.

இந்தியால ஒரு இடம் இருக்கு சார் ஹிமாலய பக்கதுல மலாங் அப்டின்னு.

அங்க பாருங்க ஒரு குடும்பத்துக்கு ஒரு பொண்ணுதான் கட்டுவாங்க மூத்த பையன் கல்யாணம் பண்ணினால் அவனுக்கு பின்னால் உள்ள அனைவர்க்கும் அந்த பெண் தான் மனைவி.

திருமண செலவு அதிகம் மற்றும் பெண்களின் எண்ணிக்கை குறைவு போன்ற காரணங்களால் காலகாலமாக இந்த

பழக்கத்தை கடைபிடிகிறார்கள் .

இதுவும் இந்தியாலதான் தல நடக்குது.

செக்ஸ் என்பது பொருளாதாரம், மக்கள்தொகை மற்றும் தேவையை பொருத்தது.

உணவு பஞ்சம் வரும்போது திமிங்கலங்கள் எல்லாம் கூட்டம்மாக தற்கொலை செய்வதுபோல.

மக்கள் தொகை குறைவாக இருக்கும்போது பலதார முறை சரியானதீர்வாக இருக்கும்.

அதே நேரத்தில் மக்கள் தொகை அதிகமிருக்கும் போது ஒரு தாரமுறை ஓகே.

மக்கள் தொகை மிக அதிகமாக இருக்கும்போது உளவியல்ரீதியாக திருமணத்தின் மீதான நாட்டம் குறைந்துவிடும்.

அதற்கு கமிட்மென்ட்குள் சிக்க விரும்பாதவர்களின் எண்ணிக்கை அதிகமாவதும் ஒரு காரணமாக இருக்கலாம்.

முன் எப்போதும் இல்லாத அளவிற்கு திருமணத்தின் தேவை இப்போது குறைந்திருக்கு.

கல்யாணம் பன்னாமல் வாழும் ஆண்களின் எண்ணிக்கை. பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு

குழந்தை வளர்க்கும் பொறுப்பை அவர்கள் விரும்பாததும் ஒரு காரணமாக இருக்கலாம்.

ஆண் பெண் உறவு பல்லாயிரம் ஆண்டுகளாக பல பரிமாணம் தாண்டி இந்த நிலையை அடைந்திருகிறது.

இன்னும் அது மாறும். அது தேவைக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்ளும்.

கலாச்சாரத்தில் சரி என்றோ தவறு என்றோ எதுவும் கிடையாது.

சௌகர்யம் அசவ்கரியம் அவ்ளோதான் போன நூற்றாண்டில் உடன்கட்டை ஏறுவதும்.

தேவதாசி முறையும் நியாயம். ஆனா இப்போ அது அநியாயம்.

எல்லாம் மாறும் பாஸ் மாறிக்கிட்டு இருக்கும் வரைதான் கலாசாரம் வாழும்.

இல்லேன்னா பண்டைய எகிப்து கிரேக் கலாசாரம் காலாவதி ஆனமாதிரி ஆகிடும்.

கடைசியா ஒன்னு சொல்றேன்.

தண்ணியும் கலாச்சாரமும் ஒன்னுதான்.

தண்ணிக்கு ஓடி கிட்டிருக்கும் வரைதான் மரியாதை.

ஒருஇடத்தில் நின்றுவிட்டால் அதுக்கு பேரு குட்டை.

ரொம்ப நாள் ஆய்டுச்சினா அதுக்கு பேரு சாக்கடை.

கலாச்சாரமும் புதுமைகளை ஏற்கும்வரை அது உச்சத்தில் இருக்கும்.

நான் இதை நியாய படுத்தவோ அல்லது எதிர்க்கவோ இல்லை.

இது இந்த காலத்தின் தேவையாக கூட இருக்கலாம்.

வலம் போகிறவர்கள் வலம் போகட்டும் இடம் போகிறவர்கள் இடம் போகட்டும்.

அவர் அவர் விருப்பம்.

(அப்புறம் இதுதான் என் முதல் பதிவு ரொம்ப திட்டாதிங்க வலிக்கும் அழுதிருவேன்.)




Popular Posts